வாழி திருநாமம்

    தனியன்-1

           வாழித் திருநாமங்கள்   


    • மண்ணுலகத் துள்ளோர்கள் மகிழ்ந்துவாழ
      -- மணவாள மாமுனிகளருள் தன்னாலே
      பண்ணருளிச் செயல்விளக்கம் வாழிநாமம்
      -- பத்தியுடனிவ் வுலகிற்பயில் வார்கேட்பார்
      விண்ணுலகத் தோர்களினுங் கீர்த்தியுற்று
      -- விளங்கியிட மெய்ஞ்ஞான வாழ்வுபெற்றே
      கண்ணனடி யார்களுடன் கலந்துநாளும்
      -- காசினியிற் சதிராகவாழ் வார்தாமே.

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • ஆரண நான்கின் பொருளை ஆழ்வார்கள் ஆய்ந்து அடைவே
      --  யன்புடனே யம்புவியோர் அனைவரும் ஈடேற வென்று
      நாரணனார் தாள்களிலே நாலாயிரம் தமிழால்
      --  நண்ணி யுரை செய்தவற்றை நாடி வகை தொகை செய்தாய்
      பூரண மா ஞானியர் சேர் பொங்கு புகழ்த் தூப்புல் வரும்
      --  புனிதன் என்றும் பிள்ளை என்றும் புவியர் புகழ் வேங்கடவா
      தாரணியோர் இங்கு உகக்கச் சாற்றிய நற் பிரபந்த சாரம்
      --  தனை யுரைத்து வாழு மனம் தந்து அருளாய் என் தனக்கே –1–


    தனியன்-2

           வாழித் திருநாமங்கள்   


    • வேதத்தின் நுண்பொருளைத் தமிழால் நாளும்
      --  விளக்கியிடப் பன்னிருவர் வந்து தோன்றும்
      மாதத்தை அவரவர்க ளுதித்த நாளை
      --  வாழ்பதியைக் கலைத்தொகையை மனதில் வைத்துப்
      போதத்தைத் தருந்தமிழால் வாழி நாமம்
      --  பூதலத்திற் பேசுகின்றே னிதனைக் கற்பார்
      பாதத்தை யென்முடிமேல் அணியாப் பூண்டு
      --  பன்னாளுங் கைகூப்பிப் பணிவேன் யானே

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • ஆதி மறை யோதி மகிழ அயக்கிரிவர் தம் அருளால்
      --  அன்புடனே தூப்புல் நகர் அவதரித்தே இங்கு வந்த
      வாதியரை வென்று உவந்து வன் புவி மேல் எதிராசர்
      --  வாழ்வுறு நல் தரிசனத்தை வண்மை யுடனே வளர்த்து
      நீதி நெறி தவறாமல் நிறுத்தியிடும் வேங்கடவா
      --  நேசமுடன் ஆழ்வார்கள் நிலைகளை எல்லாம் உணர்ந்து
      சாது சனம் வாழ என்று சாற்றிய நற் பிரபந்த சாரம்
      --  தனை யுரைத்து வாழும் மனம் தந்து அருளாய் என் தனக்கே –2-


    ஆழ்வார்கள் பொது வாழி

           வாழித் திருநாமங்கள்   


    • போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
      புகழ்பேயார் மழிசையர்கோன் புத்தூரன் வாழியே
      நாதமுனி தொழுங்குருகை நாவீறன் வாழியே
      நற்பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
      ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே
      அருட்கலியன் மதுரகவி யாண்டாளும் வாழியே
      ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே
      இவருதித்த நாள்மாத மெழிற்பதியும் வாழியே.

           உபதேசரத்தினமாலை  


    • 3)  
      ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
      தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
      உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
      செய்யமறை தன்னுடனே சேர்ந்து

      4)  
      பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
      அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
      நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
      ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு

      5)  
      அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
      இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
      மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
      ஈதென்று சொல்லுவோமி யாம்.

