பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.
அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.
பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை உள்ளில் ஒடுங்கே.
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும் பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.
எண் பெருக்கு அந் நலத்து* ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்* திண் கழல் சேரே.
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
எளிவரும் இயல்வினன்* நிலை வரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரும் முழு நலம்* முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.
அமைவு உடை அறநெறி* முழுவதும் உயர்வு அற உயர்ந்து*
அமைவு உடை முதல் கெடல்* ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
அமைவு உடை அமரரும்* யாவையும் யாவரும் தான் ஆம்*
அமைவு உடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு அரிய எம் பெருமான்*
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு எளிய எம் பெருமான்*
பேரும் ஓர் ஆயிரம்* பிறபல உடைய எம் பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளது இல்லை இலது இல்லை பிணக்கே.
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர் சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்துஆய் முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன் பெருமை* மாசூணாதோ? மாயோனே!
மா யோனிகளாய் நடை கற்ற* வானோர் பலரும் முனிவரும்*
நீ யோனிகளைப் படை என்று* நிறை நான்முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்* தான் ஓர் உருவனே.
தான் ஓர் உருவே தனிவித்தாய்* தன்னின் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மா மாயன்* வைகுந்தன் எம் பெருமானே.
மானேய் நோக்கி மடவாளை* மார்பில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டை வில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வான் ஆர் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே.
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனை சேர் ஆயர் குல முதலே!* மா மாயனே! மாதவா!*
சினை ஏய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய் இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே.
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடி சேர் தண் அம் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
செடி ஆர் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
உண்டாய் உலகு ஏழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்* உவலை ஆக்கை நிலை எய்தி*
மண் தான் சோர்ந்தது உண்டேலும்* மனிசர்க்கு ஆகும் பீர்* சிறிதும்-
அண்டாவண்ணம் மண் கரைய* நெய் ஊண் மருந்தோ? மாயோனே!
மாயோம் தீய அலவலைப்* பெரு மா வஞ்சப் பேய் வீயத்*
தூய குழவியாய் விடப் பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன் வானோர் தனித் தலைவன்* மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்-
தாயோன் தம்மான் என் அம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து* மாயப் பற்று அறுத்து*
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்* திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி* அகலம் கீழ் மேல் அளவு இறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே!
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மதுவார் தண் அம் துழாயான்* முது வேத முதலவனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆள் செய்யும் ஈடே
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.
அணங்கு என ஆடும் என் அங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே*
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.
அமுதம் அமரர்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர் திரை நீள் கடலானே.
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்* தோள்கள் தலை துணிசெய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள்கள் தலைக்கழிமின்னே.
கழிமின் தொண்டீர்கள் கழித்துத்* தொழுமின் அவனை தொழுதால்*
வழி நின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.
தரும அரும் பயன் ஆய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினை கடிவாரே.
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடு புள் உயர்த்த* வடிவு ஆர் மாதவனாரே.
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
வைப்பாம் மருந்து ஆம்* அடியரை வல்வினைத்*
துப்பாம் புலன் ஐந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்* நலத்தால் உயர்ந்து உயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர் கொழுந்தே.
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப் பிரானை* என் மாணிக்கச் சோதியை,*
தூய அமுதைப்* பருகிப் பருகி,* என்-
மாயப் பிறவி* மயர்வு அறுத்தேனே.
மயர்வு அற என் மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையே தரும்* ஒண் சுடர்க் கற்றையை,*
அயர்வு இல் அமரர்கள்,* ஆதிக் கொழுந்தை,* என்
இசைவினை* என் சொல்லி யான் விடுவேனோ?
விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,*
நடுவே வந்து* உய்யக் கொள்கின்ற நாதனை,*
தொடுவே செய்து* இள ஆய்ச்சியர் கண்ணினுள்,*
விடவே செய்து* விழிக்கும் பிரானையே.
பிரான்* பெரு நிலம் கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரான் எனில்* பின்னை யான் ஒட்டுவேனோ?
யான் ஒட்டி என்னுள்* இருத்துவன் என்றிலன்,*
தான் ஒட்டி வந்து* என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊன் ஒட்டி நின்று* என் உயிரில் கலந்து,* இயல்
வான் ஒட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.
என்னை நெகிழ்க்கிலும்* என்னுடை நன் நெஞ்சம்-
தன்னை,* அகல்விக்கத் தானும்* கில்லான் இனி,*
பின்னை நெடும் பணைத் தோள்* மகிழ் பீடு உடை,*
முன்னை அமரர்* முழுமுதல் தானே.
அமரர் முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுது ஈந்த* ஆயர் கொழுந்தை,*
அமர அழும்பத்* துழாவி என் ஆவி,*
அமரத் தழுவிற்று* இனி அகலும்மோ.
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொரு அல்லன் எம்மான்,*
நிகர் இல் அவன் புகழ்* பாடி இளைப்பு இலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
அம்மானாய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம் மா வாய் கீண்ட,* செம்மா கண்ணனே.
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
கலந்து என் ஆவி,* நலம்கொள்நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம்கொண்டானே.
கொண்டான் ஏழ் விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண் தாமம் செய்து,* என் எண்தானானானே.
ஆனான் ஆன் ஆயன்,* மீனோடேனமும்;*
தான் ஆனான் என்னில்,* தானாயசங்கே.
சங்கு சக்கரம்,* அங்கையில் கொண்டான்,*
எங்கும் தானாய,* நங்கள் நாதனே.
நாதன்ஞாலம்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.
உடன் அமர் காதல் மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மட மகள் என்று இவர் மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடன் அவை ஒக்க விழுங்கி* ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல் மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலையானே.
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச்,
செக்கம் செக அன்று அவள்பால்* உயிர் செக உண்ட பெருமான்,*
நக்க பிரானோடு அயனும்* இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என் நெஞ்சின் உளானே.
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்* சுடர் முடி மேலும்,*
தாள் இணை மேலும் புனைந்த* தண் அம் துழாய் உடை அம்மான்*
கேள் இணை ஒன்றும் இலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாள் அணைந்து ஒன்றும் அகலான்* என்னுடை நாவின் உளானே.
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால் தொழில்,*
எண்ணிலும் வரும்* என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும் நல் வாயுவும்*
விண்ணும் ஆய் விரியும்* எம் பிரானையே.
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே.
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர்கண்டாய்.
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,* ஓர்
எண் தானும் இன்றியே* வந்து இயலுமாறு,*
உண்டானை* உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக்,* கண்டுகொண்டனை நீயுமே.
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்.
நோயும் சார்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும் தந்தையும் ஆய்* இவ் உலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.
எந்தையே என்றும்* எம் பெருமான் என்றும்,*
சிந்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.
செல்வ நாரணன் என்ற* சொல் கேட்டலும்,*
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடு இன்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேண் பட்டயாமங்கள்* சேராது இரங்குதியால்,*
ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,*
தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீ முற்றக் கண்துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே
கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,*
அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,*
உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே.
ஊழிதோறு ஊழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும் போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையில் பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.
நைவாய எம்மேபோல்* நாள் மதியே நீ இந் நாள்,*
மை வான் இருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐ வாய் அரவு அணைமேல்* ஆழிப் பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
தோற்றோம் மட நெஞ்சம்* எம் பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனை ஊழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்து நொந்தாயே.
நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,*
அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே.
வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மா வாய் பிளந்து* மருதிடை போய் மண் அளந்த,*
மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏ பாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈ பாவம் செய்து* அருளால் அளிப்பார் ஆர்,*
மா பாவம் விட* அரற்குப் பிச்சை பெய்,*
கோபால கோளரி* ஏறு அன்றியே.
ஏறனை பூவனை* பூமகள் தன்னை,*
வேறுஇன்றி விண் தொழத்* தன்னுள் வைத்து,*
மேல் தன்னை மீதிட* நிமிர்ந்து மண் கொண்ட.*
மால் தனின் மிக்கும் ஓர்* தேவும் உளதே.
தேவும் எப் பொருளும் படைக்கப்,*
பூவில் நான்முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே.
தகும் சீர்த்* தன் தனி முதலினுள்ளே,*
மிகும் தேவும்* எப் பொருளும் படைக்கத்,*
தகும் கோலத்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
மிகும் சோதி* மேல் அறிவார் எவரே.
எவரும் யாவையும்* எல்லாப் பொருளும்,*
கவர்வு இன்றித்* தன்னுள் ஒடுங்க நின்ற,*
பவர் கொள் ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம் ஆழி* அம் பள்ளியாரே,
பள்ளி ஆல் இலை* ஏழ் உலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள் உள் ஆர் அறிவார்* அவன் தன்,*
கள்ள மாய* மனக்கருத்தே.
கருத்தில் தேவும்* எல்லாப் பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரான் அன்றி,* யாரே
திருத்தித்* திண் நிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக்* காக்கும் இயல்வினரே.
காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,*
சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே.
கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின்
உள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.
ஊனில் வாழ் உயிரே* நல்லை போ உன்னைப் பெற்று,*
வான் உளார் பெருமான்* மதுசூதன் என் அம்மான்,*
தானும் யானும் எல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதும் ஒத்தே.
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,* என்னைப் பெற்ற-
அத் தாய் ஆய் தந்தை ஆய்* அறியாதன அறிவித்து,*
அத்தா, நீ செய்தன* அடியேன் அறியேனே.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மா மாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்* நிலம் மாவலி மூவடி என்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனது ஆவியுள் கலந்தே.
எனது ஆவியுள் கலந்த* பெரு நல் உதவிக் கைம்மாறு,*
எனது ஆவி தந்தொழிந்தேன்,* இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ* பொழில் ஏழும் உண்ட எந்தாய்,*
எனது ஆவி யார்? யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.
இனி யார் ஞானங்களால்* எடுக்கல் எழாத எந்தாய்,*
கனிவார் வீட்டு இன்பமே* என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே* பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,*
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்* நுன பாதம் சேர்ந்தேனே.
சேர்ந்தார் தீவினைகட்கு* அரு நஞ்சை திண் மதியை,*
தீர்ந்தார் தம் மனத்துப்* பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை* அரக்கியை மூக்கு-
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல் முன்னமே.
முன் நல் யாழ் பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பல் நலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார் முகிலே என் கண்ணா,*
நின் அலால் இலேன்காண்* என்னை நீ குறிக்கொள்ளே.
குறிக்கொள் ஞானங்களால்* எனை ஊழி செய் தவமும்,*
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்* ஒளித்து உண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்* பிறவித் துயர் கடிந்தே.
கடி வார் தண் அம் துழாய்க்* கண்ணன் விண்ணவர் பெருமான்,*
படி வானம் இறந்த* பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட* படிந்து குடைந்து ஆடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.
களிப்பும் கவர்வும் அற்று* பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடர் ஆழி சங்கு ஏந்தி,*
அளிக்கின்ற மாயப் பிரான்* அடியார்கள் குழாங்களையே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கம் இலீரே.
இரக்க மனத்தோடு* எரி அணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்கும் இவள்,*
இரக்கம் எழீர்* இதற்கு என் செய்கேன்,*
அரக்கன் இலங்கை* செற்றீருக்கே.
இலங்கை செற்றவனே என்னும்,* பின்னும்
வலம் கொள்* புள் உயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ் உயிர்க்கும்,* கண்ணீர் மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல்* வாய்வெரீ இத்,* தன
குவளை ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண் அம் துழாய் கொடீர்,* என
தவள வண்ணர்* தகவுகளே.
தகவு உடையவனே என்னும்,* பின்னும்
மிக விரும்பும்* பிரான் என்னும்,* எனது
அக உயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உக உருகி* நின்று உள் உளே.
உள் உள் ஆவி* உலர்ந்து உலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ள நீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே.
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிது உயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சம் என்று* இவள் பட்டனவே.
பட்ட போது* எழு போது அறியாள்,* விரை
மட்டு அலர்* தண் துழாய் என்னும்,* சுடர்
வட்ட வாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்ஏழைக்கே.
ஏழை பேதை* இராப்பகல்,* தன
கேழ் இல் ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வை வேவ* இலங்கை செற்றீர்.* இவள்
மாழை நோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
திரு உடம்பு வான் சுடர்* செந்தாமரை கண் கை கமலம்,*
திரு இடமே மார்வம்* அயன் இடமே கொப்பூழ்,*
ஒருவு இடமும்* எந்தை பெருமாற்கு அரனே ஓ,*
ஒருவு இடம் ஒன்று இன்றி* என்னுள் கலந்தானுக்கே.
என்னுள் கலந்தவன்* செங்கனி வாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்குக்* கண் பாதம் கை கமலம்,*
மன்னும் முழு ஏழ் உலகும்* வயிற்றின் உள,*
தன்னுள் கலவாதது* எப் பொருளும் தான் இலையே.
எப் பொருளும் தான் ஆய்* மரகதக் குன்றம் ஒக்கும்.*
அப்பொழுதைத் தாமரைப்பூக்* கண் பாதம் கை கமலம்,*
எப்பொழுதும் நாள் திங்கள்* ஆண்டு ஊழி ஊழிதொறும்,*
அப்பொழுதைக்கு அப்பொழுது* என் ஆரா அமுதமே.
ஆரா அமுதமாய்* அல் ஆவியுள் கலந்த,*
கார் ஆர் கருமுகில் போல்* என் அம்மான் கண்ணனுக்கு,*
நேரா வாய் செம்பவளம்* கண் பாதம் கை கமலம்,*
பேர் ஆரம் நீள் முடி நாண்,* பின்னும் இழை பலவே.
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டு உண்டு* கேட்டு உற்று மோந்து இன்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பு அணை மேலாற்கேயோ.
பாம்பு அணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்* ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
தேம் பணைய சோலை* மராமரம் ஏழ் எய்ததுவும்,*
பூம் பிணைய தண் துழாய்ப்* பொன் முடி அம் போர் ஏறே.
பொன் முடி அம் போர் ஏற்றை* எம்மானை நால் தடம் தோள்,*
தன் முடிவு ஒன்று இல்லாத* தண் துழாய் மாலையனை,*
என் முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல்முடிவு காணேன் நான்* சொல்லுவது என் சொல்லீரே.
சொல்லீர் என் அம்மானை* என் ஆவி ஆவிதனை,*
எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
நல்ல அமுதம்* பெறற்கு அரிய வீடும் ஆய்,*
அல்லி மலர் விரை ஒத்து* ஆண் அல்லன் பெண் அலனே.
ஆண் அல்லன் பெண் அல்லன்* அல்லா அலியும் அல்லன்,*
காணலும் ஆகான்* உளன் அல்லன் இல்லை அல்லன்,*
பேணுங்கால் பேணும்* உரு ஆகும் அல்லனும் ஆம்,*
கோணை பெரிது உடைத்து* எம் பெம்மானைக் கூறுதலே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
சிக்கெனச் சிறிது ஓர் இடமும்* புறப்படாத் தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்* துளக்கு அற்று அமுதம் ஆய்,* எங்கும்
பக்கம் நோக்கு அறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.
தாமரைக் கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய் விரைப்
பூ மருவு கண்ணி* எம் பிரானை பொன்மலையை,*
நாம் மருவி நன்கு ஏத்தி* உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,* நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த* பான்மையே வள்ளலே.
வள்ளலே மதுசூதனா* என் மரகத மலையே,* உனை நினைந்து,
எள்கல் தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி* களித்து உகந்து உகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத* வெம் தீவினைகளை நாசம் செய்து* உனது
அந்தம் இல் அடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்* பாற்கடல் யோக நித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்து செய்தே.
உன்னைச் சிந்தை செய்து செய்து,* உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி* என்
முன்னைத் தீவினைகள்* முழு வேர் அரிந்தனன் யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன் அகல் மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாதது என் எனக்கே.
முடியாதது என் எனக்கேல் இனி?* முழு ஏழ் உலகும் உண்டான்* உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான்* அகல்வானும் அல்லன் இனி,*
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து* எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,*
விடியா வெம் நரகத்து என்றும்* சேர்தல் மாறினரே.
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப் பாறி அசுரர் தம்* பல் குழாங்கள் நீறு எழ,* பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய்* உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ* ஒரு வாளி கோத்த வில்லா,*
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வான் ஏறே* இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்* தாய் தந்தை உயிர்-
ஆகின்றாய்* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண் வேங்கடம்
மேகின்றாய்* தண் துழாய் விரை நாறு கண்ணியனே.
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
நாரணன் முழு ஏழ் உலகுக்கும்* நாதன் வேத மயன்,*
காரணம் கிரிசை கருமம் இவை* முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்* தொழுது ஏத்த நின்று,*
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்* என் மாதவனே.
மாதவன் என்றதே கொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாது அவங்களும் சேர்கொடேன் என்று* என்னுள் புகுந்து இருந்து,*
தீது அவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக் கண் குன்றம்,*
கோது அவம் இல் என் கன்னல் கட்டி* எம்மான் என் கோவிந்தனே.
கோவிந்தன் குடக் கூத்தன்* கோவலன் என்று என்றே குனித்துத்*
தேவும் தன்னையும்* பாடி ஆடத் திருத்தி* என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்* பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மேவும் தன்மையம் ஆக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.
விட்டு இலங்கு செஞ்சோதித்* தாமரை பாதம் கைகள் கண்கள,*
விட்டு இலங்கு கருஞ்சுடர்* மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்* சங்கு சக்கரம் பரிதி,*
விட்டு இலங்கு முடி அம்மான்* மதுசூதனன் தனக்கே.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று* எத்தாலும் கருமம் இன்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட* நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்* எம்மான் என் செங்கனி வாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனன் என்று என்று,* உள்ளி
பரவிப் பணிந்து* பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே
வாமனன் என் மரகத வண்ணன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப் பயந்தாய்,* என்று என்று உன் கழல்* பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்* பிறவித் துழதி நீங்க,* என்னைத்
தீ மனம் கெடுத்தாய்* உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்* என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர் மல்கி* வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீஇய தீவினை மாள இன்பம் வளர* வைகல் வைகல்
இரீஇ* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.
இருடீகேசன் எம் பிரான்* இலங்கை அரக்கர் குலம்,*
முருடு தீர்த்த பிரான் எம்மான்* அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல் கண்டாய்* நம்பி பற்பநாபனையே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
தாமோதரனை தனி முதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோ தரம் அறிய* ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோ தரம் அறிய* எம்மானை என் ஆழி வண்ணனையே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
நீந்தும் துயர் இல்லா* வீடு முதல் ஆம்,*
பூந் தண் புனல் பொய்கை* யானை இடர் கடிந்த,*
பூந் தண் துழாய்* என் தனி நாயகன் புணர்ப்பே.
