பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்* அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு* மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்* குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை* இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி* உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி* பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி* பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்* அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு* விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்* புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்* தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்* தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை* விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி* முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்* இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய* வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்* மன் எல்லாம் முன் அவியச் சென்று* வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்* சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு* எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற* படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்*
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்* புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்* பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.
மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*
நீலக் கருநிற* மேக நியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி* இழந்தது சங்கே.
சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*
செங்கனிவாய்ச்* செய்ய தாமரைக் கண்ணற்கு,*
கொங்கு அலர் தண் அம் துழாய்* முடியானுக்கு,* என்
மங்கை இழந்தது* மாமை நிறமே.
நிறம் கரியானுக்கு* நீடு உலகு உண்ட,*
திறம் கிளர் வாய்ச்* சிறுக் கள்வன் அவற்கு,*
கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்
பிறங்கு இரும் கூந்தல்* இழந்தது பீடே.
பீடு உடை நான்முகனைப்* படைத்தானுக்கு,*
மாடு உடை வையம் அளந்த* மணாளற்கு,*
நாடு உடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்
பாடு உடை அல்குல்* இழந்தது பண்பே.
பண்பு உடை வேதம்* பயந்த பரனுக்கு,*
மண் புரை வையம் இடந்த* வராகற்கு,*
தெண் புனல் பள்ளி* எம் தேவ பிரானுக்கு,* என்
கண்புனை கோதை* இழந்தது கற்பே.
கற்பகக் கா அன* நல் பல தோளற்கு,*
பொன் சுடர்க் குன்று அன்ன* பூந்தண் முடியற்கு,*
நல் பல தாமரை* நாள் மலர்க் கையற்கு,* என்
வில் புருவக்கொடி* தோற்றது மெய்யே.
மெய் அமர் பல்கலன்* நன்கு அணிந்தானுக்கு,*
பை அரவின் அணைப்* பள்ளியினானுக்கு,*
கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்
தையல் இழந்தது* தன்னுடைச் சாயே.
சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*
மாயச் சகடம் உதைத்த* மணாளற்கு,*
பேயைப் பிணம்படப்* பால் உண் பிரானுக்கு,* என்
வாசக் குழலி* இழந்தது மாண்பே .
மாண்பு அமை கோலத்து* எம் மாயக் குறளற்கு,*
சேண் சுடர்க் குன்று அன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*
காண் பெரும் தோற்றத்து* எம் காகுத்த நம்பிக்கு,* என்
பூண் புனை மென்முலை* தோற்றது பொற்பே.
பொற்பு அமை நீள் முடிப்* பூந்தண் துழாயற்கு,*
மல் பொரு தோள் உடை* மாயப் பிரானுக்கு,*
நிற்பன பல் உருவாய்* நிற்கும் மாயற்கு,* என்
கற்பு உடையாட்டி* இழந்தது கட்டே.
கட்டு எழில் சோலை* நல் வேங்கடவாணனைக்,*
கட்டு எழில் தென் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
கட்டு எழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டு எழில் வானவர்* போகம் உண்பாரே.