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • ஆழ்வார்கள் அவதரித்த நாளூர் திங்கள்
      --  அடைவு திரு நாமங்கள் அவர் தாம் செய்த
      வாழ்வான திரு மொழிகள் அவற்றுள் பாட்டின்
      --  வகையான தொகை இலக்கம் மற்றும் எல்லாம்
      வீழ்வாக மேதினி மேல் விளங்க நாளும்
      --  விரித்து உரைக்கும் கருத்துடனே மிக்கோர் தங்கள்
      நீள் பாதம் நிரந்தரமும் தொழுது வாழ்த்து
      --  நேசமுடன் அடியேன் தன் நெஞ்சு தானே –1–


    பொய்கையாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • [1]
      "செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே
      திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
      வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
      வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
      வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
      வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
      பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
      பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


    • "6)  
      ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
      ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
      பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
      தேசுடனே தோன்று பிறப்பால்
       
      7)  
      மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
      நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
      என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
      நின்றது உலகத்தே நிகழ்ந்து
       
      (முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)
       
      எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
      வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
      தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
      ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
      (பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
      திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "அருள் மிகுந்ததொரு வடிவாய்க் கச்சி தன்னில்
      --  ஐப்பசி மாதத் திரு வோணத்து நாளில்
      பொருள் மிகுந்த மறை விளங்கப் புவியோர் உய்யப்
      --  பொய்கை தனில் வந்து உதித்த புனிதா முன்னாள்
      இருள் அதனில் தண் கோவல் இடைகழிச் சென்று
      --  இருவருடன் நிற்கவும் மால் இடை நெருக்கத்
      திரு விளக்காம் எனும் வையம் தகளி நூறும்
      --  செழும் பொருளா வெனக்கு அருள் செய் திருந்த நீயே –2-"

    பூதத்தாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "அன்பே தகளிநூறும் அருளினான் வாழியே
      ஐப்பசியி லவிட்டத்தி லவதரித்தான் வாழியே
      நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
      நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
      இன்புருகு சிந்தைதிரி யிட்டபிரான் வாழியே
      எழின்ஞானச் சுடர்விளக்கை யேற்றினான் வாழியே
      பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
      பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே. (2)"

           உபதேசரத்தினமாலை  


    • "6)  
      ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
      ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
      பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
      தேசுடனே தோன்று பிறப்பால்
       
      7)  
      மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
      நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
      என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
      நின்றது உலகத்தே நிகழ்ந்து
       
      (முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)
       
      எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
      வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
      தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
      ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
      (பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
      திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "கடல் மல்லைக் காவலனே பூத வேந்தே
      --  காசினி மேல் ஐப்பசியில் அவிட்ட நாள் வந்து
      இடர் கடியும் தண் கோவல் இடை கழிச் சென்று
      --  இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்க
      நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம் 
      --  நள்ளிருளில் மால் நெருக்க நந்தா ஞானச்
      சுடர் விளக்கு ஏற்றி யன்பே தகளியான
      --  தொடை நூறும் எனக்கு அருள் துலங்க நீயே –3-"

    பேயாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "திருக்கண்டே னெனநூறுஞ் செப்பினான் வாழியே
      சிறந்தஐப் பசிசதயம் செனித்தவள்ளல் வாழியே
      மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
      மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
      நெருங்கிடவே யிடைகழியில் நின்றசெல்வன் வாழியே
      நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
      பெருக்கமுடன் திருமழிசைப் பிரான்தொழுவோன் வாழியே
      பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே. (3)"

           உபதேசரத்தினமாலை  


    • "6)  
      ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
      ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
      பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
      தேசுடனே தோன்று பிறப்பால்
       
      7)  
      மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
      நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
      என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
      நின்றது உலகத்தே நிகழ்ந்து
       
      (முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)
       
      எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
      வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
      தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
      ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
      (பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
      திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "மா மயிலைப் பதி யதனில் துலா மாதத்தில்
      --  அரும் சதயத்து வவதரித்துக் கோவலூரில்
      தூ முனிவர் இருவருடன் துலங்க நின்று
      --  துன்னிய பேர் இருள் நீங்கச் சோதி தோன்றச்
      சேமமுடன் நெடுமாலைக் காணப் புக்குத்
      --  திருக் கண்டேன் என வுரைத்த தேவே யுன் தன
      பா மருவு தமிழ் மாலை நூறு பாட்டும்
      --  பழ வடியேன் எனக்கு அருள் செய் பரம நீயே –4-"

    திருமழிசைப்பிரான்

           வாழித் திருநாமங்கள்   


    • "அன்புடனந்தாதி தொண்ணூற் றாறுரைத்தான் வாழியே
      அழகாருந் திருமழிசை யமர்ந்தசெல்வன் வாழியே
      இன்பமிகு தையில்மகத் திங்குதித்தான் வாழியே
      எழிற்சந்த விருத்தம்நூற் றிருபதீந்தான் வாழியே
      முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
      முழுப்பெரு்ககில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
      நன்புவியில் நாலாயிரத் தெழுநூற்றான் வாழியே
      நங்கள் பத்திசாரனிரு நற்பதங்கள் வாழியே. (4)"

           உபதேசரத்தினமாலை  


    • "12)  
      தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
      தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி
      பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
      நற்றவர்கள் கொண்டாடும் நாள்
       
      (திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)
       
      மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
      மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்
      ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்
      வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)
      (திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "தைம்மகத்தில் வரு மழிசைப் பரனே மற்றைச்
      --  சமயங்கள் பல தெரிந்து மாயோன் அல்லால்
      தெய்வம் மாற்றி இல்லை என வுரைத்த வேதச்
      --  செழும் பொருள் நான்முகன் தொண்ணூற்றாறு பாட்டு
      மெய்ம்மிகுத்த திருச் சந்த விருத்தப் பாடல்
      --  விளங்கிய நூற்று இருபதும் தப்பாமல் மெய்யே
      வையகத்து மறவாமல் உரைத்து வாழும்
      --  வகை யடியேனுக்கு அருள் செய் மகிழ்ந்து நீயே -5-"

    நம்மாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "ஆனதிரு விருத்தநூறும் அருளினான் வாழியே
      ஆசிரிய மேழுபாட் டளித்த பிரான் வாழியே
      ஈனமறவந் தாதியெண்பத் தேழீந்தான் வாழியே
      இலகுதிருவாய் மொழியாயிர முரைத்தான் வாழியே
      வானணியுமா மாடக்குருகை மன்னன் வாழியே
      வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
      சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
      திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே (5)"

           உபதேசரத்தினமாலை  


    • "14)  
      ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
      பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
      வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
      நாதன் அவதரித்த நாள்
       
      15)  
      உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
      உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
      திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
      ஒரு பார் தனில் ஒக்கு மூர்
       
      (திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)
       
      மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
      மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்
      ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்
      வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)
      (திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "முன்னுரைத்த திருவிருத்த நூறு பாட்டும்
      --  முறையின் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும் 
      மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
      --  மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
      பின்புரைத்த தோர் திருவாய் மொழி எப்போதும்
      --  பிழை யற வாயிரத்து ஒரு நூற்று இரண்டு பாட்டும்
      இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்
      --  எழில் குருகை வருமாறா விரங்கு நீயே –6- "

    குலசேகரப் பெருமாள்

           வாழித் திருநாமங்கள்   


    • "அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியே
      அணியரங்கர் மணத்தூணை யடைந்துய்ந்தோன் வாழியே
      வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
      மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
      அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே
      அநவரத மிராமகதை அருளுமவன் வாழியே
      செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
      சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (6)"

           உபதேசரத்தினமாலை  


    • "13)  
      மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்
      தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்
      கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
      நல்லவர்கள் கொண்டாடும் நாள்
       
      (தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார்)
       
      தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர்
      மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும்
      ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர்
      வாய்த்த திருவஞ்சிக் களம். (31)
      (தொண்டரடிப்பொடியாழ்வார்- மண்டங்குடி: குலசேகராழ்வார்- திருவஞ்சிக்களம்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "பொன் புரையும் வேல் குல சேகரனே மாசிப்
      --  புனர்பூசத்து எழில் வஞ்சிக் களத்துத் தோன்றி
      யன்புடனே நம்பெருமாள் செம் பொற் கோயில்
      --  அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள்
      இன்பமிகு பெரும் குழுவும் காண மண் மேல்
      --  இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்ன 
      நன்பொருள் சேர் திரு மொழி நூற்றைந்து பாட்டு
      --  நன்றாக வெனக்கு அருள் செய் நல்கி நீயே –8-"

    பட்டர்பிரான்/பெரியாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
      நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
      சொல்லரிய வாணிதனிற் சோதிவந்தான் வாழியே
      தொடைசூடிக் கொடுத்தாள்தான் தொழுந்தமப்பன் வாழியே
      செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
      சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
      வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
      வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே. (7)"

           உபதேசரத்தினமாலை  


    • "16)  
      இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
      இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
      பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
      நல்லானியில் சோதி நாள்
      17)  
      மாநிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
      ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும் - ஞானியருக்கு
      ஒப்பொருவர் இல்லை இவ்வுலகுதனில் என்று நெஞ்சே
      எப்பொழுதும் சிந்தித்திரு
      18)  
      மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
      தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்
      பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
      பெரியாழ்வார் என்னும் பெயர்
      19)  
      கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
      ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
      ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
      தான் மங்களம் ஆதலால்
      20)  [ ஒப்பிலா உயர்வு ]
      உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
      உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
      செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
      பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
      21)  
      ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
      வாழ்வார் எதிராசர் ஆமிவர்கள் - வாழ்வாக
      வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
      இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்
       
      (திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)
       
      மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
      மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்
      ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்
      வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)
      (திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆணி தன்னில்
      --  பெரும் சோதி தனில் தோன்றும் பெருமானே முன்
      சீர் அணிந்த பாணியன் தன் நெஞ்சு தன்னில்
      --  தியக்கு அற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி 
      வாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில்
      --  மால் கருட வாகனனாய்த் தோன்ற வாழ்த்தும்
      ஏர் அணி பல்லாண்டு முதல் பாட்டு நானூற்று
      --  எழுபத்து ஓன்று இரண்டும் எனக்கு உதவு நீயே –9"

    தொண்டரடிப்பொடியாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியே
      மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
      தெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
      திருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியே
      பண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
      பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
      தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
      தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே (8)"

           உபதேசரத்தினமாலை  


    • "
      11)  
      மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
      என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்
      மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
      நான்மறையோர் கொண்டாடும் நாள்
       
      (தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார்)
       
      தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர்
      மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும்
      ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர்
      வாய்த்த திருவஞ்சிக் களம். (31)
      (தொண்டரடிப்பொடியாழ்வார்- மண்டங்குடி: குலசேகராழ்வார்- திருவஞ்சிக்களம்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "மன்னு மதிள் திரு மண்டங்குடி தான் வாழ
      --  மார்கழி மாதக் கேட்டை நாளில் வந்து
      துன்னு புகழ்த் தொண்டர் அடிப் பொடியே நீ முன்
      --  துழாய் மாலைப் பணி யடிமை செய்து நாளும்
      தென்னரங்க மணவாளற்கு அன்பு மிக்குச்
      --  செப்பிய நல் திரு மாலை நாற்பத் தைந்தும்
      பன்னிய நல் திருப் பள்ளி எழுச்சி பத்தும்
      --  பழ வடியேனுக்கு அருள் செய் பரிந்து நீயே –11-"

    திருப்பாணாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • (9)
      "உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியே
      உரோகிணிநாள் கார்த்திகையி லுதித்தவள்ளல் வாழியே
      வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
      மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
      அம்புவியில் மதிளரங்க ரகம்புகுந்தான் வாழியே
      அமலனாதி பிரான்பத்து மருளினான் வாழியே
      செம்பதுமை யருள்கூரும் செல்வனார் வாழியே
      திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே"
       