புணர்க்கும் அயன் ஆம்* அழிக்கும் அரன் ஆம்,*
புணர்த்த தன் உந்தியொடு* ஆகத்து மன்னி,*
புணர்த்த திருஆகித்* தன் மார்வில் தான்சேர்,*
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு* எங்கும் புலனே.
புலன் ஐந்து மேயும்* பொறி ஐந்தும் நீங்கி,*
நலம் அந்தம் இல்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலம் முந்து சீரில்* படிமின் ஒவாதே.
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
மூவாத் தனி முதலாய்* மூவுலகும் காவலோன்,*
மா ஆகி ஆமை ஆய்* மீன் ஆகி மானிடம் ஆம்,*
தேவாதி தேவ பெருமான்* என் தீர்த்தனே.
தீர்த்தன் உலகு அளந்த* சேவடிமேல் பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன் முடிமேல் தான் கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக் கிடந்ததே?
கிடந்து இருந்து நின்று அளந்து* கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்* பார் என்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற,* மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண் பேசில் எல்லா* உலகும் ஓர் துற்று ஆற்றா,*
சேணபாலவீடோ* உயிரோ மற்று எப் பொருட்கும்,*
ஏண் பாலும் சோரான்* பரந்து உளன் ஆம் எங்குமே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
சீர்மை கொள் வீடு* சுவர்க்கம் நரகு ஈறா,*
ஈர்மை கொள் தேவர்* நடுவா மற்று எப் பொருட்கும்,*
வேர் முதல் ஆய் வித்து ஆய்* பரந்து தனி நின்ற,*
கார் முகில் போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
ஈதே யான் உன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மை தோய் சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின் கழல்* யான் எய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே.
செய்யேல் தீவினை என்று* அருள் செய்யும்,* என்
கை ஆர் சக்கரக்* கண்ண பிரானே,*
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்* நின் கழல்
எய்யாது ஏத்த,* அருள்செய் எனக்கே.
எனக்கே ஆட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடு இன்றி மன்னி,*
தனக்கே ஆக* எனைக் கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான் கொள் சிறப்பே.
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பு இல்* பல் பிறவிப் பெருமானை,*
மறப்பு ஒன்று இன்றி* என்றும் மகிழ்வனே.
மகிழ் கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ் கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ் கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்க வாராயே.
வாராய்* உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.
எக்காலத்து எந்தையாய்* என்னுள் மன்னில்,* மற்று
எக் காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர் விழுங்கும்,* என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என் தனதே* என்று இருந்தேன்,*
யானே நீ* என் உடைமையும் நீயே,*
வானே ஏத்தும்* எம் வானவர் ஏறே
ஏறேல் ஏழும்* வென்று ஏர் கொள் இலங்கையை,*
நீறே செய்த* நெடுஞ் சுடர்ச் சோதி,*
தேறேல் என்னை* உன் பொன் அடி சேர்த்து* ஒல்லை-
வேறே போக* எஞ்ஞான்றும் விடலே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.
கிளர் ஒளி இளமை* கெடுவதன் முன்னம்,*
வளர் ஒளி மாயோன்* மருவிய கோயில்,*
வளர் இளம் பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர்வு இலர் ஆகிச்* சார்வது சதிரே.
சதிர் இள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர் தம் கோயில்,*
மதி தவழ் குடுமி* மாலிருஞ்சோலைப்,*
பதியது ஏத்தி* எழுவது பயனே.
பயன் அல்ல செய்து* பயன் இல்லை நெஞ்சே,*
புயல் மழை வண்ணர்* புரிந்து உறை கோயில்,*
மயல் மிகு பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
அயல்மலை அடைவது* அது கருமமே.
கரும வன் பாசம்* கழித்து உழன்று உய்யவே,*
பெருமலை எடுத்தான்* பீடு உறை கோயில்,*
வரு மழை தவழும்* மாலிருஞ்சோலைத்,*
திருமலை அதுவே* அடைவது திறமே.
திறம் உடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறம் முயல் ஆழிப்* படையவன் கோயில்,*
மறு இல் வண் சுனை சூழ்* மாலிருஞ்சோலைப்,*
புறமலை சாரப்* போவது கிறியே.
கிறி என நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறி அமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணை சேர்* மாலிருஞ்சோலை,*
நெறி பட அதுவே* நினைவது நலமே.
நலம் என நினைமின்* நரகு அழுந்தாதே,*
நிலம் முனம் இடந்தான்* நீடு உறை கோயில்,*
மலம் அறு மதி சேர்* மாலிருஞ்சோலை,*
வலம் முறை எய்தி,* மருவுதல் வலமே.
வலஞ்செய்து வைகல்* வலம் கழியாதே,*
வலஞ்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலஞ்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்து நாளும்* மருவுதல் வழக்கே.
வழக்கு என நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடி அட்டான்* அமர் பெருங்கோயில்,*
மழக் களிற்று இனம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழக் கருதுவதே* துணிவது சூதே.
சூது என்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதம் முன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாது உறு மயில் சேர்* மாலிருஞ்சோலைப்,*
போது அவிழ் மலையே* புகுவது பொருளே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
கட்டுரைக்கில் தாமரை* நின் கண் பாதம் கை ஒவ்வா,*
சுட்டு உரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்* புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய் புற்கு என்றே* காட்டுமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய்* நின் இகழ்ந்து பின்,* மற்று ஓர்
பரம் சோதி இன்மையின்* படி ஓவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படர் உலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்பு உரைக்கமாட்டேனே.
மாட்டாதே ஆகிலும்* இம் மலர் தலை மாஞாலம்,* நின்
மாட்டு ஆய மலர்புரையும்* திருவுருவம் மனம் வைக்க*
மாட்டாத பலசமய* மதி கொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம் வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அரும்தவத்த* மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,*
வருந்தாத ஞானம் ஆய்* வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
வரும் காலம் நிகழ் காலம்* கழி காலம் ஆய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலர் ஆக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகு எல்லாம்* படை என்று முதல் படைத்தாய்*
கேழ்த்த சீர் அரன் முதலாக்* கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்து அமரர் துதித்தால்* உன் தொல் புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடர் உடம்புஆய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானம் ஆய்* முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
மாசூணா வான் கோலத்து* அமரர் கோன் வழிப்பட்டால்,*
மாசூணா உனபாத* மலர்ச் சோதி மழுங்காதே?
மழுங்காத வைந் நுதிய* சக்கர நல் வலத்தையாய்,*
தொழும் காதல் களிறு அளிப்பான்* புள் ஊர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படை ஆக மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச் சோதி மறையாதே?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
வன் மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பல்மா மாயப்* பல் பிறவியில் படிகின்ற யான்,*
தொல் மா வல்வினைத்* தொடர்களை முதல் அரிந்து,*
நின் மா தாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.
சூழ்ச்சி ஞானச்* சுடர் ஒளி ஆகி,* என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து* நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகை அருளாய் வந்தே.
வந்தாய் போலே* வந்தும் என் மனத்தினை நீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இது ஆகில்,*
கொந்து ஆர் காயாவின்* கொழு மலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்கு வந்து அணுகிற்பனே?
கிற்பன் கில்லேன்* என்று இலன் முனம் நாளால்,*
அற்ப சாரங்கள்* அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
பற்பல் ஆயிரம்* உயிர் செய்த பரமா,* நின்
நற் பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானம் இன்றி* வினை இயல் பிறப்பு அழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவு அற நிறைந்து நின்ற,*
மெய்ஞ் ஞானச் சோதிக்* கண்ணனை மேவுதுமே?
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதல் இன்றி* உன் கழல் வணங்கிற்றிலேன்,*
பாவு தொல் சீர்க் கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கு எய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பல காலம்* வழி திகைத்து அலமர்கின்றேன்,*
மேவி அன்று ஆ நிரை காத்தவன்* உலகம் எல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம் விட்டால்,*
அலைப்பூண் உண்ணும்* அவ் அல்லல் எல்லாம் அகல,*
கலைப் பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடு உயிரே
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர் வானவர் கோனொடும்,*
சிந்து பூ மகிழும்* திருவேங்கடத்து,*
அந்தம் இல் புகழ்க்* கார் எழில் அண்ணலே.
அண்ணல் மாயன்* அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி,* வாய்க் கருமாணிக்கம்,*
தெள் நிறை சுனை நீர்த்,* திருவேங்கடத்து,*
எண் இல் தொல் புகழ்* வானவர் ஈசனே.
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்* நிறைவு ஒன்றும் இலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரம் சுடர்ச் சோதிக்கே.
சோதி ஆகி* எல்லா உலகும் தொழும்,*
ஆதிமூர்த்தி என்றால்* அளவு ஆகுமோ?,*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை,*
தீது இல் சீர்த்* திருவேங்கடத்தானையே.
வேம் கடங்கள்* மெய்மேல் வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நம என்னல்-
ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.
சுமந்து மாமலர்* நீர் சுடர் தூபம் கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்று எழும்* திருவேங்கடம் நங்கட்குச்,*
சமன் கொள் வீடு தரும்* தடங் குன்றமே.
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு:பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடந் தாழ்வரே.
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூவும் ஆறு அறியமாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவு சீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நா இயல் கலைகள் என்கோ!* ஞான நல்ஆவி என்கோ,*
பாவு சீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே!
பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச் செவ்வாயன் என்கோ,*
அம் கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திரு மறு மார்பன் என்கோ,*
சங்கு சக்கரத்தன் என்கோ!* சாதி மாணிக்கத்தையே!
சாதி மாணிக்கம் என்கோ!* சவி கொள் பொன் முத்தம் என்கோ*
சாதி நல் வயிரம் என்கோ,* தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
ஆதி அம் சோதி என்கோ!* ஆதி அம் புருடன் என்கோ,*
ஆதும் இல் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே!
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினை கெடுக்கும்,*
நச்சும் மா மருந்தம் என்கோ!* நலங் கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச் சுவைத் தேறல் என்கோ!* கனி என்கோ! பால் என்கேனோ!
பால் என்கோ!* நான்கு வேதப் பயன் என்கோ,* சமய நீதி
நூல் என்கோ!* நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ,* வினையின் மிக்க பயன் என்கோ,* கண்ணன் என்கோ!-
மால் என்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே!
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனம் இல் செல்வம் என்கோ!* ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
ஊனம் இல் மோக்கம் என்கோ!* ஒளி மணி வண்ணனையே!
ஒளி மணி வண்ணன் என்கோ!* ஒருவன் என்று ஏத்த நின்ற*
நளிர் மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்* படைத்து அவை ஏத்த நின்ற,*
களி மலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே!
கண்ணனை மாயன் தன்னை* கடல் கடைந்து அமுதம் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணி நன்கு உறைகின்றானை* ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,*
எண்ணும் ஆறு அறியமாட்டேன்,* யாவையும் எவரும் தானே.
யாவையும் எவரும் தானாய்* அவரவர் சமயம் தோறும்,*
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவி சேர் உயிரின் உள்ளால்* ஆதும் ஓர் பற்று இலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே.
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தண்கடல் வட்டத்து உள்ளாரைத்* தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,*
திண்கழல்கால் அசுரர்க்குத்* தீங்கு இழைக்கும் திருமாலைப்,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே.
மலையை எடுத்து கல்மாரி* காத்து* பசுநிரை தன்னைத்,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடு ஆதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலை கொள் நரகத்து அழுந்திக்* கிடந்து உழைக்கின்ற வம்பரே.
வம்பு அவிழ் கோதைபொருட்டா* மால்விடை ஏழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டம் இட்டு ஆடி* கோகு உகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயன் என்னே* சாது சனங்களிடையே?
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதி அம் சோதி உருவை* அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதி உணர்ந்தவர் முன்னா* என் சவிப்பார் மனிசரே?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னை* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியை கரும்பின் இன் சாற்றை* கட்டியை தேனை அமுதை,*
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்* முழுது உணர் நீர்மையினார.
நீர்மை இல் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந்து ஆடி*
நீர்மல்கு கண்ணினர் ஆகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊன் மல்கி மோடு பருப்பார்* உத்தமர்கட்கு என் செய்வாரே?
வார்புனல் அம் தண் அருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றி* பித்தர் என்றே பிறர்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலோகர் சிரிக்க நின்று ஆடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே.
அமரர் தொழப்படுவானை* அனைத்து உலகுக்கும் பிரானை,*
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்று ஆக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்து எழுந்து ஆடி* அலற்றுவதே கருமமே.
கருமமும் கரும பலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனை செங்கண் மாலினை* தேவபிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
மூவர் ஆகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவம் உள்ளன நீக்குவானை* தடங் கடல் கிடந்தான் தன்னை,*
தேவ தேவனை தென் இலங்கை* எரி எழச் செற்ற வில்லியை,*
பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ.
பரவி வானவர் ஏத்த நின்ற* பரமனை பரஞ்சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனை குடக் கூத்தனை,*
அரவம் ஏறி அலை கடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன் பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.
வைம்மின் நும் மனத்து என்று* யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை ஆளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தித் திரிவரே.
திரியும் காற்றோடு அகல் விசும்பு* திணிந்த மண் கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோர் இறை,*
சுரியும் பல் கருங் குஞ்சி* எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்* புகநின்ற செங்கண்மால்,*
நாற்றம் தோற்றம் சுவை ஒலி* உறல் ஆகி நின்ற,* எம் வானவர்
ஏற்றையே அன்றி* மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
எழுமைக்கும் எனது ஆவிக்கு* இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணிவண்ணனை குடக் கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னல் கனியினை,*
தொழுமின் தூய மனத்தர் ஆய்* இறையும் நில்லா துயரங்களே.
துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்* அவை அல்லன் ஆய்,*
உயர நின்றது ஓர் சோதி ஆய்* உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கும் நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,*
தயரதற்கு மகன் தன்னை அன்றி* மற்று இலேன் தஞ்சமாகவே.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு* தானும் ஆய் அவை அல்லன் ஆய்,*
எஞ்சல் இல் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!* அவன் இவன் என்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் எவன்* அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்*
படஅரவின் அணைக்கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
ஆளும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
தோளும் ஓர் நான்கு உடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக் கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடை நாதரே.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறும் துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து* எந்தை பிரான் தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடையார்களே.
உடை ஆர்ந்த ஆடையன்* கண்டிகையன் உடை நாணினன்*
புடை ஆர் பொன் நூலினன்* பொன் முடியன் மற்றும் பல்கலன்,*
நடையா உடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடை ஆர் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமை ஒழிய* அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே.
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
துளிக்கும் நறும் கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக் கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,*
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்* சன்ம சன்மாந்தரம் காப்பரே.
சன்ம சன்மாந்தரம் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்* கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
நன்மை பெறுத்து எம்மை* நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.
நம்பனை ஞாலம் படைத்தவனை* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்* உணர்வு அரியான் தன்னை,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்* அவர் கண்டீர்,*
எம் பல் பிறப்பிடைதோறு* எம் தொழுகுலம் தாங்களே.
குலம் தாங்கு சாதிகள்* நாலிலும் கீழ் இழிந்து,* எத்தனை
நலம் தான் இலாத* சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,*
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்* மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம் அடிகளே.
அடி ஆர்ந்த வையம் உண்டு* ஆல் இலை அன்னவசம் செய்யும,*
படி யாதும் இல் குழவிப்படி* எந்தை பிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்* அடியார் அடியோங்களே.
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
நெஞ்சமே! நீள் நகர் ஆக* இருந்த என்
தஞ்சனே,* தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலம் கொள்வான்* குறள் ஆகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்,* என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும்* வானவர் தம்-
நாயகனே,* நாள் இளம் திங்களைக்* கோள் விடுத்து,*
வேய் அகம் பால் வெண்ணெய்* தொடு உண்ட ஆன் ஆயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே.
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடு இன்றி,*
பை கொள் பாம்பு ஏறி* உறை பரனே,* உன்னை
மெய்கொள்ளக் காண( விரும்பும் என் கண்களே.
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண் கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்து செல்,*
பண் கொண்ட புள்ளின்* சிறகு ஒலி பாவித்து,*
திண் கொள்ள ஓர்க்கும்* கிடந்து என் செவிகளே.
செவிகளால் ஆர* நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே* காலப் பண் தேன்* உறைப்பத் துற்று,*
புவியின்மேல்* பொன் நெடும் சக்கரத்து உன்னையே.*
அவிவு இன்றி ஆதரிக்கும்* எனது ஆவியே.
ஆவியே! ஆர் அமுதே!* என்னை ஆளுடைத்,*
தூவி அம் புள் உடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உன கோலமே.
கோலமே! தாமரைக் கண்ணது ஓர்* அஞ்சன
நீலமே,* நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்று செல்லாதன* முன் நிலாம்
காலமே,* உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
கொள்வன் நான் மாவலி* மூவடி தா என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள் வன்மை தீர,* ஓர் ஆயிரம் தோள் துணித்த*
புள் வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மா மருதின் இடை போய* எம்
பெருந்தகாய்,* உன் கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசகமாலை கொண்டு* உன்னையே
இருந்து இருந்து* எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலம்கொள்சீர்* நன் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
ஒழிவு ஒன்று இல்லாத* பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப் போய்,*
கழிய மிக நல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும் பொருள்?,*
மின் ஆர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
கொள்ளும் பயன் இல்லை* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவு இலன்* வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்ல வம்மினோ.
வம்மின் புலவீர்!* நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,*
இம் மன் உலகினில்* செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
நும் இன் கவி கொண்டு* நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,*
செம் மின் சுடர் முடி* என் திருமாலுக்குச் சேருமே.
சேரும் கொடை புகழ்* எல்லை இலானை,* ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்* மற்று யான் கிலேன்,*
மாரி அனைய கை* மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,*
பாரில் ஓர் பற்றையைப்* பச்சைப் பசும் பொய்கள் பேசவே.
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லை இலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே?
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்.*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
சாய் கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீ கண்டுகொள் என்று* வீடும் தரும் நின்றுநின்றே!
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ் உடல் நீங்கிப்போய்,*
சென்று சென்று ஆகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்* கவி ஆயினேற்கு,*
என்றும் என்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டு இலனே.