       

           உபதேசரத்தினமாலை  


    • "10)  
      கார்த்திகையில் ரோகினி நாள் காண்மினின்று காசினியீர்
      வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்
      அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதர்பின்
      நன்குடனே கொண்டாடும் நாள்
       
      (முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)
       
      எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
      வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
      தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
      ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
      (பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
      திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "உலகு அறிய மலி புகழ்க் கார்த்திகை மாதத்தில்
      --  உரோகிணி நால் உறைந்த வளம் பதியில் தோன்றிப் 
      தலம் அளந்த தென்னரங்கர் பால் உலோக
      --  சாரங்க மா முனி தோள் தனிலே வந்து
      பல மறையின் பொருளால் பாண் பெருமாளே நீ 
      --  பாதாதி கேசமதாய்ப் பாடித்தந்த
      சொல் வமலன் ஆதி பிரான் பத்துப் பாட்டும்
      --  சோராமல் எனக்கு அருள் செய் துலங்க நீயே –12–"

    கலியன்

           வாழித் திருநாமங்கள்   


    • "கலந்திருக் கார்த்திகைக்கார்த் திகைவந்தோன் வாழியே
      காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
      நலந்திக ழாயிரத்தெண் பத்துநாலுரைத் தோன்வாழியே
      நாலைந்து மாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
      இலங்கெழுகூற் றிருக்கையிரு மடலீந்தான் வாழியே
      இம்மூன்றி லிருநூற்று மூவொன்பான் வாழியே
      வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
      வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே. (10)"

           உபதேசரத்தினமாலை  


    • "8)  
      பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
      ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்
      வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
      கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்
       
      9)  
      மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
      ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
      கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
      வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து
       
      (முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)
       
      எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
      வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
      தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
      ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
      (பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
      திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "அறிவு தரும் பெரிய திருமொழி தப்பாமல்
      --  ஆயிரத்து எண்பத்து நீலு பாட்டும்
      குறிய தொரு தாண்டகம் நாலு ஐந்தும் ஆறு ஐந்தும்
      --  குலா நெடும் தாண்டகம் எழு கூற்று இருக்கை ஒன்றும்
      சிறிய மடல் பாட்டு முப்பத்து எட்டு இரண்டும் 
      --  சீர் பெரிய மடல் தனில் பாட்டு எழுபத்து எட்டும்
      இறையவனே கார்த்திகையில் கார்த்திகை நால்
      --  எழில் குரையல் வரு கலியா விரங்கு நீயே –13-"

    மதுரகவியாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
      திருக்கோளூ ரவதரித்த செல்வனார் வாழியே
      உத்தரகங் காதீரத் துயர்தவத்தோன் வாழியே
      ஒளிகதிரோன் தெற்குதிக்க வுகந்துவந்தோன் வாழியே
      பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
      பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
      மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
      மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே. (11)"

           உபதேசரத்தினமாலை  


    • "25)  
      ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
      சீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்
      மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
      உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்
       
      26)  
      வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
      சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்
      ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
      சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து
       
      (ஆண்டாள், மதுரகவிகள்)
       
      சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
      ஏராரும் பெரும்பூதூ ரென்னுமிவை- பாரில்
      மதியாரு மாண்டாள் மதுரகவி யாழ்வார்
      எதிராசர் தோன்றியவூ ரிங்கு. (33)
      (ஆண்டாள்- திருவில்லிபுத்தூர்: மதுரகவியாழ்வார்- திருக்கோளூர்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "தேறிய ஞானமுடன் திருக் கோளூரில்
      --  சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
      ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு 
      --  அநவரதம் அந்தரங்க வடிமை செய்து
      மாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு
      --  மற்று அறியேன் எனும் மதுர கவியே நீ முன் 
      கூறிய கண்ணி நுண் சிறுத் தாம்பு அதனில் பாட்டுக்
      --  குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே –7–"

    ஆண்டாள்/கோதைநாச்சியார்

           வாழித் திருநாமங்கள்   


    • "திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
      திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
      பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
      பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
      ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
      உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே
      மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
      வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. (12)"

           உபதேசரத்தினமாலை  


    • "22)  
      இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
      அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
      வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
      ஆழ்வார் திருமகளாராய்
       
      23)  
      பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
      திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
      குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்
      உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு
       
      24)  
      அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
      தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
      பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
      வழுத்தாய் மனமே மகிழ்ந்து
       
      (ஆண்டாள், மதுரகவிகள்)
       
      சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
      ஏராரும் பெரும்பூதூ ரென்னுமிவை- பாரில்
      மதியாரு மாண்டாள் மதுரகவி யாழ்வார்
      எதிராசர் தோன்றியவூ ரிங்கு. (33)
      (ஆண்டாள்- திருவில்லிபுத்தூர்: மதுரகவியாழ்வார்- திருக்கோளூர்.)"

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "வேயர் புகழ் வில்லி புத்தூர் ஆடிப் பூரம்
      --  மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்
      தூய திரு மகளாய் வந்து அரங்கனார்க்குத்
      --  துழாய் மாலை முடி சூடிக் கொடுத்த மாதே
      நேயமுடன் திருப்பாவைப் பாட்டு ஆறைந்து
      --  நீ யுரைத்த தையொரு திகள் பா மாலை
      யாய புகழ் நூறு உடன் நால் பத்தும் மூன்றும்
      --  அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே –10-"

    பெரிய பெருமாள்

           வாழித் திருநாமங்கள்   


    • "திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
      செய்யவிடைத் தாய் மகளார் சேவிப்போன் வாழியே
      இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
      இடர் கடியப் பாற்கடலை ஏய்தினான் வாழியே
      அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
      அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
      பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
      பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    பெரிய பிராட்டியார்

           வாழித் திருநாமங்கள்   


    • "பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
      பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தாள் வாழியே
      மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே
      மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
      எங்கள் எழிற் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
      இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
      செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
      சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    சேனை முதலியார்

           வாழித் திருநாமங்கள்   


    • "ஓங்கு துலாப் பூராடத்துதிச் செல்வன் வாழியே
      ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
      ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே
      எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
      பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
      பங்கயத் தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
      தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
      சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    நம்மாழ்வார்

           வாழித் திருநாமங்கள்   


    • "மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
      வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
      ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியே
      அனவரதம் சேனையர் கோன் அடி தொழுவோன் வாழியே
      நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
      நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
      மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
      மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    ஸ்ரீமந் நாதமுனிகள்

           வாழித் திருநாமங்கள்   


    • "ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
      ஆளவன்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
      பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
      பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
      கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
      கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
      நானிலத்தில் குரு வரையை நாட்டினான் வாழியே
      நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    உய்யக்கொண்டார்

           வாழித் திருநாமங்கள்   


    • "வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
      மால் மணக்கால் நம்பி தொழும் மலப்பதத்தோன் வாழியே
      சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
      சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
      நாலிரண்டும் ஐயைன்தும் நமக்குரைத்தான் வாழியே
      நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
      மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
      வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    மணக்கால் நம்பி

           வாழித் திருநாமங்கள்   


    • "தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
      தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
      தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
      தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
      நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
      நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
      மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
      மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    ஸ்ரீ ஆளவந்தார்

           வாழித் திருநாமங்கள்   


    • "மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே
      மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
      பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே
      பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
      கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வழியே
      கடக உத்தராடத்துக் காலுதித்தோன் வாழியே
      அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
      ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    பெரிய நம்பிகள்

           வாழித் திருநாமங்கள்   


    • "அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
      ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ன்தோன் வாழியே
      உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
      ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே
      வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
      மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
      எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே
      எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    திருக்கச்சி நம்பிகள்

           வாழித் திருநாமங்கள்   


    • "மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
      மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
      அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
      ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
      திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
      தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
      தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
      திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    எம்பெருமானார்