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்* மூவுலகுக்கு உரிய,*
கட்டியை தேனை அமுதை* நன்பாலை கனியை கரும்பு தன்னை,*
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்ட பின்னை* இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவு இலனே.
',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'* என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர் தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனை பொன் சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப் பற்றி* யான் இறையேனும் இடர் இலனே.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏற திண்தேர்கடவி,*
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயர் இலனே.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றி கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பம் இலனே.
துன்பமும் இன்பமும் ஆகிய* செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,*
இன்பம் இல் வெம் நரகு ஆகி* இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி* பலபல மாய மயக்குக்களால்,*
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று* ஏதும் அல்லல் இலனே.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்* அழகு அமர் சூழ் ஒளியன்,*
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு* எல்லாக் கருமங்களும் செய்,*
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி* யான் ஓர் துக்கம் இலனே.
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று* ஒன்றும் தளர்வு இலனே.
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானம் ஒன்றாய்,*
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்* அருவு ஆகி நிற்கும்,*
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி* யான் என்றும் கேடு இலனே.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உய்ம்மின் திறைகொணர்ந்து* என்று உலகு ஆண்டவர்,* இம்மையே
தம் இன்சுவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம் விட்டு*
வெம் மின் ஒளிவெயில்* கானகம் போய்க் குமைதின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினோ.
அடி சேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம் தொழ,*
இடி சேர் முரசங்கள்* முற்றத்து இயம்ப இருந்தவர்,*
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்* ஆதலில் நொக்கெனக்,*
கடி சேர் துழாய்முடிக்* கண்ணன் கழல்கள் நினைமினோ.
நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண்மணலில் பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கு* அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத் தாள் மத களிறு அட்டவன்* பாதம் பணிமினோ.
பணிமின் திருவருள் என்னும்* அம் சீதப் பைம் பூம் பள்ளி,*
அணி மென் குழலார்* இன்பக் கலவி அமுது உண்டார்,*
துணி முன்பு நால* பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,*
மணி மின்னு மேனி* நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார் என்று அல்லால்* அன்று முதல் இன்று அறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பது இல்லை நிற்குறில்,*
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ.
ஆம் இன் சுவை அவை* ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,*
தூ மென் மொழி மடவார்* இரக்கப் பின்னும் துற்றுவார்,*
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று* இடறுவர் ஆதலின்,*
கோமின் துழாய் முடி* ஆதி அம் சோதி குணங்களே.
குணம் கொள் நிறை புகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்* ஆங்கு அவனை இல்லார்,*
மணம் கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
பணம் கொள் அரவு அணையான்* திருநாமம் படிமினோ.
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து* ஐம்புலன் வென்று,*
செடி மன்னு காயம் செற்றார்களும்* ஆங்கு அவனை இல்லார்,*
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
கொடி மன்னு புள் உடை* அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி* எல்லாம்விட்ட,*
இறுகல் இறப்பு என்னும்* ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,*
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்* பின்னும் வீடு இல்லை,*
மறுகல் இல் ஈசனைப் பற்றி* விடாவிடில் வீடு அஃதே.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
வல்லி சேர் நுண் இடை* ஆய்ச்சியர் தம்மொடும்,*
கொல்லைமை செய்து* குரவை பிணைந்தவர்,*
நல் அடிமேல் அணி* நாறு துழாய் என்றே
சொல்லுமால்,* சூழ் வினையாட்டியேன் பாவையே.
பா இயல் வேத* நல் மாலை பல கொண்டு,*
தேவர்கள் மா முனிவர்* இறைஞ்ச நின்ற*
சேவடிமேல் அணி* செம் பொன் துழாய் என்றே
கூவுமால்,* கோள் வினையாட்டியேன் கோதையே.
கோது இல வண்புகழ்* கொண்டு சமயிகள்,*
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன்,*
பாதங்கள் மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* ஊழ்வினையேன்* தடந் தோளியே.
தோளி சேர் பின்னை பொருட்டு* எருது ஏழ் தழீஇக்
கோளியார்* கோவலனார்* குடக் கூத்தனார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
நாளும்நாள்,* நைகின்றதால்* என்தன் மாதரே
மாதர் மா மண்மடந்தைபொருட்டு* ஏனம் ஆய்,*
ஆதி அம் காலத்து* அகல் இடம் கீண்டவர்,*
பாதங்கள்மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* எய்தினள் என் தன் மடந்தையே.
மடந்தையை* வண் கமலத் திருமாதினை,*
தடம் கொள் தார் மார்பினில்* வைத்தவர் தாளின்மேல்,*
வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே* இவள்
மடங்குமால்* வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே.
கொம்பு போல் சீதைபொருட்டு* இலங்கை நகர்*
அம்பு எரி உய்த்தவர்* தாள் இணைமேல் அணி,*
வம்பு அவிழ் தண் அம் துழாய்* மலர்க்கே இவள்-
நம்புமால்,* நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும்* ஓர் பெண் பெற்று நல்கினீர்,*
எங்ஙனே சொல்லுகேன்* யான் பெற்ற ஏழையை,*
சங்கு என்னும் சக்கரம் என்னும்* துழாய் என்னும்,*
இங்ஙனே சொல்லும்* இராப் பகல் என்செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை* என் கோமளம்,*
என் சொல்லும்* என் வசமும் அல்லள் நங்கைமீர்,*
மின் செய் பூண் மார்பினன்* கண்ணன் கழல் துழாய்,*
பொன் செய்பூண்* மென்முலைக்கு என்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
ஏக மூர்த்தி இரு மூர்த்தி* மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
ஆகி,* ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,*
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற* நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி* ஆவி அல்லல் மாய்த்ததே.
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த* மாயப் பேய் உயிர்-
மாய்த்த,* ஆய மாயனே! வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும்,* நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனது உயிரே.
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண் இல் பல்கலன்களும்* ஏலும் ஆடையும் அஃதே,*
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அஃதே,*
கண்ணன் எம் பிரான் எம்மான்* கால சக்கரத்தானுக்கே.
கால சக்கரத்தொடு* வெண் சங்கம் கை ஏந்தினாய்,*
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாராயணனே என்று என்று,*
ஓலம் இட்டு நான் அழைத்தால்* ஒன்றும் வாராயாகிலும்,*
கோலம் ஆம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே.
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன்
உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே.
என்னது ஆவி மேலையாய்* ஏர் கொள் ஏழ் உலகமும்,*
துன்னி முற்றும் ஆகி நின்ற* சோதி ஞான மூர்த்தியாய்,*
உன்னது என்னது ஆவியும்,* என்னது உன்னது ஆவியும்*
இன்ன வண்ணமே நின்றாய்* என்று உரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன் நான்?* காதல் மையல் ஏறினேன்,*
புரைப்பு இலாத பரம்பரனே!* பொய் இலாத பரஞ்சுடரே,*
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தினேன்.
யானும் ஏத்தி* ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,* பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும் ஆகித் தித்திப்ப,*
யானும் எம் பிரானையே ஏத்தினேன்* யான் உய்வானே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
பெய்வளைக் கைகளைக் கூப்பி* 'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,*
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,* 'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,*
நையும் கண்ணீர் மல்க நின்று* 'நாரணன்' என்னும் அன்னே,* என்
தெய்வ உருவில் சிறுமான்* செய்கின்றது ஒன்று அறியேனே.
அறியும் செந்தீயைத் தழுவி* 'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தழுவி* 'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
வெறிகொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறிவளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
ஒன்றிய திங்களைக் காட்டி* 'ஒளிமணி வண்ணனே' என்னும்*
நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்* நாரணன் வந்தான் என்று ஆலும்,*
என்று இன மையல்கள் செய்தான்* என்னுடைக் கோமளத்தையே?
கோமள வான் கன்றைப் புல்கி* கோவிந்தன் மேய்த்தன' என்னும்,*
போம் இள நாகத்தின் பின்போய்* அவன் கிடக்கை ஈது என்னும்,*
ஆம் அளவு ஒன்றும் அறியேன்* அருவினையாட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால் செய்து செய்கின்ற கூத்தே.
கூத்தர் குடம் எடுத்து ஆடில்* 'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,*
வாய்த்த குழல் ஓசை கேட்கில்* 'மாயவன்' என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்* அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு* என் பெண்கொடி ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
திரு உடை மன்னரைக் காணில்,* திருமாலைக் கண்டேனே என்னும்,*
உரு உடை வண்ணங்கள் காணில்* 'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்* 'கடல்வண்ணன் கோயிலே' என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகவரைக் காணில்* 'வியல் இடம் உண்டானே!' என்னும்,*
கரும் பெரு மேகங்கள் காணில்* 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
பெரும் புல ஆ நிரை காணில்* 'பிரான் உளன்' என்று பின் செல்லும்,*
அரும் பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றானே!
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி* அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப* வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,*
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,* பெருமானே! வா! என்று கூவும்,*
மயல் பெருங் காதல் என் பேதைக்கு* என்செய்கேன் வல்வினையேனே!
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்* உறை மார்பினன்,*
செய்ய கோலத் தடங் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேன்,*
வெய்ய நோய்கள் முழுதும்* வியன் ஞாலத்து வீயவே.
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,*
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மேவி நின்று தொழுவார்* வினை போக மேவும் பிரான்,*
தூவி அம் புள் உடையான்* அடல் ஆழி அம்மான் தன்னை,
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி* நண்ணப் பெற்றேன்,*
ஆவி என் ஆவியை* யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,* அமரர்தம்-
ஏற்றை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,*
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி* நாளும் மகிழ்வு எய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினை நோய்கள் கரியவே.
கரிய மேனிமிசை* வெளிய நீறு சிறிதே இடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேற்கு,*
அரியது உண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனி என்றுமே?
என்றும் ஒன்று ஆகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு -
இன்றி நின்றானை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதி எய்தினம்* என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தண் தாமரை-
சுமக்கும்* பாதப் பெருமானை* சொல்மாலைகள் சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண் திசையும் தவிராது* நின்றான் தன்னை,*
கூனல் சங்கத் தடக்கையவனை* குடம் ஆடியை
வானக் கோனை,* கவி சொல்ல வல்லேற்கு* இனி மாறுஉண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்* கிடந்தும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்* மணம் கூடியும்,*
கண்ட ஆற்றால் தனதே* உலகு என நின்றான் தன்னை,*
வண் தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்ப மாரியே.
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந் தெய்வம்,*
இசைப்பு இன்றி* நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
திசைப்பு இன்றியே* சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றே இல் பெறும் இது காண்மினே.
இது காண்மின் அன்னைமீர்!* இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மது வார் துழாய்முடி* மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,*
அதுவே இவள் உற்ற நோய்க்கும்* அரு மருந்து ஆகுமே.
மருந்து ஆகும் என்று அங்கு ஓர்* மாய வலவை சொல் கொண்டு,* நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்* களன் இழைத்து என் பயன்?*
ஒருங்காகவே உலகு ஏழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,*
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே.
இவளைப் பெறும்பரிசு* இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,*
குவளைத் தடங் கண்ணும்* கோவைச் செவ்வாயும் பயந்தனள்,*
கவளக் கடாக் களிறு அட்ட பிரான்* திருநாமத்தால்,*
தவளப் பொடிக்கொண்டு* நீர்இட்டிடுமின் தணியுமே.
தணியும் பொழுது இல்லை* நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இது அல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமர் அடி நீறுகொண்டு*
அணிய முயலின்* மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
அணங்குக்கு அரு மருந்து என்று* அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்*
துணங்கை எறிந்து* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
உணங்கல் கெடக்* கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வல்லாரையே.
வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
கீழ்மையினால் அங்கு ஓர்* கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,*
நாழ்மை பல சொல்லி* நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இந் நோய்க்கும் ஈதே மருந்து,*
ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்* அவனை அல்லால்,*
நும் இச்சை சொல்லி* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
மன்னப்படும் மறைவாணனை* வண் துவராபதி-
மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுது ஆடுமே.
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோது இல தந்திடும்,* என்
வள்ளலேயோ! வையம் கொண்ட* வாமனாவோ! என்று என்று,*
நள் இராவும் நன் பகலும்* நான் இருந்து ஓலம் இட்டால்,*
கள்ள மாயா! உன்னை* என் கண் காண வந்து ஈயாயே.
'ஈவு இலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா! என்று என்று*
கூவிக் கூவி நெஞ்சு உருகி* கண்பனி சோர நின்றால்,*
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காண வந்தே.
'காண வந்து என் கண்முகப்பே* தாமரைக்கண் பிறழ,*
ஆணி செம்பொன் மேனி எந்தாய்!* நின்று அருளாய் என்று என்று,*
நாணம் இல்லாச் சிறு தகையேன்* நான் இங்கு அலற்றுவது என்,*
பேணி வானோர் காணமாட்டாப்* பீடு உடை அப்பனையே?
அப்பனே! அடல் ஆழியானே,* ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக்கூடுங்கொல்? என்று*
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு* ஆவி துவர்ந்து துவர்ந்து,*
இப்பொழுதே வந்திடாய் என்று* ஏழையேன் நோக்குவனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்* யான் எனது ஆவியுள்ளே,*
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!* நின்னை அறிந்து அறிந்தே.
அறிந்து அறிந்து தேறித் தேறி* யான் எனது ஆவியுள்ளே,*
நிறைந்த ஞான மூர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்று இடறும்* பேதைமை தீர்ந்தொழிந்தேன்*
நறுந் துழாயின் கண்ணி அம்மா!* நான் உன்னைக் கண்டுகொண்டே!
கண்டுகொண்டு என் கைகள் ஆர* நின் திருப்பாதங்கள்மேல்,*
எண் திசையும் உள்ள பூக்கொண்டு* ஏத்தி உகந்து உகந்து,*
தொண்டரோங்கள் பாடி ஆட* சூழ் கடல் ஞாலத்துள்ளே,*
வண் துழாயின் கண்ணி வேந்தே!* வந்திடகில்லாயே.
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்* ஐம்புலன் வெல்ல கில்லேன்,*
கடவன் ஆகி காலந்தோறும்* பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
மட வல் நெஞ்சம் காதல் கூர* வல்வினையேன் அயர்ப்பாய்த்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே?
சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் நோக்கி நின்று அலந்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான மூர்த்தி ஆய* வேத விளக்கினை* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
மணி மாமை குறைவு இல்லா* மலர்மாதர் உறை மார்பன்,*
அணி மானத் தட வரைத்தோள்* அடல் ஆழித் தடக்கையன்,*
பணி மானம் பிழையாமே* அடியேனைப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மட நெஞ்சால் குறைவு இலமே.
மட நெஞ்சால் குறைவு இல்லா* மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,*
விட நஞ்ச முலை சுவைத்த* மிகு ஞானச் சிறு குழவி,*
பட நாகத்து அணைக் கிடந்த* பரு வரைத் தோள் பரம்புருடன்,*
நெடுமாயன் கவராத* நிறையினால் குறைவு இலமே.
நிறையினால் குறைவு இல்லா* நெடும் பணைத் தோள் மடப் பின்னை,*
பொறையினால் முலை அணைவான்* பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,*
கறையினார் துவர் உடுக்கை* கடை ஆவின் கழி கோல் கைச்,*
சறையினார் கவராத* தளிர் நிறத்தால் குறைவு இலமே
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்* தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
கிளிமொழியாள் காரணமாக்* கிளர் அரக்கன் நகர் எரித்த,*
களி மலர்த் துழாய் அலங்கல்* கமழ் முடியன் கடல் ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத,* அறிவினால் குறைவு இலமே.
அறிவினால் குறைவு இல்லா* அகல் ஞாலத்தவர் அறிய,*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த* நிறை ஞானத்து ஒருமூர்த்தி,*
குறிய மாண் உரு ஆகி* கொடுங் கோளால் நிலம் கொண்ட,*
கிறி அம்மான் கவராத* கிளர் ஒளியால் குறைவு இலமே.
கிளர் ஒளியால் குறைவு இல்லா* அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,*
கிளர் ஒளிய இரணியனது* அகல் மார்பம் கிழித்து உகந்த,*
வளர் ஒளிய கனல் ஆழி* வலம்புரியன் மணி நீல,*
வளர் ஒளியான் கவராத* வரி வளையால் குறைவு இலமே.
வரி வளையால் குறைவு இல்லாப்* பெரு முழக்கால் அடங்காரை,*
எரி அழலம் புக ஊதி* இரு நிலம் முன் துயர் தவிர்த்த,*
தெரிவு அரிய சிவன் பிரமன்* அமரர் கோன் பணிந்து ஏத்தும்,*
விரி புகழான் கவராத* மேகலையால் குறைவு இலமே.
மேகலையால் குறைவு இல்லா* மெலிவு உற்ற அகல் அல்குல்,*
போகமகள் புகழ்த் தந்தை* விறல் வாணன் புயம் துணித்து,*
நாகமிசைத் துயில்வான்போல்* உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,*
யோகு அணைவான் கவராத* உடம்பினால் குறைவு இலமே.
உடம்பினால் குறைவு இல்லா* உயிர் பிரிந்த மலைத்துண்டம்,*
கிடந்தனபோல் துணி பலவா* அசுரர் குழாம் துணித்து உகந்த,*
தடம் புனல சடைமுடியன்* தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,*
உடம்பு உடையான் கவராத* உயிரினால் குறைவு இலமே.
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
சாம் ஆறும் கெடும் ஆறும்* தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடந்து அலற்றும்* இவை என்ன உலகு இயற்கை?,*
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்* அரவு அணையாய்! அம்மானே,*
கூமாறே விரைகண்டாய்* அடியேனை குறிக்கொண்டே.
கொண்டாட்டும் குலம் புனைவும்* தமர் உற்றார் விழு நிதியும்,*
வண்டு ஆர் பூங் குழலாளும்,* மனை ஒழிய உயிர் மாய்தல்,*
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை* கடல்வண்ணா! அடியேனைப்*
பண்டேபோல் கருதாது* உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.
கொள் என்று கிளர்ந்து எழுந்த* பெரும் செல்வம் நெருப்பு ஆக,*
கொள் என்று தமம் மூடும்* இவை என்ன உலகு இயற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேனை* உனது அருளால் வாங்காயே.
வாங்கு நீர் மலர் உலகில்* நிற்பனவும் திரிவனவும்,*
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்* பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கு இதன்மேல் வெம் நரகம்* இவை என்ன உலகு இயற்கை?*
வாங்கு எனை நீ மணிவண்ணா!* அடியேனை மறுக்கேலே.