           வாழித் திருநாமங்கள்   


    • "அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
      அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
      பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
      பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
      சுத்த மகிழ் மாறன் அடி தொழுதுய்ந்தோன் வாழியே
      தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
      சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
      சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


    • "27)  
      இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்
      என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்
      சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்
      நாற்றிசையும் கொண்டாடும் நாள்
       
      28)  
      ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
      வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
      உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
      செய்ய திருவாதிரை
       
      29)  
      எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா
      வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்
      திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
      ஒருவாமல் எப்பொழுதும் ஓர்
       
       (37)எம்பெருமானாரின் ஏற்றம்
      ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர்
      ஏரா ரெதிராச ரின்னருளால்- பாருலகில்
      ஆசை யுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று
      பேசி வரம்பறுத்தார் பின்.
      (38)எம்பெருமானார் தரிசனம் என்று வழங்கக் காரணம்
      எம்பெருமானார் தரிசனமென்றே யிதற்கு
      நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்- அம்புவியோர்
      இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
      அந்தச் செயலறிகைக் கா. "

           ஸ்ரீ பிரபந்த சாரம்             


    • "பற்பமெனத்திகழ் பைங்கழலும் தண் பல்லவமே விரலும்
       
      பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
       
      முப்புரிநூலொடு முன்கையிலேந்திய  முக்கோல் தன்னழகும்
       
      முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
       
      கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்
       
      காரி சுதன்கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
       
      எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
       
      இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே"

    எம்பெருமானார்

           வாழித் திருநாமங்கள்   


    • "எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
      எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்குரைத்தான் வாழியே
      பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
      பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
      தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
      தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
      தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
      சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    எம்பெருமானார்

           வாழித் திருநாமங்கள்   


    • "சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
      திருவரையில் சாத்திய சென்துவராடை வாழி
      ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
      இலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழி
      சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
      தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
      ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
      இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    எம்பெருமானார்

           வாழித் திருநாமங்கள்   


    • "அறு சமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
      அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
      செறு கலியைச் சிறிதுமறத் தீர்த்து விட்டான் வாழியே
      தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
      மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
      மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
      அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
      அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    "எம்பெருமானார் - திருநாள் பாட்டு"

           வாழித் திருநாமங்கள்   


    • "சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
      சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
      வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
      மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
      மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
      மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
      செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
      சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    கூரத்தாழ்வான்

           வாழித் திருநாமங்கள்   


    • "சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே
      தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
      பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
      பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
      நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
      நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
      ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே
      எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    முதலியாண்டான்

           வாழித் திருநாமங்கள்   


    • "அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
      அருட்பச்சை வரணத்தில் அவதரித்தான் வாழியே
      சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே
      சீபாடியம் ஈடு முதல் சீர் பெருவோன் வாழியே
      உத்தமமாம் வாதூலம் உயர வந்தோன் வாழியே
      ஊர் திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
      முத்திரையும் செங்கோலும் முடி பெறுவோன் வாழியே
      முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    திருவரங்கத்தமுதனார்

           வாழித் திருநாமங்கள்   


    • "எந்தாதை கூரேசர் இணை அடியோன் வாழியே
      எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே
      நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே
      நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
      பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே
      பங்குனியில் அத்த நாள் பார் உதித்தோன் வாழியே
      அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
      அணி அரங்கத்தமுதனார் அடியிணைகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    எம்பார்

           வாழித் திருநாமங்கள்   


    • "பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
      பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருள் உரைப்போன் வாழியே
      மாவளரும் பூதூரான் மலர்ப் பதத்தோன் வாழியே
      மகரத்தில் புனர்புசம் வந்துதித்தோன் வாழியே
      தேவும் எப்பொருளு படைக்கத் திருந்தினான் வாழியே
      திருமலை நம்பிக்கு அடிமை செய்யுமவன் வாழியே
      பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
      பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    பட்டர்