மறுக்கி வல் வலைப்படுத்தி* குமைத்திட்டு கொன்று உண்பர்,*
அறப்பொருளை அறிந்து ஓரார்* இவை என்ன உலகு இயற்கை?*
வெறித் துளவ முடியானே!* வினையேனை உனக்கு அடிமை-
அறக்கொண்டாய்,* இனி என் ஆர் அமுதே!* கூயருளாயே.
ஆயே! இவ் உலகத்து* நிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்று ஒரு பொருளும்* இன்றி நீ நின்றமையால்,*
நோயே மூப்பு இறப்பு பிறப்பு* பிணியே என்று இவை ஒழிய,*
கூயேகொள் அடியேனை* கொடு உலகம் காட்டேலே.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
கூட்டுதி நின் குரை கழல்கள்* இமையோரும் தொழாவகைசெய்து,*
ஆட்டுதி நீ அரவு அணையாய்!* அடியேனும் அஃது அறிவன்,*
வேட்கை எல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* கூட்டினை நான் கண்டேனே.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்* ஐங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
ஒண் தொடியாள் திருமகளும்* நீயுமே நிலாநிற்ப,*
கண்ட சதிர் கண்டொழிந்தேன்* அடைந்தேன் உன் திருவடியே.
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனைப்*
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்* பல் உலகீர்! பரந்தே.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து* அன்று உடனே விழுங்கி,*
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறம் அன்றி பல் உலகீர்!* தெய்வம் மற்று இல்லை பேசுமினே!
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபால நல் மோக்கத்துக்* கண்டுகொண்மின்,*
தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம் பறைதல்* என் ஆவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
போற்றி மற்று ஓர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மை இன்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,*
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்* அது அறிந்து அறிந்து ஓடுமினே.
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து* மற்று ஓர் தெய்வம்,
பாடி ஆடிப் பணிந்து* பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*
கூடி வானவர் ஏத்த நின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு* அடிமைபுகுவதுவே
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும்* அவைஆகியும் மற்றும் தன்பால்,*
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய* ஆதிப்பிரான் அமரும்,*
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனை,*
உளம் கொள் ஞானத்து வைம்மின்* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
உறுவது ஆவது எத்தேவும்* எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,*
மறு இல் மூர்த்தியோடு ஒத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு* திருக்குருகூர் அதனுள்*
குறிய மாண் உரு ஆகிய* நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே.
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து*
தானே இன்அருள் செய்து* என்னை முற்றவும் தான் ஆனான்,*
மீன் ஆய் ஆமையும் ஆய்* நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,*
கான் ஆர் ஏனமும் ஆய்* கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக்கு இனியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்று ஆடி* பரந்து திரிகின்றனவே*
திரியும் கலியுகம் நீங்கி* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றி* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*
இடம் கொள் சமயத்தை எல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடம் கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களே ஆய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*.
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே* ஒக்கின்றது இவ் உலகத்து*
வைகுந்தன் பூதங்களே ஆய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்*
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*
கொன்று உயிர் உண்ணும் விசாதி* பகை பசி தீயன எல்லாம்*
நின்று இவ் உலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனோடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா* கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை*
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி* யாயவர்க்கே இறுமினே*.
இறுக்கும் இறை இறுத்து உண்ண* எவ் உலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக* அத் தெய்வ நாயகன் தானே*
மறுத் திரு மார்வன் அவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.
மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞானவிதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*.
மிக்க உலகுகள் தோறும்* மேவி கண்ணன் திருமூர்த்தி*
நக்க பிரானோடு* அயனும் இந்திரனும் முதலாகத்*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழ கிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
என் செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ இனி நம்மை*
என் செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறை கொண்டான்*
முன் செய்ய மாமை இழந்து* மேனி மெலிவு எய்தி*
என் செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பு ஊர்ந்தவே*.
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறை கொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்*
தீர்ந்த என் தோழீ!* என் செய்யும் ஊரவர் கவ்வையே?*
ஊரவர் கவ்வை எரு இட்டு* அன்னை சொல் நீர் படுத்து*
ஈர நெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
பேர் அமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
கார் அமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*
கடியன் கொடியன்* நெடிய மால் உலகம் கொண்ட-
அடியன்* அறிவு அரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவன் என்றே கிடக்கும் எல்லே*
துடி கொள் இடை மடத் தோழீ!* அன்னை என் செய்யுமே?
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
வலையுள் அகப்படுத்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலை கடல் பள்ளி அம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலை கொள் அகல் அல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கவும் ஆம் கொலோ?* தையலார் முன்பே*.
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து* மருது இடை-
போய் முதல் சாய்த்து* புள் வாய் பிளந்து களிறு அட்ட*
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை* எந் நாள்கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேண் உயர் வானத்து இருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடல் ஊர்துமே*.
யாம் மடல் ஊர்ந்தும்* எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
தூ மடல் தண் அம் துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
ஆம் மடம் இன்றி* தெருவுதோறு அயல் தையலார்*
நா மடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*.
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
ஆவி காப்பார் இனி யார்?* ஆழ் கடல் மண் விண் மூடி*
மா விகாரம் ஆய்* ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கு அல்லையே?*.
நீயும் பாங்கு அல்லைகாண்* நெஞ்சமே நீள் இரவும்*
ஓயும் பொழுது இன்றி* ஊழி ஆய் நீண்டதால்*
காயும் கடும் சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல்வினையேன் பெண் பிறந்தே*
பெண் பிறந்தார் எய்தும்* பெரும் துயர் காண்கிலேன் என்று*
ஒண் சுடரோன்* வாராது ஒளித்தான்* இம்மண்அளந்த-
கண் பெரிய செவ்வாய்* எம் கார் ஏறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்*
கார் அன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேர் என்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*.
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
காப்பார் ஆர் இவ் இடத்து?* கங்கு இருளின் நுண் துளி ஆய்*
சேண் பாலது ஊழி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்த்*
தூப் பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப் பால வல்வினையேன்* தெய்வங்காள்! என் செய்கேனோ?*
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்*
மெய் வந்து நின்று* எனது ஆவி மெலிவிக்கும்,*
கைவந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தைவந்த தண் தென்றல்* வெம் சுடரில் தான் அடுமே*
வெம் சுடரில் தான் அடுமால்* வீங்கு இருளின் நுண் துளி ஆய்*
அம் சுடர வெய்யோன்* அணி நெடும் தேர் தோன்றாதால்*
செஞ் சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*
நின்று உருகுகின்றேனே போல* நெடு வானம்*
சென்று உருகி நுண் துளி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்த பிரான் வாரான் என்று*
ஒன்று ஒருகால் சொல்லாது* உலகோ உறங்குமே*
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.
நின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.
மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.
முன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*
கன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்* கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்* கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்* கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்* கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்* காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,* காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்* செய்வான் நின்றனகளும் யானே என்னும்*
செய்து முன் இறந்தவும் யானே என்னும்* செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்* செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்* திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்* திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்* திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்* திறம்பாது என் திருமகள் எய்தினவே?*
இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்* இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்*
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்* இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*
இன ஆயர் தலைவனும் யானே என்னும்* இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?*
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்* இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்* உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்* உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்* உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?*
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?* உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்* உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்* உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்* உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.
கொடிய வினை யாதும் இலனே என்னும்* கொடிய வினை ஆவேனும் யானே என்னும்*
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்* கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்* கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்* கோலம் இல் நரகமும் யானே என்னும்*
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்* கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்*
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்* கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து* நான்
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கலநகர் உறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*.
கருளப் புள் கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமைகொண்டாய்*
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்து அங்கு இருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*
மாறு சேர் படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலம் கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று*
கைதவங்கள் செய்யும்* கரு மேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்* சிரீவரமங்கலநகர்*
கைதொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கு ஓர்-
முந்தைத் தாய் தந்தையே!* முழு ஏழ் உலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
அந்தம் இல் புகழாய்!* அடியேனை அகற்றேலே*.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை* நன்கு அறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்*
பகல் கதிர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கை வாணனே* என்றும்-
புகற்கு அரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*
புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!* எருது ஏழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கருமாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலி தண் சிரீவரமங்கை*
யுள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*.
ஆறு எனக்கு நின் பாதமே* சரண் ஆகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன்* எனது ஆவியும் உனதே*
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்* மலி தண் சிரீவரமங்கை*
நாறு பூந் தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*.
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)
என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*
செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பு ஆய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ் கண்டிருந்தே* தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே!* அறிவின் பயனே! அரிஏறே!*.
அரிஏறே! என் அம் பொன் சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரி ஏய்! பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம்போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே*.
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*.
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
என்று கொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புது மாதவி மீது அணவி*
தென்றல் மணம் கமழும்* திருவல்லவாழ் நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*
சூடு மலர்க்குழலீர்!* துயராட்டியேன் மெலிய*
பாடும் நல் வேத ஒலி* பரவைத் திரை போல் முழங்க*
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்* தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சு அணி மாடங்கள் மீது அணவும்* தண் திருவல்லவாழ்*
நச்சு அரவின் அணைமேல்* நம்பிரானது நல் நலமே*.
நல் நலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப் புகை*
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னல் அம் கட்டி தன்னை* கனியை இன் அமுதம் தன்னை*
என் நலம் கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*
காண்பது எஞ்ஞான்றுகொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண் குரல் வண்டினொடு* பசுந் தென்றலும் ஆகி எங்கும்*
சேண் சினை ஓங்கு மரச்* செழுங் கானல் திருவல்லவாழ்*
மாண் குறள் கோலப் பிரான்* மலர்த் தாமரைப் பாதங்களே?*
பாதங்கள்மேல் அணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந் தடத்துள்* உயர் தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாள் முகமும்* கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ் ஞாலம் உண்ட* நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*
நாள்தொறும் வீடு இன்றியே* தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*
ஆடு உறு தீங் கரும்பும்* விளை செந்நெலும் ஆகி எங்கும்*
மாடு உறு பூந் தடம் சேர்* வயல் சூழ் தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* நிலம் தாவிய நீள் கழலே?*
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழல் என்ன யாழும் என்ன* குளிர் சோலையுள் தேன் அருந்தி*
மழலை வரி வண்டுகள் இசை பாடும்* திருவல்லவாழ்*
சுழலின் மலி சக்கரப் பெருமானது* தொல் அருளே?*
தொல் அருள் நல் வினையால்* சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல் அருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருநகரம்*
நல் அருள் ஆயிரவர்* நலன் ஏந்தும் திருவல்லவாழ்*
நல் அருள் நம் பெருமான்* நாராயணன் நாமங்களே?*
நாமங்கள் ஆயிரம் உடைய* நம் பெருமான் அடிமேல்*
சேமம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமம் கொள் தென் நகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை* நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்* மாய மாவினை வாய் பிளந்ததும்*
மதுவை வார் குழலார்* குரவை பிணைந்த குழகும்*
அது இது உது என்னலாவன அல்ல* என்னை உன் செய்கை நைவிக்கும்*
முது வைய முதல்வா!* உன்னை என்று தலைப்பெய்வனே?*
பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட* பிள்ளைத் தேற்றமும்* பேர்ந்து ஓர் சாடு இறச்-
செய்ய பாதம் ஒன்றால்* செய்த நின் சிறுச் சேவகமும்*
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள* நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க*
பையவே நிலையும் வந்து* என் நெஞ்சை உருக்குங்களே*
கள்ள வேடத்தைக் கொண்டு போய்* புரம்புக்க ஆறும்* கலந்து அசுரரை-
உள்ளம் பேதம் செய்திட்டு* உயிர் உண்ட உபாயங்களும்*
வெள்ள நீர்ச் சடையானும்* நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்*
உள்ளம் உள் குடைந்து* என் உயிரை உருக்கி உண்ணுமே*.
உண்ண வானவர் கோனுக்கு* ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்*
வண்ண மால் வரையை எடுத்து* மழை காத்தலும்*
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து* கடந்து இடந்து மணந்த மாயங்கள்*
எண்ணும்தோறும் என் நெஞ்சு* எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.
நின்ற ஆறும் இருந்த ஆறும்/* கிடந்த ஆறும் நினைப்பு அரியன*
ஒன்று அலா உருவு ஆய்* அருவு ஆய நின் மாயங்கள்*
நின்று நின்று நினைக்கின்றேன்* உன்னை எங்ஙனம் நினைகிற்பன்* பாவியேற்கு-
ஒன்று நன்கு உரையாய்* உலகம் உண்ட ஒண் சுடரே!*
ஒண் சுடரோடு இருளுமாய்* நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து* என்-
கண் கொளாவகை* நீ கரந்து என்னைச் செய்கின்றன*
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்* என் கரிய மாணிக்கமே!* என் கண்கட்குத்-
திண் கொள்ள ஒரு நாள்* அருளாய் உன் திரு உருவே*.
திரு உருவு கிடந்த ஆறும்* கொப்பூழ்ச் செந்தாமரைமேல்* திசைமுகன்-
கருவுள் வீற்றிருந்து* படைத்திட்ட கருமங்களும்*
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின்று நெக்கு*
அருவி சோரும் கண்ணீர்* என் செய்கேன் அடியேனே!*
அடியை மூன்றை இரந்த ஆறும்* அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்-
முடிய* ஈர் அடியால்* முடித்துக்கொண்ட முக்கியமும் *
நொடியுமாறு அவை கேட்கும்தோறும்* என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்*
கொடிய வல்வினையேன்* உன்னை என்றுகொல் கூடுவதே?*
கூடி நீரைக் கடைந்த ஆறும்* அமுதம் தேவர் உண்ண* அசுரரை-
வீடும் வண்ணங்களே* செய்து போன வித்தகமும்*
ஊடு புக்கு எனது ஆவியை* உருக்கி உண்டிடுகின்ற* நின் தன்னை-
நாடும் வண்ணம் சொல்லாய்* நச்சு நாகு அணையானே!*
நாகு அணைமிசை நம் பிரான்* சரணே சரண் நமக்கு என்று* நாள்தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச் சடகோபன் மாறன்*
ஆக நூற்ற அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து* மகிழ்வு எய்துவர் வைகலுமே*.
வைகல் பூங் கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய் கொள் செந்நெல் உயர்* திருவண்வண்டூர் உறையும்*
கை கொள் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பி சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*. (2)
காதல் மென் பெடையோடு* உடன் மேயும் கரு நாராய்*
வேத வேள்வி ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட* நம் பெருமானைக் கண்டு*
பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*.
திறங்கள் ஆகி எங்கும்* செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்*
சிறந்த செல்வம் மல்கு* திருவண்வண்டூர் உறையும்*
கறங்கு சக்கரக் கைக்* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
இறங்கி நீர் தொழுது பணியீர்* அடியேன் இடரே*
இடர் இல் போகம் மூழ்கி* இணைந்து ஆடும் மட அன்னங்காள்!*
விடல் இல் வேத ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
கடலின் மேனிப்பிரான்* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
உடலம் நைந்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*
உணர்த்தல் ஊடல் உணர்ந்து* உடன் மேயும் மட அன்னங்காள்*
திணர்த்த வண்டல்கள்மேல்* சங்கு சேரும் திருவண்வண்டூர்*
புணர்த்த பூந் தண் துழாய்முடி* நம் பெருமானைக் கண்டு*
புணர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*
போற்றி யான் இரந்தேன்* புன்னைமேல் உறை பூங் குயில்காள்*
சேற்றில் வாளை துள்ளும்* திருவண்வண்டூர் உறையும்*
ஆற்றல் ஆழி அங்கை* அமரர் பெருமானைக் கண்டு*
மாற்றம் கொண்டருளீர்* மையல் தீர்வது ஒருவண்ணமே*
ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே*
செரு ஒண் பூம் பொழில் சூழ்* செக்கர் வேலைத் திருவண்வண்டூர்*
கரு வண்ணம் செய்யவாய்* செய்ய கண் செய்ய கை செய்யகால்*
செரு ஒண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*.
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்* ஒண் சிறு பூவாய்*
செருந்தி ஞாழல் மகிழ்* புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
பெரும் தண் தாமரைக்கண்* பெரு நீள் முடி நால் தடந்தோள்*
கருந் திண் மா முகில் போல்* திருமேனி அடிகளையே*
அடிகள் கைதொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*
விடிவை சங்கு ஒலிக்கும்* திருவண்வண்டூர் உறையும்*
கடிய மாயன் தன்னை* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்* வெறி வண்டினங்காள்*
தேறு நீர்ப் பம்பை* வடபாலைத் திருவண்வண்டூர்*
மாறு இல் போர் அரக்கன்* மதிள் நீறு எழச் செற்று உகந்த*
ஏறு சேவகனார்க்கு* என்னையும் உளள் என்மின்களே*
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்* அகல் ஞாலம் கொண்ட*
வன் கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்டூர்க்கு*
இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை யவர்க்கே* (2)
மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்* முன்பு நான் அது அஞ்சுவன்*
மன்உடை இலங்கை* அரண் காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்* இனி அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*. (2)
போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்* செவ்வாய் முறுவலும்*
ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே நோற்றோமேயாம்?*
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்* செவி ஓசை வைத்து எழ*
ஆகள் போகவிட்டு* குழல் ஊது போயிருந்தே*.
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!* நின்செய்ய-
வாய் இருங் கனியும் கண்களும்* விபரீதம் இந் நாள்*
வேய் இரும் தடம் தோளினார்* இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*
மா இரும் கடலைக் கடைந்த* பெருமானாலே?*
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு* அன்று நீ கிடந்தாய்* உன் மாயங்கள்-
மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*
வேலின் நேர் தடம் கண்ணினார்* விளையாடு சூழலைச் சூழவே நின்று*
காலி மேய்க்க வல்லாய்!* எம்மை நீ கழறேலே*.
கழறேல் நம்பீ!* உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்* திண் சக்கர-
நிழறு தொல் படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-
குழறு பூவையொடும்* கிளியோடும் குழகேலே*.
குழகி எங்கள் குழமணன்கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை*
பழகி யாம் இருப்போம்* பரமே இத் திரு அருள்கள்?*
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்* தேவிமை ஈதகுவார் பலர் உளர்*
கழகம் ஏறேல் நம்பீ!* உனக்கும் இளைதே கன்மமே*.
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது* கடல் ஞாலம் உண்டிட்ட*
நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழை பிழையே*
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அது கேட்கில் என் ஐம்மார்*
தன்ம பாவம் என்னார்* ஒரு நான்று தடி பிணக்கே*.