           வாழித் திருநாமங்கள்   


    • "தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்க வந்தோன் வாழியே
      திருநெடுன்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
      அன்னவயல் பூதூரான் அடி பணிந்தோன் வாழியே
      அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
      மன்னு திருக்கூரனார் வளம் உரைப்போன் வாழியே
      வைகாசி அனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
      பன்னு கலை நால்வேதப் பயன் தெரிவோன் வாழியே
      பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    நஞ்ஜீயர்

           வாழித் திருநாமங்கள்   


    • "தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
      சீமாதவன் என்னும் செல்வனார் வாழியே
      பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
      பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தான் வாழியே
      ஒண்டொடியாள் கலவி தன்னை ஒழித்திட்டான் வாழியே
      ஒன்பதினாயிரப் பொருளை ஓதுமவன் வாழியே
      எண்டிசையும் சீர் பட்டர் இணை அடியோன் வாழியே
      எழில் பெருகும் நஞ்ஜீயர் இனிதூழி வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    நம்பிள்ளை

           வாழித் திருநாமங்கள்   


    • "தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
      திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே
      தாமம் அணி வட மார்வும் புரி னூலும் வாழியே
      தாமரைக் கை இணை அழகும் தடம் புயமும் வாழியே
      பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே
      பாடியத்தின் பொருள் தன்னைப் பகர் நாவும் வாழியே
      நாம நுதல் மதி முகமும் திருமுடியும் வாழியே
      நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
       
      காதலுடன் நன்ஜீயர் கழல் தொழுவோன் வாழியே
      கார்த்திகைக் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே
      போதமுடன் ஆழ்வார் சொல் பொருள் உரைப்போன் வாழியே
      பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
      மாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
      மதிள் அரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
      நாதமுனி ஆளவந்தார் நலம் புகழ்வோன் வாழியே
      நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    வடக்குத் திருவீதிப் பிள்ளை

           வாழித் திருநாமங்கள்   


    • "ஆனி தனில் சோதி நன்னாள் அவதரித்தான் வாழியே
      ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
      தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
      சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே
      நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
      நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே
      ஈனமற எமை ஆளும் இறைவனார் வாழியே
      எங்கள் வடவீதிப் பிள்ளை இணை அடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    பிள்ளை லோகாசார்யர்

           வாழித் திருநாமங்கள்   


    • "அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
      ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே
      முத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
      மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
      நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்ஜில் வைப்போன் வாழியே
      நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
      உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே
      உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    கூர குலோத்தம தாசர்

           வாழித் திருநாமங்கள்   


    • "சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
      தாரணியில் சிறுநல்லூர் தான் உடையோன் வாழியே
      எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
      இலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியே
      இந்த உலகோர்க்கு இதம் உரைத்தோன் வாழியே
      எழில் வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
      குன்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
      கூர குலோத்தம தாசர் குரை கழல்கள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    திருவாய்மொழிப் பிள்ளை

           வாழித் திருநாமங்கள்   


    • "வையகமெண் சடகோபன் மறை வளர்த்தோன் வாழியே
      வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
      ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
      அழகாரும் எதிராசர் அடி பணிவோன் வாழியே
      துய்ய உலகாரியன் தன் துணைப் பதத்தோன் வாழியே
      தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
      தெய்வ நகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
      திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகள் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    மணவாள மாமுனிகள்

           வாழித் திருநாமங்கள்   


    • "இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
      எழில் திருவாய்மொழிப் பிள்ளை இணை அடியோன் வாழியே
      ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
      அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே
      எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
      ஏராரும் எதிராசர் என உதித்தான் வாழியே
      முப்புரி நூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே
      மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்             



    மணவாள மாமுனிகள் - திருநாள் பாட்டு

           வாழித் திருநாமங்கள்   


    • "செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
      சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடு நாள்
      மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள்
      மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
      கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
      காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
      அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
      அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அதெநு நாளே"

           உபதேசரத்தினமாலை  


           ஸ்ரீ பிரபந்த சாரம்