பிணக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்* கதிர் ஞான மூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார்* விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை*
உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*
உகவையால் நெஞ்சம் உள் உருகி* உன் தாமரைத் தடம் கண் விழிகளின்*
அக வலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாம் அடு சிறு சோறும் கண்டு* நின்-
முக ஒளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*.
நின்று இலங்கு முடியினாய்!* இருபத்தோர் கால் அரசு களைகட்ட*
வென்றி நீள்மழுவா!* வியன் ஞாலம் முன் படைத்தாய்!*
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்* ஆய்ச்சியோமே*.
ஆய்ச்சி ஆகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டு அழு-
கூத்த அப்பன் தன்னை* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்*
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2)
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடித்* திருவிண்ணகர்க் கண்டேனே*. (2)
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்*
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல்சூழ்* திருவிண்ணகர் நல் நகரே*
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்* நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்*
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டுகொள்மின்கள் கைதவமே*
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்*
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே*
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்*
பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்*
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே*.
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்* விண்ணோர்-
சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே*.
வன்சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன்சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என்சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே*
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே*. (2)
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்*
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே*. (2)
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்* குன்றம் ஒன்று ஏந்தியதும்*
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும் பல*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் நன் பகலும் தவிர்கிலன்* என்ன குறை எனக்கே?
கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்* கெண்டை ஒண்கண்*
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்* மணந்ததும் மற்றும்பல,*
மாயக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ் உலகம் நிகரே?
நிகர் இல் மல்லரைச் செற்றதும்* நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,*
சிகர மா களிறு அட்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*
புகர்கொள் சோதிப் பிரான்தன்* செய்கை நினைந்து புலம்பி என்றும்*
நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே?
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்*
சாவப் பால் உண்டதும்* ஊர் சகடம் இறச் சாடியதும்,*
தேவக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என் இனி வேண்டுவதே?
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்* வீங்கு இருள்வாய்-
பூண்டு* அன்று அன்னைப் புலம்ப போய்* அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்*
காண்டல் இன்றி வளர்ந்து* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்* எனக்கு என்ன இகல் உளதே?
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்* இமில் ஏறுகள் செற்றதுவும்,*
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்* உட்பட மற்றும்பல,*
அகல் கொள் வையம் அளந்த மாயன்* என்னப்பன் தன் மாயங்களே,*
பகல் இராப் பரவப் பெற்றேன்* எனக்கு என்ன மனப் பரிப்பே?
மனப் பரிப்போடு அழுக்கு* மானிட சாதியில் தான்பிறந்து,*
தனக்கு வேண்டு உருக்கொண்டு* தான் தன சீற்றத்தினை முடிக்கும்,*
புனத் துழாய் முடி மாலை மார்பன்* என் அப்பன் தன் மாயங்களே,*
நினைக்கும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
நீள் நிலத்தொடு வான் வியப்ப* நிறை பெரும் போர்கள் செய்து*
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்* உட்பட மற்றும்பல,*
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்* என் அப்பன் தன் மாயங்களே*
காணும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?
கலக்க ஏழ் கடல் ஏழ்* மலை உலகு ஏழும் கழியக் கடாய்*
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்* உட்பட மற்றும் பல,*
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்* இவை உடை மால்வண்ணனை,*
மலக்கும் நா உடையேற்கு* மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க* ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி,* மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட* நூற்றிட்டுப் போய்,*
விண்மிசைத் தன தாமமேபுக* மேவிய சோதிதன்தாள்,*
நண்ணி நான் வணங்கப்பெற்றேன்* எனக்கு ஆர்பிறர் நாயகரே?
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்* முழு ஏழ் உலகும்,* தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து* அவை ஆய் அவை அல்லனும் ஆம்,*
கேசவன் அடி இணைமிசைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆவர் துவள் இன்றியே.
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு* தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமினோ,*
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்* தாமரைத் தடம் கண் என்றும்,*
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க* நின்று நின்று குமுறுமே.
குமுறும் ஓசை விழவு ஒலித்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
அமுத மென் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்* மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,*
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க* நெக்கு ஒசிந்து கரையுமே.
கரை கொள் பைம் பொழில் தண்பணைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
உரை கொள் இன் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்* திசை ஞாலம் தாவி அளந்ததும்,*
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடும் கண் நீர் மல்க நிற்குமே.
நிற்கும் நால்மறைவாணர் வாழ்* தொலைவில்லிமங்கலம் கண்டபின்,*
அற்கம் ஒன்றும் அற உறாள்* மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,*
கற்கும் கல்வி எல்லாம்* கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,*
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து* உள் மகிழ்ந்து குழையுமே.
குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.
நோக்கும் பக்கம் எல்லாம்* கரும்பொடு செந்நெல்ஓங்கு செந்தாமரை,*
வாய்க்கும் தண் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
நோக்குமேல் அத்திசை அல்லால்* மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,*
வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
அன்னைமீர்! அணிமாமயில்* சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து*
என்ன வார்த்தையும் கேட்குறாள்* தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,*
முன்னம் நோற்ற விதிகொலோ* முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன்
சின்னமும் திருநாமமும்* இவள் வாயனகள் திருந்தவே.
திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிந்து
இருந்து வாழ் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
கருந் தடம் கண்ணி கைதொழுத* அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்*
இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'* என்று என்றே நைந்து இரங்குமே.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* 'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலைவில்லிமங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.
பின்னைகொல் நிலமாமகள்கொல்?* திருமகள்கொல் பிறந்திட்டாள்,*
என்ன மாயம்கொலோ?* இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,*
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்* தொலைவில்லிமங்கலம்-
சென்னியால் வணங்கும்* அவ் ஊர்த் திருநாமம்* கேட்பது சிந்தையே.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே
மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*
நீலக் கருநிற* மேக நியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி* இழந்தது சங்கே.
சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*
செங்கனிவாய்ச்* செய்ய தாமரைக் கண்ணற்கு,*
கொங்கு அலர் தண் அம் துழாய்* முடியானுக்கு,* என்
மங்கை இழந்தது* மாமை நிறமே.
நிறம் கரியானுக்கு* நீடு உலகு உண்ட,*
திறம் கிளர் வாய்ச்* சிறுக் கள்வன் அவற்கு,*
கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்
பிறங்கு இரும் கூந்தல்* இழந்தது பீடே.
பீடு உடை நான்முகனைப்* படைத்தானுக்கு,*
மாடு உடை வையம் அளந்த* மணாளற்கு,*
நாடு உடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்
பாடு உடை அல்குல்* இழந்தது பண்பே.
பண்பு உடை வேதம்* பயந்த பரனுக்கு,*
மண் புரை வையம் இடந்த* வராகற்கு,*
தெண் புனல் பள்ளி* எம் தேவ பிரானுக்கு,* என்
கண்புனை கோதை* இழந்தது கற்பே.
கற்பகக் கா அன* நல் பல தோளற்கு,*
பொன் சுடர்க் குன்று அன்ன* பூந்தண் முடியற்கு,*
நல் பல தாமரை* நாள் மலர்க் கையற்கு,* என்
வில் புருவக்கொடி* தோற்றது மெய்யே.
மெய் அமர் பல்கலன்* நன்கு அணிந்தானுக்கு,*
பை அரவின் அணைப்* பள்ளியினானுக்கு,*
கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்
தையல் இழந்தது* தன்னுடைச் சாயே.
சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*
மாயச் சகடம் உதைத்த* மணாளற்கு,*
பேயைப் பிணம்படப்* பால் உண் பிரானுக்கு,* என்
வாசக் குழலி* இழந்தது மாண்பே .
மாண்பு அமை கோலத்து* எம் மாயக் குறளற்கு,*
சேண் சுடர்க் குன்று அன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*
காண் பெரும் தோற்றத்து* எம் காகுத்த நம்பிக்கு,* என்
பூண் புனை மென்முலை* தோற்றது பொற்பே.
பொற்பு அமை நீள் முடிப்* பூந்தண் துழாயற்கு,*
மல் பொரு தோள் உடை* மாயப் பிரானுக்கு,*
நிற்பன பல் உருவாய்* நிற்கும் மாயற்கு,* என்
கற்பு உடையாட்டி* இழந்தது கட்டே.
கட்டு எழில் சோலை* நல் வேங்கடவாணனைக்,*
கட்டு எழில் தென் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
கட்டு எழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டு எழில் வானவர்* போகம் உண்பாரே.
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல் அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்ற* கற்பு வான் இடறி,*
சேரும் நல் வளம்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போரும் கொல் உரையீர்* கொடியேன் கொடி பூவைகளே!
பூவை பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,*
யாவையும் திருமால்* திருநாமங்களே கூவி எழும்,* என்
பாவை போய் இனித்* தண் பழனத் திருக்கோளூர்க்கே,*
கோவை வாய் துடிப்ப* மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?
கொல்லை என்பர்கொலோ* குணம் மிக்கனள் என்பர்கொலோ,*
சில்லை வாய்ப் பெண்டுகள்* அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோளூர்க்கே,*
மேல் இடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்* என் சிறுத்-
தேவிபோய்,* இனித்தன் திருமால்* திருக்கோளூரில்,*
பூ இயல் பொழிலும்* தடமும் அவன் கோயிலும் கண்டு,*
ஆவி உள் குளிர* எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?
இன்று எனக்கு உதவாது அகன்ற* இளமான் இனிப்போய்,*
தென் திசைத் திலதம் அனைய* திருக்கோளூர்க்கே
சென்று,* தன் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*
நின்று நின்று நையும்* நெடும் கண்கள் பனி மல்கவே.
மல்கு நீர்க் கண்ணொடு* மையல் உற்ற மனத்தினளாய்,*
அல்லும் நன் பகலும்* நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,*
செல்வம் மல்கி அவன் கிடந்த* திருக்கோளுர்க்கே,*
ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?
ஒசிந்த நுண் இடைமேல்* கையை வைத்து நொந்து நொந்து,*
கசிந்த நெஞ்சினளாய்* கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,*
ஒசிந்த ஒண் மலராள்* கொழுநன் திருக்கோளூர்க்கே,*
கசிந்த நெஞ்சினளாய்* எம்மை நீத்த எம் காரிகையே?
காரியம் நல்லனகள்* அவை காணில் என் கண்ணனுக்கு என்று,*
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்* கிடக்க இனிப் போய்,*
சேரி பல் பழி தூஉய் இரைப்ப* திருக்கோளூர்க்கே,*
நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைந்திலளே.
நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடும் கண் இளமான் இனிப்போய்*
அனைத்து உலகும் உடைய* அரவிந்தலோசனனைத்,*
தினைத்தனையும் விடாள்* அவன் சேர் திருக்கோளூர்க்கே,*
மனைக்கு வான் பழியும் நினையாள்* செல்ல வைத்தனளே.
வைத்த மா நிதியாம்* மதுசூதனையே அலற்றி,*
கொத்து அலர் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்து உரைப்பார்* திகழ் பொன் உலகு ஆள்வாரே.
பொன் உலகு ஆளீரோ?* புவனி முழுது ஆளீரோ?,*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில்வண்ணன் கண்ணன்,*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே?.
மையமர் வாள் நெடும்கண்* மங்கைமார் முன்பு என் கை இருந்து,*
நெய்யமர் இன் அடிசில்* நிச்சல் பாலொடு மேவீரோ,*
கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல் சொல்லி* கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?
ஓடிவந்து என் குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*
கூடிய வண்டினங்காள்!* குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்*
ஆடிய மா நெடும் தேர்ப்படை* நீறு எழச் செற்ற பிரான்,*
சூடிய தண் துளவம் உண்ட* தூமது வாய்கள் கொண்டே?
தூமதுவாய்கள் கொண்டுவந்து* என் முல்லைகள்மேல் தும்பிகாள்,*
பூ மது உண்ணச் செல்லில்* வினையேனைப் பொய்செய்து அகன்ற,*
மாமதுவார் தண்துழாய்முடி* வானவர் கோனைக் கண்டு,*
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டீர் நுங்கட்கே.
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்* யான் வளர்த்த கிளிகாள்,*
வெம் கண் புள் ஊர்ந்து வந்து* வினையேனை நெஞ்சம் கவர்ந்த*
செங்கண் கருமுகிலை* செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,*
எங்குச் சென்றாகிலும் கண்டு* இதுவோ தக்கவாறு என்மினே.
என் மின்னு நூல் மார்வன்* என் கரும் பெருமான் என் கண்ணன்,*
தன் மன்னு நீள் கழல்மேல்* தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,*
கல்மின்கள் என்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
செல்மின்கள் தீவினையேன்* வளர்த்த சிறு பூவைகளே!
பூவைகள் போல் நிறத்தன்* புண்டரீகங்கள் போலும் கண்ணன்,*
யாவையும் யாவரும் ஆய்* நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,*
மாவை வல் வாய் பிளந்த* மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,*
பாவைகள்! தீர்க்கிற்றிரே* வினையாட்டியேன் பாசறவே.
பாசறவு எய்தி இன்னே* வினையேன் எனை ஊழி நைவேன்?*
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!* அருள்செய்து ஒருநாள்,*
மாசு அறு நீலச்சுடர்முடி* வானவர் கோனைக் கண்டு,*
ஏசு அறும் நும்மை அல்லால்* மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.
பேர்த்து மற்று ஓர் களைகண்* வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,*
நீர்த் திரைமேல் உலவி* இரை தேரும் புதா இனங்காள்*
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்* விண்ணவர் கோனைக் கண்டு,*
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்* வைகல் வந்திருந்தே.
வந்திருந்து உம்முடைய* மணிச் சேவலும் நீரும் எல்லாம்,*
அந்தரம் ஒன்றும் இன்றி* அலர்மேல் அசையும் அன்னங்காள்,*
என் திரு மார்வற்கு என்னை* இன்னவாறு இவள் காண்மின் என்று,*
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்* மறுமாற்றங்களே.
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு* மதுசூத பிரான் அடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையும் ஒருபத்தும் வல்லார்*
ஊற்றின்கண் நுண் மணல்போல்* உருகாநிற்பர் நீராயே.
நீராய் நிலனாய்* தீயாய் காலாய் நெடுவானாய்,*
சீரார் சுடர்கள் இரண்டாய்* சிவனாய் அயனானாய்,*
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
மண்ணும் விண்ணும் மகிழ* குறள் ஆய் வலம் காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனை நான்* கண்டு உகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்* கிடந்து இருந்தும்,*
சாலப் பலநாள்* உகம்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திரு மா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பல நாள்* அடியேன் இன்னும் தளர்வேனோ?
தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல் வேறாப்,*
பிளந்து வீய* திருக்கால் ஆண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர் சூழ,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.
விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!* கடல் சேர்ப்பாய்,*
மண்மீது உழல்வாய்!* இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,*
எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!* எனது ஆவி,*
உண் மீது ஆடி* உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்* பரவை நிலம் எல்லாம்-
தாயோர்,* ஓர் அடியால்* எல்லா உலகும் தடவந்த-
மாயோன்,* உன்னைக் காண்பான்* வருந்தி எனைநாளும்,*
தீயோடு உடன்சேர் மெழுகாய்* உலகில் திரிவேனோ?
உலகில் திரியும் கரும கதி ஆய்* உலகம் ஆய்,*
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்* புற அண்டத்து,*
அலகில் பொலிந்த* திசை பத்து ஆய அருவேயோ,*
அலகில் பொலிந்த* அறிவிலேனுக்கு அருளாயே.
அறிவிலேனுக்கு அருளாய்* அறிவார் உயிர் ஆனாய்,*
வெறி கொள் சோதி மூர்த்தி!* அடியேன் நெடுமாலே,*
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*
பிறிது ஒன்று அறியா அடியேன்* ஆவி திகைக்கவே?
ஆவி திகைக்க* ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,*
பாவியேனைப்* பல நீ காட்டிப் படுப்பாயோ,*
தாவி வையம் கொண்ட* தடம் தாமரை கட்கே,*
கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ?
குறுகா நீளா* இறுதிகூடா எனை ஊழி,*
சிறுகா பெருகா* அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,*
மறு கால் இன்றி மாயோன்* உனக்கே ஆளாகும்,*
சிறு காலத்தை உறுமோ* அந்தோ தெரியிலே?
தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டர் ஆக்கும்* உலகம் உண்டாற்கே.
உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.
கூறாய் நீறு ஆய் நிலன் ஆகி* கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,*
சீறா எரியும் திரு நேமி வலவா!* தெய்வக் கோமானே,*
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும்* திருவேங்கடத்தானே,*
ஆறா அன்பில் அடியேன்* உன் அடிசேர் வண்ணம் அருளாயே.
வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!* மாய அம்மானே,*
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!* இமையோர் அதிபதியே,*
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்* திருவேங்கடத்தானே,*
அண்ணலே! உன் அடிசேர* அடியேற்கு ஆஆ என்னாயே!
ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்* அசுரர் வாழ் நாள்மேல்,*
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!* திரு மா மகள் கேள்வா-
தேவா* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
பூ ஆர் கழல்கள் அருவினையேன்* பொருந்துமாறு புணராயே.
புணரா நின்ற மரம் ஏழ்* அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,*
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்* நடுவே போன முதல்வா ஓ,*
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்* திருவேங்கடத்தானே,*
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்* சேர்வது அடியேன் எந்நாளே?
,எந்நாளே நாம் மண் அளந்த* இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,*
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி* இறைஞ்சி இனம் இனமாய்,*
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்* திருவேங்கடத்தானே,*
மெய்ந் நான் எய்தி எந்நாள்* உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!* இமையோர் அதிபதியே,*
கொடியா அடு புள் உடையானே!* கோலக் கனிவாய்ப் பெருமானே,*
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!* திருவேங்கடத்து எம் பெருமானே,*
நொடி ஆர் பொழுதும் உன பாதம்* காண நோலாது ஆற்றேனே
நோலாது ஆற்றேன் உன பாதம்* காண என்று நுண் உணர்வின்,*
நீல் ஆர் கண்டத்து அம்மானும்* நிறை நான்முகனும் இந்திரனும்,*
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்* திருவேங்கடத்தானே,*
மாலாய் மயக்கி அடியேன்பால்* வந்தாய் போலே வாராயே.
வந்தாய் போலே வாராதாய்!* வாராதாய் போல் வருவானே,*
செந்தாமரைக் கண் செங்கனிவாய்* நால் தோள் அமுதே! எனது உயிரே,*
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்* திருவேங்கடத்தானே,*
அந்தோ அடியேன் உன பாதம்* அகலகில்லேன் இறையுமே.
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்*
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாதபங்கயம்,*
நண்ணிலாவகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண் இலாப் பெறுமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்று உடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து* இராப்பகல் மோதுவித்திட்டு,*
உன்னை நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!* கடல் ஞாலம் காக்கின்ற*
மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே!
வேதியாநிற்கும் ஐவரால்* வினையேனை மோதுவித்து* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*
ஆதி ஆகி அகல் இடம் படைத்து* உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
சோதி நீள் முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே!
சூது நான் அறியாவகை* சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி* உன் அடிப்போது-
நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி* ஓர் ஆலின் நீள் இலை,*
மீது சேர் குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே!
தீர் மருந்து இன்றி ஐந்து நோய்* அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,*
நேர் மருங்கு உடைத்தா அடைத்து* நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,*
ஆர் மருந்து இனி ஆகுவார்?* அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,*
வேர் மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானே? ஓ!
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்* ஐம்புலன் இவை,
மண்ணுள் என்னைப் பெற்றால்* என் செய்யா மற்று நீயும் விட்டால்?*
பண்ணுளாய் கவி தன்னுளாய்!* பத்தியின் உள்ளாய்! பரமீசனே,* வந்து என்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓர் ஐவர் வன் கயவரை,*
என்று யான் வெல்கிற்பன்* உன் திருவருள் இல்லையேல்?,*
அன்று தேவர் அசுரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன் அமுதே!
இன் அமுது எனத் தோன்றி* ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த-
முன்னம் மாயம் எல்லாம்* முழு வேர் அரிந்து* என்னை உன்-
சின்னமும் திரு மூர்த்தியும்* சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,*
என் அம்மா! என் கண்ணா!* இமையோர் தம் குலமுதலே !
குலம் முதல் அடும் தீவினைக்* கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை*
வலம் முதல் கெடுக்கும்* வரமே தந்தருள்கண்டாய்,*
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்* நிற்பன செல்வன எனப்,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே!
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி* உன் இணைத் தாமரைகட்கு,*
அன்பு உருகி நிற்கும்* அது நிற்க சுமடு தந்தாய்,*
வன் பரங்கள் எடுத்து ஐவர்* திசை திசை வலித்து எற்றுகின்றனர்:*
முன் பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,* அப்
புண்டரீகக் கொப்பூழ்ப்* புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாட வல்லார்* வினை போம் கங்குலும் பகலே. (2)
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்,*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்* கண்ணீர்மல்க இருக்கும்,*
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்* முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,*
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!* என்கொலோமுடிகின்றது இவட்கே?
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் சிந்தித்தாயே?
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!* அலை கடல் கடைந்த ஆர்அமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே!
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே! என்னும்* தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்* பாவியேன் செயற்பாலதுவே.
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* என்தீர்த்தனே என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே
கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,*
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே நோக்குகேன்? என்னும்,*
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என்செய்கேன் என்திருமகட்கே?
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே. (2)
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்* மூவுலகுஆளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,*
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்* வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (2)
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி* தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும் அறா* திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)
நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,*
நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,*
தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்* தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,*
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே.
செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,*
சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
திங்களும் நாளும் விழாஅறாத* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.
இழந்த எம்மாமைத் திறத்துப் போன* என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*
உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?* ஓதக் கடல்ஒலி போல* எங்கும்
எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்* அன்னையர்காள் என்னை என்முனிந்தே?
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,*
கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த* கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,*
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே* காலம் பெறஎன்னைக் காட்டுமினே
காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*
ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஓவா,*
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரெயிற்கே.
பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*
பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி* பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?* என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி* கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு,* அலர் தூற்றிற்றுஅது முதலாக்* கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த* தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே
சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!* அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?* நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட* கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழன* தென்திருப்பேரெயில் மாநகரே.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,*
சிகர மணிநெடு மாடம் நீடு* தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
மகர நெடுங்குழைக் காதன் மாயன்* நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*
நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்* என் நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?
ஊழிதோறுஊழி உருவும் பேரும் செய்கையும்* வேறவன் வையம் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை* அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்* இவை திருப்பேரெயில் மேய பத்தும்,*
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்* அவர்அடிமைத் திறத்து ஆழியாரே. (2)
ஆழிஎழ* சங்கும் வில்லும்எழ,* திசை
வாழிஎழ* தண்டும் வாளும்எழ,* அண்டம்
மோழைஎழ* முடி பாதம்எழ,* அப்பன்
ஊழிஎழ* உலகம் கொண்டவாறே (2)
ஆறு மலைக்கு* எதிர்ந்துஓடும் ஒலி,* அரவு
ஊறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அமுதம்கொண்ட நான்றே.
நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே.
நாளும்எழ* நிலம் நீரும்எழ* விண்ணும்
கோளும்எழ* எரி காலும்எழ,* மலை
தாளும்எழ* சுடர் தானும்எழ,* அப்பன்
ஊளிஎழ* உலகம்உண்ட ஊணே
ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆண்உடைச் சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏண்உடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
காணுடைப் பாரதம்* கைஅறை போழ்தே
போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை
சூழும் எழுந்து* உதிரப்புனலா,* மலை
கீழ்து பிளந்த* சிங்கம்ஒத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே.
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே
நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்
நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்
நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே
அன்றுமண் நீர்எரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்
அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே
மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை
வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆநிரை பாடி* அங்கேஒடுங்க,* அப்பன்
தீமழை காத்து* குன்றம் எடுத்தானே
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓர்ஆயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே (2)
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புல்பா முதலா* புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நல்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே? (2)
நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,*
நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்காய்,*
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*
நாட்டை அளித்துஉய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே?
கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்* மற்றும் கேட்பரோ,*
கேட்பார் செவிசுடு* கீழ்மை வசைவுகளே வையும்,*
சேண்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி
தாள்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே?
தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*
நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே?
சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழல்அன்றி சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*
தாழப் படாமல்* தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,*
கேழல் திருஉருஆயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே?
கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
வாட்டம்இலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
ஈட்டம்கொள் தேவர்கள்* சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,*
கோட்டுஅங்கை வாமனன்ஆய்* செய்த கூத்துக்கள் கண்டுமே?
கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,*
வண்டுஉண் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*
இண்டைச் சடைமுடி* ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே?
செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,*
எல்லை இலாத பெரும்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அரிஉருஆய்* செய்த மாயம் அறிந்துமே?
மாயம் அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓர்ஐவர்க்குஆய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே?
வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு* இறப்புஇவை
பேர்த்து,* பெரும்துன்பம் வேர்அற நீக்கி* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே?
தெளிவுற்று வீவுஇன்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனைத்* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்,* அவர்
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே (2)
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனிஆளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2)
என்றுகொல் சேர்வது அந்தோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்நிலம் நீர்எரி கால்,* விண்உயிர்
என்றுஇவை தாம்முதலா* முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து* அவை காத்த எம்கூத்தாவோ!
காத்த எம்கூத்தாவோ!* மலைஏந்திக் கல்மாரி தன்னை,*
பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,*
ஏத்துஅரும் கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நீயே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்நீ,*
வெங்கதிர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
கொங்குஅலர் தண்அம் துழாய்முடி* என்னுடைக் கோவலனே?
என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆர்உயிரார்* எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
வந்துஎய்து மாறுஅறியேன்* மல்கு நீலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்புகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடஉறை* என்திரு மார்பனையே.
என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்நாமகளை* அகம்பால்கொண்ட நான்முகனை,*
நின்ற சசிபதியை* நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,*
வென்று புலன்துரந்த* விசும்புஆளியை காணேனோ!
ஆளியைக் காண்பரியாய்* அரிகாண் நரியாய்,* அரக்கர்
ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்குஒளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று,* பின்னும்
ஆள்உயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும் காண்டும்கொலோ?
காண்டும்கொலோ நெஞ்சமே!* கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கன் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீர்இலங்கைஅருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே?
ஏற்றுஅரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று* ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே
புக்க அரிஉருஆய்* அவுணன்உடல் கீண்டுஉகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரைத்,*
தொக்கு பல்லாண்டுஇசைத்து* கவரி செய்வர் ஏழையரே (2)
ஏழையர் ஆவிஉண்ணும்* இணைக் கூற்றம்கொலோ அறியேன்,*
ஆழிஅம் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2)
ஆட்டியும் தூற்றியும் நின்று* அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?*
மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*
ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.
வாலியதுஓர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*
நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுள்எல்லாம்* வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே.
இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,* மதனன்
தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,*
என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே
என்றும் நின்றேதிகழும்* செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்ஆவிஅடும்* அணி முத்தம்கொலோ? அறியேன்,*
குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதுஆவிஅடும்*
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே
உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்புஅணையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றும்இன்றி* அடுகின்றன காண்மின்களே
காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,*
நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*
சேண்மன்னு நால்தடம்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*
கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே
கோள்இழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,.*
கோள்இழைத் தண் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோள்இழையாஉடைய* கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன்,
கோள்இழை வாள் முகமாய்* கொடியேன் உயிர் கொள்கின்றதே?
கொள்கின்ற கோள் இருளைச்* சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,*
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?* அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தண்துழாய்* விரை நாற வந்து என் உயிரைக்,*
கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே.
நிற்றி முற்றத்துள் என்று* நெரித்த கையர் ஆய்*
என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*
முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே,*
ஒற்றுமை கொண்டது உள்ளம்* அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?
கட்கு அரிய பிரமன் சிவன்* இந்திரன் என்று இவர்க்கும்,*
கட்கு அரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்* இவையும் ஒரு பத்தும் வல்லார்,*
உட்கு உடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
அங்கண் மலர்த் தண் துழாய்முடி* அச்சுதனே! அருளாய்,*
திங்களும் ஞாயிறும் ஆய்* செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,*
பொங்கு பொழி மழை ஆய்* புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமும் ஆம்* இவை என்ன விசித்திரமே!
சித்திரத் தேர் வலவா!* திருச் சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனை ஓர் உகமும்* அவை ஆய் அவற்றுள் இயலும்,*
ஒத்த ஓண் பல் பொருள்கள்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!
கள் அவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,*
உள்ளதும் இல்லதும் ஆய்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வெள்ளத் தடம் கடலுள்* விட நாகு அணைமேல் மருவி,*
உள்ளப் பல் யோகு செய்தி* இவை என்ன உபாயங்களே!
பாசங்கள் நீக்கி* என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,* நீ
வாச மலர்த் தண் துழாய்முடி* மாயவனே! அருளாய்,*
காயமும் சீவனும் ஆய்* கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,*
மாயங்கள் செய்துவைத்தி* இவை என்ன மயக்குக்களே!
மயக்கா! வாமனனே!* மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,*
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்* அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,*
வியப்பு ஆய் வென்றிகள் ஆய்* வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,*
துயக்கு ஆய் நீ நின்றவாறு* இவை என்ன துயரங்களே!
துயரங்கள் செய்யும் கண்ணா!* சுடர் நீள் முடியாய் அருளாய்,*
துயரம் செய் மானங்கள் ஆய்* மதன் ஆகி உகவைகள் ஆய்,*
துயரம் செய் காமங்கள் ஆய்* துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவை என்ன சுண்டாயங்களே.
என்ன சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,*
இன்னது ஓர் தன்மையை என்று* உன்னை யாவர்க்கும் தேற்றரியை,*
முன்னிய மூவுலகும்* அவை ஆய் அவற்றைப் படைத்து,*
பின்னும் உள்ளாய்! புறத்தாய்*! இவை என்ன இயற்கைகளே!
என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
துன்னு கரசரணம் முதலாக* எல்லா உறுப்பும்,*
உன்னு சுவை ஒளி* ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,*
உன்னை உணரவுறில்* உலப்பு இல்லை நுணுக்கங்களே.
இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிது என்னும் வண்ணம்*
தொல்லை நல் நூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*
அல்லித் துழாய் அலங்கல்* அணி மார்ப என் அச்சுதனே,*
வல்லது ஓர் வண்ணம் சொன்னால்* அதுவே உனக்கு ஆம்வண்ணமே.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று* என்று அறிவது அரிய அரியை,*
ஆம் வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த*
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம் வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பனோ? (2)
என்சொல்லி நிற்பன்* என் இன் உயிர் இன்று ஒன்றாய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி என்பித்து,*
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,* என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே.
ஆம் முதல்வன் இவன் என்று* தன் தேற்றி,* என்
நா முதல் வந்து புகுந்து* நல் இன் கவி,*
தூ முதல் பத்தர்க்குத்* தான் தன்னைச் சொன்ன,* என்
வாய் முதல் அப்பனை* என்று மறப்பனோ?
அப்பனை என்று மறப்பன்* என் ஆகியே,*
தப்புதல் இன்றி* தனைக் கவி தான் சொல்லி,*
ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே?
சீர் கண்டுகொண்டு* திருந்து நல் இன்கவி,*
நேர்பட யான் சொல்லும்* நீர்மை இலாமையில்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைப்,*
பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.
இன் கவி பாடும்* பரம் கவிகளால்,*
தன் கவி தான் தன்னைப்* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடன் ஆக்கி* என்னால் தன்னை,*
வன் கவி பாடும்* என் வைகுந்த நாதனே.
வைகுந்த நாதன்* என வல்வினை மாய்ந்து அறச்,*
செய் குந்தன் தன்னை* என் ஆக்கி என்னால் தன்னை,*
வைகுந்தன் ஆகப்* புகழ வண் தீம்கவி,*
செய் குந்தன் தன்னை* எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!
ஆர்வனோ ஆழிஅங்கை* எம் பிரான் புகழ்,*
பார் விண் நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைச்,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே?
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்* திருமாலின் சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,*
மறப்பு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
உறப் பல இன்கவி* சொன்ன உதவிக்கே?
உதவிக் கைம்மாறு* என் உயிர் என்ன உற்று எண்ணில்,*
அதுவும் மற்று ஆங்கவன்* தன்னது என்னால் தன்னைப்,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றும் இல்லை* செய்வது இங்கும் அங்கே.
இங்கும் அங்கும்* திருமால் அன்றி இன்மை கண்டு,*
அங்ஙனே வண் குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓர் ஆயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2)
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி* அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*
ஆகும்பரிசு நிமிர்ந்த* திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து* கைதொழக் கூடும்கொலோ!
கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!
வாய்க்கும்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்* வயல் சூழ் திருவாறன்விளை,*
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்* வடமதுரைப் பிறந்த,*
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்* மலர் அடிப்போதுகளே.
மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்* இருத்தி வணங்க,*
பலர் அடியார் முன்பு அருளிய* பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு* மதிள் திருவாறன்விளை,*
உலகம் மலி புகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்* தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை* அணி நெடும் தோள் புணர்ந்தான்,*
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப* உள்ளே இருக்கின்ற பிரான்,*
நின்ற அணி திருவாறன்விளை என்னும்* நீள் நகரம் அதுவே.
நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்* திருவாறன்விளை,*
நீள் நகரத்து உறைகின்ற பிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய* வெம் போர்கள் செய்து.,*
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்* சரண் அன்றி மற்று ஒன்று இலமே.
அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று* அகல் இரும் பொய்கையின்வாய்,*
நின்று தன் நீள் கழல் ஏத்திய* ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*
சென்று அங்கு இனிது உறைகின்ற* செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?* தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி* தெளி விசும்பு ஏறலுற்றால்,*
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்* அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*
யாவரும் வந்து வணங்கும் பொழில்* திருவாறன்விளை அதனை,*
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்* என்னும் என் சிந்தனையே.
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவபிரான் அறியும்,*
சிந்தையினால் செய்வ தான் அறியாதன* மாயங்கள் ஒன்றும் இல்லை,*
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத்தேவர் குழுவணங்கும்,*
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை* தீர்த்தனுக்கு அற்ற பின்னே.
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களைத்,* தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2)
தேவிமார் ஆவார் திருமகள்பூமி* ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி* வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!* காணுமாறு அருளாய் (2)
காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி* கண்ணநீர் அலமர* வினையேன்
பேணுமாறுஎல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா!
எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்உயிர்ச் சிறுவனே* அசோதைக்கு
அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கைஉகிர் ஆண்ட எம்கடலே,*
அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே?
உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை* அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆர்உயிரேயோ!
ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த*
பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்* தேவர்க்கும்தேவாவோ*
ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*
அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே* அவற்றுஅவை கருமமும் நீயே*
பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்* அவையுமோ நீ இன்னேஆனால்*
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலன் இறந்ததும் நீயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேஆனால்*
சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று* அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே நெய்யின் சுவையே!* கடலினுள் அமுதமே அமுதில்*
பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேர்ஆயா!
மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்கின்ற*
குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்உயர்த்தாய்*
பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.
யானும் நீதானே ஆவதோமெய்யே* அருநரகுஅவையும் நீ ஆனால்*
வான்உயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனினும்,*
யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*
வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே.
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்*
தோள்களை ஆரத்தழுவி என்உயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!
பெரிய அப்பனை பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை* முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (2)
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்* தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணனை வேண்டிச்சென்றே. (2)
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொள்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடும் மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே?
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவனை ஆதரித்தே.
ஆழிவலவனை ஆதரிப்பும்* ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்உடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக* நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்*
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்* தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்அளவன்று இமையோர் தமக்கும்*
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்கின்றமாலே.
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று*
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதுஆணை* உங்களோடு எங்கள் இடைஇல்லையே.
இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை* அன்றி அவன்அவை காண்கொடானே.
காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிறைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்
என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை*
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பால்மதி ஏந்தி ஓர்கோலநீல*
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்* நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்* இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்*
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி* இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)
அங்கும் இங்கும்* வானவர் தானவர் யாவரும்*
எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)
சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*
மரணம் தோற்றம்* வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*
கரணப்பல்படை* பற்றறஓடும் கனல்ஆழி*
அரணத்திண் படைஏந்திய* ஈசற்கு ஆளாயே.
ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*
வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றுஇல்லை*
தாளும் தோளும்* கைகளைஆரத் தொழக்காணேன்*
நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே
ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருஆகி*
ஆலம்பேர்இலை* அன்னவசம்செய்யும் அம்மானே*
காலம்பேர்வதுஓர்* கார்இருள் ஊழி ஒத்துஉளதால்* உன்
கோலம்கார்எழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே
கொடியார்மாடக்* கோளூர்அகத்தும் புளியங்குடியும்*
மடியாதுஇன்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ? அன்றேல்* இப்
படிதான் நீண்டுதாவிய* அசைவோ? பணியாயே.
பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேஆம்*
அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*
தணியா வெம்நோய்* உலகில் தவிர்ப்பான்* திருநீல
மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே.
வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த* என்
திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*
ஒருபாடுஉழல்வான்* ஓர்அடியானும் உளன்என்றே.
என்றே என்னை* உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்*
நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*
குன்றுஏழ் பார்ஏழ்* சூழ்கடல்ஞாலம் முழுஏழும்*
நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே!
திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்* எம்
பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார்? பேசிஎன்*
ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்*
கருமாமேனியன்! என்பன்* என்காதல் கலக்கவே.
கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*
துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*
மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*
உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே.
உரையா வெம்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாடம்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்* பொருந்துமூவுருவன் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-
அங்கு அமர்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே?
என்அமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதுஇல்லை எனக்கே.
பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்அம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய* மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடிஇணை அல்லதுஓர் அரணே.
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருள்ஆகிலும்* அவனை
அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானை* தடம்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.
திகழ என்சிந்தையுள் இருந்தானை* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை* அசுரர்வன்கையர் வெம்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*
இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே* புகழ்வுஇல்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்* கூரியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி* அவர்க்குஅருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)
மாயக்கூத்தா!வாமனா!* வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களா* சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே!* ஒருநாள் காண வாராயே.
'காணவாராய்' என்றுஎன்று* கண்ணும்வாயும் துவர்ந்து* அடியேன்
நாணி நல்நாட்டு அலமந்தால்* இரங்கி ஒருநாள் நீஅந்தோ*
காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்* கருமாமாணிக்க*
நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே!
'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்*
கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
படிசேர்மகரக் குழைகளும்* பவளவாயும் நால்தோளும்*
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே.
தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்*
தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*
மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*
தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே.
சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*
எல்லைஇல் சீர்இள நாயிறு* இரண்டுபோல் என்உள்ளவா!*
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே? ஆழிசூழ்*
மல்லை ஞாலம் முழுதுஉண்ட* மாநீர்க் கொண்டல் வண்ணனே!
'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா* என்
அண்டவாணா!' என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*
விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*
தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றாயே.
வந்து தோன்றாய்அன்றேல்* உன் வையம்தாய மலர்அடிக்கீழ்*
முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*
செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாய்ஓர் கருநாயிறு*
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததுஒக்கும் அம்மானே!
ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்*
புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?
'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப் படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்*
அதுவே கொடியா உயர்த்தானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*
மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீஇன்னே*
சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவும்ஆய பெருமானே*
கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுள்எங்கும் கண்டுகொள்*
இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே?
'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?' என்றுஎன்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)
எல்லியும் காலையும்* தன்னை நினைந்துஎழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்* முடிஅப்பன்ஊர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே (2)
திருக்கடித் தானமும்* என்னுடையச் சிந்தையும்*
ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*
செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*
உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே.
ஒருவர் இருவர் ஓர்* மூவர்என நின்று*
உருவுகரந்து* உள்ளும்தோறும் தித்திப்பான்*
திருஅமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவிஉறைகின்ற* மாயப்பிரானே.
மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்துஅற*
நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே.
கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதனோடும் என்நெஞ்சகம்*;
கோயில்கொள்* தெய்வம்எல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே.
கூத்தஅம்மான்* கொடியேன்இடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுசூத அம்மான்உறை*
பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*
ஏத்தநில்லா* குறிக்கொள்மின் இடரே.
கொண்டமின் இடர்கெட* உள்ளத்து கோவிந்தன்*
மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*
மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*
நண்ணு திருக்கடித்தான நகரே
தான நகர்கள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
வான்இந் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் நெஞ்சும்* திருக்கடித்
தான நகரும்* தனதாயப் பதியே.
தாயப்பதிகள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தான்உறை*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆயர்க்குஅதிபதி* அற்புதன்தானே.
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்* நான்மறை நின்றுஅதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. (2)
சோலைத் திருக்கடித்தானத்து* உறைதிரு
மாலை* மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்அடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்துஓர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை* வாமனன்தான் புகுந்து* என்தன்
கருத்தைஉற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சுஆளும்*
திருந்தாத ஓர்ஐவரைத்* தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தரும்தான் அருள்தான்* இனியான் அறியேனே. (2)
அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்உள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுஅல்லால்*
பொருள் தான்எனில்* மூவுலகும் பொருளல்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.
மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமரர்க்கு* அரிஏறு எனதுஅம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதுஎன்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே.
திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து என்உள்-
திகழும்* மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்*
புகழும் புகழ்* மற்றுஎனக்கும் ஓர்பொருளே?
பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத்
தருமேல்* பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*
கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே.
செவ்வாய்உந்தி* வெண்பல் சுடர்க்குழை தம்மோடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுஉள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றுஅருளே.
அறியேன் மற்றருள்* என்னைஆளும் பிரானார்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*
சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்* தன்
நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே.
வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் எவரும்*
வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்* தம்
வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே.
வைத்தேன் மதியால்* எனதுஉள்ளத்துஅகத்தே*
எய்த்தே ஒழிவேன்அல்லேன்* என்றும் எப்போதும்*
மொய்த்துஏய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்துஏய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே
சுடர்ப்பாம்பணை நம்பரனை* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து* இப்பத்தும் சன்மம்
விடத்* தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே (2)
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து* உள்ளே
வெண்பல் இலகு சுடர்இலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாள்ஆழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)
அடியேன்உள்ளான் உடல்உள்ளான்* அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்*
படியேஇது என்றுஉரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்வில்உம்பர் ஒருவனே
உணர்வில்உம்பர் ஒருவனை* அவனது அருளால் உறற்பொருட்டு* என்
உணர்வின்உள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்று உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி* யானும் தானாய் ஒழிந்தானே.
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் எவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும்ஆகித் தித்தித்து* என்
ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுஇதுஎன்று*
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதும்இன்றித் தேய்ந்துஅற்று*
நன்று தீதுஎன்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே
நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*
சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்* செற்றுக் களைந்து பசைஅற்றால்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே.
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றுஇன்றி* யாதும் இலிகள்ஆகிற்கில்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறாது*
'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கு அறிமுயங்க* தாம் போகும் போது* உன்மத்தர்போல்
பித்தேஏறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-
ஒத்தேசென்று* அங்குஉள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்உறைப்பே.
கூடிற்றாகில் நல்உறைப்பு* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*
ஓடித் திரியும் யோகிகளும்* உளரும்இல்லை அல்லரே.
உளரும்இல்லை அல்லராய்* உளராய்இல்லை ஆகியே*
உளர்எம்ஒருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே.
தெருளும் மருளும் மாய்த்து* தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்*
அருளிஇருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்* திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்* ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்அண்ணல் கருமாணிக்கமே (2)
கருமாணிக்க மலைமேல்* மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகால்உடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்* அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ. (2)
அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுஉலவும்*
துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நீள்முடிஆரம் பல்கலன்* தான்உடை எம்பெருமான்*
புன்னைஅம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.
புகழும் இவள்நின்று இராப்பகல்* பொருநீர்க்கடல் தீப்பட்டு* எங்கும்
திகழும்எரியொடு செல்வதுஒப்ப* செழும்கதிர்ஆழிமுதல்*
புகழும் பொருபடை ஏந்தி* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*
திகழும் மணிநெடு மாடம்நீடு* திருப்புலியூர் வளமே.
ஊர்வளம்கிளர் சோலையும்* கரும்பும் பெரும்செந்நெலும் சூழ்ந்து*
ஏர்வளம்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்* தேவபிரான்*
பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்* இன்று இப்புனைஇழையே.
புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடம்தாமரை மலரும்* தண் திருப்புலியூர்*
முனைவன் மூவுலகுஆளி* அப்பன் திருஅருள் மூழ்கினளே.
திருஅருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*
திருஅருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தஉள*
திருஅருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்புலியூர்*
திருஅருள் கமுகுஒண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே
மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க* வீங்குஇளம்தாள்கமுகின்*
மல்இலை மடல்வாழை* ஈன்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*
புல்இலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்புலியூர்*
மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே
மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*
திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்புலியூர்*
படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே.
பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*
விரவார்இசை மறை வேதியர்ஒலி* வேலையின் நின்றுஒலிப்ப*
கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றுஅலரும்*
புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழ்அன்றிமற்றே
அன்றி மற்றோர் உபாயம்என்* இவள்அம்தண் துழாய்கமழ்தல்*
குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரை* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்பட்டதே.
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்அடிமை*
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார்* அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)
நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்* அவனைக் கருத வஞ்சித்து*
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார் அடியே* கூடும் இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே?. (2)
வியன் மூவுலகு பெறினும்போய்* தானே தானே ஆனாலும்*
புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்* புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*
சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி* இம்மையே
பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே?
உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*
சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*
நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே.
இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!* இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த*
செங்கோலத்த பவளவாய்ச்* செந்தாமரைக்கண் என்அம்மான்*
பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்* புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*
அங்குஏய் மலர்கள் கையவாய்* வழிபட்டுஓட அருளிலே?
வழிபட்டுஓட அருள்பெற்று* மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்*
சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*
இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து* தன்சீர் யான்கற்று*
மொழிபட்டுஓடும் கவிஅமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே?
நுகர்ச்சி உறுமோ மூவுலகின்* வீடு பேறு தன்கேழ்இல்*
புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிர்எல்லாம்*
தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்* பெரிய தனிமாப் புகழே?
தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*
முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*
தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவன்அடியார்*
நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே
நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து* தன்
தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*
நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபல்நாயிற்றின்*
கோளும்உடைய மணிமலைபோல்* கிடந்தான் தமர்கள் கூட்டமே.
தமர்கள் கூட்ட வல்வினையை* நாசம் செய்யும் சதுமூர்த்தி*
அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டுஆதி பல்படையன்*
குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதுஇல் அடியார்தம்*
தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே
வாய்க்க தமியேற்கு* ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்ஆழிக்கை என்அம்மான்*
நீக்கம்இல்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்* அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டீர் மக்களே. (2)
கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதுஅல்லால்* காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே (2)
துணையும் சார்வும்ஆகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அணையவந்த ஆக்கம்உண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த* எம்கார்முகிலைப்*
புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர்பொருளே.
பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்* போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்* என்னே என்பாரும்இல்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர்அரணே.
அரணம்ஆவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பர்ஆவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்துஎன்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர் சதிரே.
சதுரம்என்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றுஒன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர் இன்பமே.
இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சொல்லிஉய்யப் போகல்அல்லால்* மற்றொன்றுஇல்லைசுருக்கே.
மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்துஎவ்உயிர்க்கும்*
சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்* கண்டீர்கள்அந்தோ!*
குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*
குற்றம்இல்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே.
வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!* மாயவன் அடிபரவிப்*
போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மைஇலாதவர்க்கு*
வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
வீழ்துணையாப் போம்இதனில்* யாதும்இல்லைமிக்கதே.
யாதும்இல்லை மிக்குஅதனில்* என்றுஎன்று அதுகருதி*
காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்க்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*
தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே.
கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ*
எண்ணவேண்டா நும்மதுஆதும்* அவன்அன்றிமற்றுஇல்லையே.
ஆதும்இல்லை மற்றுஅவனில்* என்றுஅதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனைக்* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மை ஆளுடையார்கள் பண்டே. (2)
பண்டைநாளாலே நின்திருஅருளும்* பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
குடிக்கிடந்து ஆக்கம்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து* உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி* நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை* திருப்புளிங் குடிக்கிடந்தானே.
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருஉடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே* என்னைஆள்வாய் எனக்குஅருளி*
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவைஊர்ந்தானே!
காய்சினப்பறவைஊர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல*
மாசினமாலி மாலிமான்என்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி* எம்இடர்கடிவானே!
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!* இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து* நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்* இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்* தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்* அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர* புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்* செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே!
கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே.
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்* அடிஇணை உள்ளத்துஓர்வாரே (2)
ஓராயிரமாய்* உலகுஏழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுஉடையன்*
காராயின* காளநல்மேனியினன்*
நாரயணன்* நங்கள்பிரான்அவனே. (2)
அவனேஅகல்ஞாலம்* படைத்துஇடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
அவனேஅவனும்* அவனும்அவனும்*
அவனே மற்றுஎல்லாமும்* அறிந்தனமே.
அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே.
மருந்தேநங்கள்* போக மகிழ்ச்சிக்குஎன்று*
பெரும்தேவர் குழாங்கள்* பிதற்றும்பிரான்*
கரும்தேவன்எம்மான்* கண்ணன்விண்உலகம்*
தரும்தேவனைச்* சோரேல்கண்டாய்மனமே!
மனமே! உன்னை* வல்வினையேன்இரந்து*
கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
புனம்மேவிய* பூந்தண்துழாய் அலங்கல்*
இனம்ஏதும்இலானை* அடைவதுமே.
அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*
மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*
கடைவதும்* கடலுள்அமுதம்* என்மனம்
உடைவதும்* அவற்கேஒருங்காகவே.
ஆகம்சேர்* நரசிங்கம்அதுஆகி ஓர்*
ஆகம்வள்உகிரால்* பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு என்மனம்*
ஏகம்எண்ணும்* இராப்பகல்இன்றியே (2)
இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,
சென்றதேவர்கள்* கைதொழுவார்களே.
தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*
எழுதும்என்னும்இது* மிகைஆதலின்*
பழுதுஇல்தொல்புகழ்ப்* பாம்புஅணைப்பள்ளியாய்*
தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே
தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
வாள்கொள் நீளமழுஆளி* உன்ஆகத்தான்*
ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
நாளும் என்புகழ்கோ* உனசீலமே?
சீலம்எல்லைஇலான்* அடிமேல்* அணி
கோலம்நீள்* குருகூர்ச்சடகோபன்* சொல்
மாலைஆயிரத்துள்* இவை பத்தினின்
பாலர்* வைகுந்தம்ஏறுதல் பான்மையே (2)
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே. (2)
கண்ணேஉன்னைக் காணக்கருதி* என்நெஞ்சம்
எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றுஇயம்பும்*
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை*
நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே
அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்உள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்.
பிழைக்கின்றதுஅருள்என்று* பேதுறுவனே
உறுவது இதுஎன்று* உனக்கு ஆள்பட்டு* நின்கண்
பெறுவது எதுகொல்என்று* பேதையேன் நெஞ்சம்*
மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதுஅரிய* அரியாய அம்மானே!
அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானை* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*
கரியான்கழல் காணக்* கருதும் கருத்தே.
கருத்தே உன்னைக்* காணக்கருதி* என்நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்குஎல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்து
ஒருத்தா* உன்னைஉள்ளும்* என்உள்ளம் உகந்தே
உகந்தேஉன்னை* உள்ளும் என்உள்ளத்து அகம்பால்*
அகம்தான் அமர்ந்தே* இடம்கொண்ட அமலா*
மிகும்தானவன் மார்வுஅகலம்* இருகூறா*
நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!
உருவாகிய* ஆறுசமயங்கட்குஎல்லாம்*
பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியை* தேவர்கட்குஎல்லாம்*
கருவாகிய கண்ணனை* கண்டுகொண்டேனே.
கண்டுகொண்டு* என்கண்இணை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றோடுஅறுத்து*
தொண்டர்க்கு அமுதுஉண்ணச்* சொல்மாலைகள் சொன்னேன்*
அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.
அடியான் இவன்என்று* எனக்குஆர்அருள்செய்யும்
நெடியானை* நிறைபுகழ் அம்சிறைப்* புள்ளின்
கொடியானை* குன்றாமல்* உலகம்அளந்த
அடியானை* அடைந்து அடியேன்* உய்ந்தவாறே
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறுஆர்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்உயிர்க்கே (2)
இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு* இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)
இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்துஏங்குதிர்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்*
அத்தனைஆம் இனி* என்உயிர் அவன்கையதே.
அவன்கையதே எனதுஆர்உயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்* புடைசூழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ*
எவன்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே.
கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேல்கிளை கொள்ளேல்மின்* நீரும் சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்குஆங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுஉழலுமே
அந்தரம் நின்றுஉழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நும்திறத்துஏதும் இடைஇல்லை* குழறேல்மினோ*
இந்திரஞாலங்கள் காட்டி* இவ்ஏழ்உலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான்.
நன்குஎண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*
இன்குரல் நீ மிழற்றேல்* என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்* கண்ணன்கை காலினன்*
நின்பசும்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான்.
கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரைக் கண்செவ்வாய்*
வாட்டம்இல்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
கோட்டிய வில்லொடு* மின்னும் மேகக்குழாங்கள்காள்*
காட்டேல்மின் நும்உரு* என்உயிர்க்கு அதுகாலனே.
உயிர்க்குஅது காலன்என்று* உம்மை யான்இரந்தேற்குநீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
தயிர்ப்பழஞ்சோற்றொடு* பால்அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்* பண்புஉடையீரே!
பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேல்மின்*
புண்புரை வேல்கொடு* குத்தால்ஒக்கும் நும்இன்குரல்
தண்பெருநீர்த் தடம்தாமரை* மலர்ந்தால்ஒக்கும்
கண்பெரும்கண்ணன்* நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான்
எழநண்ணி நாமும்* நம்வானநாடனோடு ஒன்றினோம்*
பழன நல்நாரைக் குழாங்கள்காள்* பயின்றுஎன்இனி*
இழைநல்லஆக்கையும்* பையவே புயக்குஅற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்ஊழிக்குத்*
தன்புகழ்ஏத்தத்* தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்ஆயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே (2)
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2)
நினைதொறும் சொல்லும்தொறும்* நெஞ்சு இடிந்துஉகும்*
வினைகொள்சீர் பாடிலும்* வேம்எனதுஆர்உயிர்*
சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பா*
நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே.
நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து* என்னை
ஈர்மைசெய்து* என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்*
சீர்மல்குசோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன்.
அறிகிலேன் தன்னுள்* அனைத்துஉலகும் நிற்க*
நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்அப்பன்*
சிறியவென்னாயிருண்ட திருஅருளே.
திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*
உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
திருவளர்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கருவளர்மேனி* என்கண்ணன் கள்வங்களே.
என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*
அம்கண்ணன் உண்ட* என்ஆர்உயிர்க்கோதுஇது*
புன்கண்மை எய்தி* புலம்பி இராப்பகல்*
என்கண்ணன் என்று* அவன்காட்கரைஏத்துமே
காட்கரைஏத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*
வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*
ஆட்கொள் வான்ஒத்து* என்னுயிருண்ட மாயனால்*
கோள்குறைபட்டது* என்னாருயிர் கோள்உண்டே.
கோள்உண்டான் அன்றிவந்து* என்உயிர் தான்உண்டான்*
நாளும்நாள்வந்து* என்னை முற்றவும் தான்உண்டான்*
காளநீர்மேகத்* தென்காட்கரை என்அப்பற்கு*
ஆள்அன்றேபட்டது* என்ஆர்உயிர் பட்டதே.
ஆருயிர் பட்டது* எனதுஉயிர் பட்டது*
பேர்இதழ்த் தாமரைக்கண்* கனிவாயதுஓர்*
கார்எழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
சீர்எழில் நால்தடம்தோள்* தெய்வ வாரிக்கே.
வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்' என்று*
ஆர்வுஉற்ற என்னை ஒழிய* என்னில் முன்னம்
பாரித்துத்* தான்என்னை* முற்றப் பருகினான்*
கார்ஒக்கும்* காட்கரைஅப்பன் கடியனே.
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவுஎய்தி* நாசம்கண்டீர்கள் எம்கானலே (2)
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடுஅங்கு உறைவார்க்குத்* தக்கிலமே! கேளீரே.
தக்கிலமே கேளீர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்துஅலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்துஇலைப்போலும்* திருமேனி அடிகளுக்கே.
திருமேனி அடிகளுக்குத்* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்குஅருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளிஅகற்றி* தெளிவிசும்பு கடியுமே?
தெளிவிசும்பு கடிதுஓடி* தீவளைத்து மின்இலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துஉறையும்*
துளிவார்கள்குழலார்க்கு* என்தூதுஉரைத்தல் செப்புமினே.
தூதுஉரைத்தல் செப்புமின்கள்* தூமொழிவாய் வண்டுஇனங்காள்*
போதுஇரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துஉறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுஉரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.
எனக்குஒன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்குஇன்பம் படமேவும்* வண்டுஇனங்காள்! தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துஉறையும்*
புனக்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.
பூந்துழாய் முடியார்க்கு* பொன்ஆழிக் கையாருக்கு*
ஏந்துநீர் இளம்குருகே!* திருமூழிக்களத்தாருக்கு*
ஏந்துபூண் முலைபயந்து* என்இணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்* தகவுஅன்றுஎன்று உரையீரே
தகவுஅன்றுஎன்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகஇன்பம் படமேவும்* மேல்நடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவுஎய்தி* மேகலையும் ஈடுஅழிந்து* என்
அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
எவைகொல் அணுகப் பெறும்நாள்?'* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
'ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)
மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!* வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ*
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!* செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்* ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு* புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! (2)
புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!* பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து- அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்* இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?
இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்* இணைமுலை நமுக நுண்இடை நுடங்க*
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து* துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்* தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்*
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்* பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!
பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!* வாடை தண்வாடை வெவ்வாயாலோ*
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!* மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த* எம்பெண்மைஅம் பூஇதுதாலோ*
ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!* யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*
யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!* ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,*
யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!* அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*
யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்* எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ*
யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்? அவனுடை அருள் பெறும்போது அரிதே.
அவனுடைஅருள் பெறும்போது அரிதால்* அவ்அருள்அல்லன அருளும் அல்ல*
அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது* அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை* சேர்திருஆகம் எம்ஆவிஈரும்*
எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ? ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!* ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*
கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்* கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*
சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு* பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து*
போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்* புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!* பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ*
அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்* கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*
மதுமண மல்லிகை மந்தக்கோவை* வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து*
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே* ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!
ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!* அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்*
தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி* தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து* பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை*
யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!* மாலையும்வந்தது மாயன்வாரான்.
மாலையும்வந்தது மாயன்வாரான்* மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
கோல நல்நாகுகள் உகளும்ஆலோ! கொடியன குழல்களும் குழறும்ஆலோ*
வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்* மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!* என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?
அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா* அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி* அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த* ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்! அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)
மாலைநண்ணித்* தொழுதுஎழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)
கள்அவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*
வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
உள்ளி* நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!
தொண்டர் நும்தம்* துயர்போகநீர் கமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து
அண்டவாணன்* அமரர்பெருமானையே
மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*
தான்நயந்த பெருமான்* சரண்ஆகுமே.
சரணம்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
மரணம்ஆனால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
அரண்அமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்
தரணியாளன்* தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே.
அன்பன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து
அன்பன்* நாளும் தன* மெய்யர்க்கு மெய்யனே
மெய்யன்ஆகும்* விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்*
பொய்யன்ஆகும்* புறமே தொழுவார்க்குஎல்லாம்*
செய்யில்வாளைஉகளும்* திருக்கண்ணபுரத்து
ஐயன்* ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.
அணியன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
பிணியும்சாரா* பிறவிகெடுத்துஆளும்*
மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணரம்
பணிமின்* நாளும் பரமேட்டிதன் பாதமே
பாதம்நாளும்* பணிய தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனிஎன்குறை?*
வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.
இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
சொல்ல* நாளும் துயர் பாடுசாராவே.
பாடுசாரா* வினைபற்றுஅற வேண்டுவீர்*
மாடம்நீடு* குருகூர்ச்சடகோபன்* சொல்
பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடிஆடிப்* பணிமின் அவன் தாள்களே (2)
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடிஅன்றி* மற்றுஇலம் அரணே.
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலாச்*
சுற்றும் நீர்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.
துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரம்உடைய* வல்லரக்கர் புக்குஅழுந்த*
தயரதன் பெற்ற* மரகத மணித் தடத்தினையே.
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
நாம்அடைந்த நல்அரண்* நமக்குஎன்று நல்அமரர்*
தீமை செய்யும் வல்அசுரரை* அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
காமரூபம் கொண்டு* எழுந்துஅளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)
கெடும் இடர்ஆயஎல்லாம்* கேசவா என்ன* நாளும்
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடம்உடை வயல்* அனந்தபுரநகர் புகுதும்இன்றே (2)
இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சாரா*
குன்றுநேர் மாடம்மாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*
ஒன்றும்ஓர் ஆயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பர்ஊரே
ஊரும்புள் கொடியும் அஃதே* உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்*
சேரும் தண்அனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகள்எல்லாம்* திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*
பேரும் ஓர்ஆயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே
பேசுமின் கூசம்இன்றி* பெரியநீர் வேலைசூழ்ந்து*
வாசமே கமழும் சோலை* வயலணிஅனந்தபுரம்*
நேசம்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே.
புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரர்ஆவார்
அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
நமர்களோ! சொல்லக்கேள்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*
குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே
துடைத்த கோவிந்தனாரே* உலகுஉயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயல்அணிஅனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே
கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*
இடவகை கொண்டதுஎன்பர்* எழில்அணிஅனந்தபுரம்*
படம்உடைஅரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினோ நமர்கள்உள்ளீர்!* நாம் உமக்குஅறியச் சொன்னோம்.
நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியஆன*
சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்* செறிபொழில்அனந்தபுரம்*
தூமநல் விரைமலர்கள்* துவள்அற ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்குஎன்று ஏத்த* மாய்ந்துஅறும் வினைகள்தாமே.
மாய்ந்துஅறும் வினைகள்தாமே* மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தம்இல் புகழினாரே.
அந்தம்இல் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னைக்*
கொந்துஅலர் பொழில்* குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமர்உலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோள்இணையே. (2)
வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!* மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்*
காமரு குயில்களும் கூவும் ஆலோ!* கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு* ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!* தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2)
தகவிலை தகவிலையே நீ கண்ணா!* தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்*
சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்- சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*
அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு* ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ*
மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்* வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்*
யாவரும் துணைஇல்லை யான் இருந்து* உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்* பொருகயல் கண்இணை நீரும் நில்லா*
சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த* இத் தொழுத்தையோம் தனிமை தானே.
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி* துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*
பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்* பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு-
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்* பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*
பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ* பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*
மணிமிகு மார்பினில் முல்லைப் போது* என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணிமிகு தாமரைக் கையை அந்தோ!* அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்* ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்*
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
வடித்தடம் கண்இணை நீரும் நில்லா* மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே.
வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு* வெள்வளை மேகலை கழன்று வீழ*
தூமலர்க் கண்இணை முத்தம் சோர* துணைமுலை பயந்து என தோள்கள் வாட*
மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ண* மெல் மலரடி நோவ நீபோய்*
ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு* அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று* ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்*
கசிகையும் வேட்கையும் உள்கலந்து* கலவியும் நலியும் என்கை கழியேல்*
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்* கைகளும் பீதக உடையும் காட்டி*
ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ* உகக்கும் நல்லவரொடும் உழிதராயே
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்* திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்-
வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்* எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*
மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு* நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ*
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே* அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!
அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!* அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ*
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-
உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று- ஊடுற என்னுடை ஆவி வேமால்*
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி* செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே!
செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு* அத்திருவடி திருவடிமேல்* பொருநல்-
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்* வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை* அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்- உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2)
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2)
பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்கு-
அருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உறைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிந்து* இங்கு என்னைஆள்கின்றானே.
ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுஉடையம்?*
மீள்கின்றதுஇல்லை* பிறவித் துயர்கடிந்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே.
தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-
இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கல்ஆகாமை* நிச்சித்துஇருந்தேனே.
நிச்சித்துஇருந்தேன்* என்நெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்துஅண்ணல்* கள்வம் பெரிதுஉடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத்து அணையானே.
நாகத்து அணையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானைப்*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே.
பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*
பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்துஆளும்*
மணிநின்ற சோதி* மதுசூதன் என்அம்மான்*
அணிநின்ற செம்பொன்* அடல்ஆழி யானே.
ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*
பாழிஅம் தோளால்* வரைஎடுத்தான் பாதங்கள்*
வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய்.
கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
வகையால் மனம்ஒன்றி* மாதவனை* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*
திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*
தகையான் சரணம்* தமர்கட்குஓர் பற்றே.
பற்றுஎன்று பற்றி* பரம பரம்பரனை*
மல் திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழல்இணையே. (2)
கண்ணன் கழல்இணை* நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2)
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே.
தானே உலகுஎல்லாம்* தானே படைத்துஇடந்து*
தானே உண்டுஉமிழ்ந்து* தானே ஆள்வானே.
ஆள்வான் ஆழிநீர்க்* கோள்வாய் அரவுஅணையான்*
தாள்வாய் மலர்இட்டு* நாள்வாய் நாடீரே.
நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே.
மேயான் வேங்கடம்* காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட* வாயான் மாதவனே. (2)
மாதவன் என்றுஎன்று* ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா* ஏதம் சாராவே.
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே.
அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே.
வினைவல் இருள்என்னும்* முனைகள் வெருவிப்போம்*
சுனை நல் மலர்இட்டு* நினைமின் நெடியானே.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து அடியார்க்கு அருள்பேறே (2)
அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்புஅறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி* பழவினைகள் பற்றுஅறுத்து*
நாட்டாரோடு இயல்வுஒழிந்து* நாரணனை நண்ணினமே.
நண்ணினம் நாராயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்உலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறுகா* இக்கருமங்கள் என்நெஞ்சே!
என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு* இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*
வல்நெஞ்சத்து இரணியனை* மார்வு இடந்த வாட்டாற்றான்*
மன்னஞ்ச பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே.
வான்ஏற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*
தேன்ஏறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தான்ஏறித் திரிவான* தாள்இணை என்தலைமேலே
தலைமேல தாள்இணைகள்* தாமரைக்கண் என்அம்மான்*
நிலைபேரான் எனநெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவுஅணைமேல்* வாட்டாற்றான் மதம்மிக்க*
கொலையானை மருப்புஒசித்தான்* குரைகழல்கள் குறுகினமே.
குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்நாட்டுத் திலதமன்ன*
வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலர்அடிமேல்*
விரைகுழுவு நறும்துளவம்* மெய்ந்நின்று கமழுமே.
மெய்ந்நின்று கமழ்துளவ* விரைஏறு திருமுடியன்*
கைந்நின்ற சக்கரத்தன்* கருதும்இடம் பொருதுபுனல்*
மைந்நின்ற வரைபோலும்* திருஉருவ வாட்டாற்றாற்கு*
எந்நன்றி செய்தேனா* என்நெஞ்சில் திகழ்வதுவே?
திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*
புகழ்நின்ற புள்ஊர்தி* போர்அரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து* எப்பொழுதும் பிரியானே.
பிரியாதுஆட் செய்என்று* பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*
அரியாகி இரணியனை* ஆகம்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*
வரிவாள் வாய்அரவுஅணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே.
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகல்ஒழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு ஆரார் வானவர்கள்* செவிக்குஇனிய செஞ்சொல்லே. (2)
செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு* தானே ஆகி நிறைந்தானே. (2)
தானே ஆகி நிறைந்து* எல்லாஉலகும் உயிரும் தானேஆய்*
தானே யான்என்பான்ஆகி* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலைக்*
கோனே ஆகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிர்உண்டே.
என்னை முற்றும் உயிர்உண்டு* என் மாயஆக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேஆய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்நன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருஅருளே?
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
நண்ணா அசுரர் நலிவுஎய்த* நல்ல அமரர் பொலிவுஎய்த*
எண்ணாதனகள் எண்ணும்* நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*
தென்னா என்னும் என்அம்மான்* திருமாலிருஞ்சோலையானே.
திருமாலிருஞ்சோலை யானேயாகி* செழு மூவுலகும்* தன்-
ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆளும்மால்* சிவனும் பிரமனும்காணாது*
அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே.
அருளை ஈ என்அம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமன்அம்மானும்* தேவர் கோனும் தேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே.
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்* ஒருவன் உலகுஎல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்து கெடுத்துஉழலும்*
ஆழி வண்ணன் என்அம்மான்* அம்தண் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே! கைவிடேல்* உடலும் உயிரும் மங்கஒட்டே.
மங்க ஒட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*
நங்கள் கோனே! யானேநீஆகி* என்னை அளித்தானே*
பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்* கருமேந்திரியம் ஐம்பூதம்*
இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி* மான்ஆங்காரம் மனங்களே.
மான்ஆங்காரம் மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தான்ஆங்கார மாய்ப்புக்கு* தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்* சடகோபன் சொல்ஆயிரத்துள்*
மான்ஆங்காரத்துஇவை பத்தும்* திருமாலிருஞ் சோலைமலைக்கே. (2)
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2)
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன்என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார்ஏழ் கடல்ஏழ்* மலைஏழ் உலகு உண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதுஓர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதுஆயின வாறே.
எளிதாயினவாறுஎன்று* என்கண்கள் களிப்பக்*
களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*
தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே.
வானே தருவான்* எனக்காய் என்னோடுஒட்டி*
ஊன்ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே.
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலைப்*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*
இருப்பேன் என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம்உண்டு களித்தேனே.
உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள்நின்று அகலானே.
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழ்இசையின் சுவைதானே*
வண்ணநல் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.
இன்று என்னைப் பொருளாக்கி* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்குஅருள்செய்ய* உணர்த்தல்உற்றேனே.
உற்றேன் உகந்து பணிசெய்து* உன்பாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2)
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டர்ஆள்வது* சூழ்பொன் விசும்பே. (2)
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரைக்* கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளம்ஏந்திய என்அப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
நாரணன் தமரைக் கண்டுஉகந்து* நல்நீர்முகில்*
பூரண பொன்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றுஆர்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர்உலகே.
தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-
பொழிவனர்* பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்* முனிவர்கள்*
வழிஇது வைகுந்தர்க்கு என்று* வந்து எதிரே.
எதிர்எதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவர்அவரவர்* கைந்நிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்குஒத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே.
மாதவன் தமர்என்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதுஇடம்* புகுதுக என்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*
வேதநல் வாயவர்* வேள்விஉள் மடுத்தே.
வேள்விஉள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*
ஆள்மின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாள்ஒண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே.
மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடந்த எம்கேசவன்* கிளர்ஒளி மணிமுடி*
குடந்தை எம்கோவலன்* குடிஅடி யார்க்கே
குடிஅடியார் இவர்* கோவிந்தன் தனக்குஎன்று*
முடிஉடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடிஅணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*
வடிவுஉடை மாதவன்* வைகுந்தம் புகவே.
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதுஇடம் புகுதஎன்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே.
விதிவகை புகுந்தனர்என்று* நல்வேதியர்*
பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நல்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*
மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே.
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே. (2)
முனியே! நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!* என்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகல்ஒட்டேன்* ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே. (2)
மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருஆணை நின்ஆணை கண்டாய்*
நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே*
கூசம்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!
கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்அலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்குஎல்லாம்*
நாவிக் கமல முதல்கிழங்கே!* உம்பர் அந்ததுவே.
உம்பர்அம்தண் பாழேஓ!* அதனுள்மிசை நீயேஓ*
அம்பரம் நல்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*
உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே.
போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!* எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*
தீர இரும்புஉண்ட நீரதுபோல* என்ஆர்உயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராஅமுதுஆனாயே.
எனக்கு ஆராஅமுதாய்* எனதுஆவியை இன்உயிரை*
மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்* இனிஉண்டொழியாய்*
புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*
உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ!
கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைபெற்று இனிப் போக்குவனோ? (2)
பெற்றுஇனிப் போக்குவனோ* உன்னை என் தனிப்பேருயிரை*
உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயன் ஆவையாய்*
முற்றஇம் மூவுலகும்* பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு*
முற்றக் கரந்துஒளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ!
முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்*
முதல்தனி உன்னைஉன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*
முதல்தனி அங்கும்இங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவிலீஓ!
சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே! (2)
அவாஅறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாஅற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்* இவைஆயிரமும்* முடிந்த-
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2)