பிரபந்த தனியன்கள்

கானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.

   பாசுரங்கள்


    செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப்- 
    பரிதிசூடி,* அம் சுடர் மதியம் பூண்டு* 
    பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்* 
    திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்* 
    கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்* 
    பீதக ஆடை முடி பூண் முதலா 
    மேதகு பல் கலன் அணிந்து,*  சோதி- 
    வாயவும் கண்ணவும் சிவப்ப,*  மீதிட்டுப்- 

    பச்சை மேனி மிகப் பகைப்ப*
    நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி* 
    எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து*
    சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்* 
    தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த* 
    தாமரை உந்தித் தனிப் பெரு நாயக* 
    மூவுலகு அளந்த சேவடியோயே! (2)  


    உலகு படைத்து உண்ட எந்தை,*  அறைகழல்-
    சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு,*  அவாவு-
    ஆர் உயிர் உருகி உக்க,*  நேரிய காதல்- 
    அன்பில் இன்பு ஈன் தேறல்,*  அமுத- 

    வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு,*  ஒருபொருட்கு-
    அசைவோர் அசைக,*  திருவொடு மருவிய- 
    இயற்கை,*  மாயாப் பெரு விறல் உலகம்- 
    மூன்றினொடு நல் வீடு பெறினும்,* 
    கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?  


    குறிப்பில் கொண்டு நெறிப்பட,*  உலகம் 
    மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை* 
    மெய் பெற நடாய தெய்வம் மூவரில்- 
    முதல்வன் ஆகி*  சுடர் விளங்கு அகலத்து* 
    வரை புரை திரை பொர பெரு வரை வெருவர,* 

    உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு- 
    அரசு உடல் தட வரை சுழற்றிய,*  தனிமாத்-
    தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே- 
    இசையுங்கொல்,*  ஊழிதோறு ஊழி ஓவாதே?


    ஊழிதோறு ஊழி ஓவாது*  வாழிய- 
    என்று யாம் தொழ இசையுங்கொல்,*
    யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல் வரும் 
    பெரும்பாழ்க் காலத்து,*  இரும் பொருட்கு-
    எல்லாம் அரும் பெறல் தனி வித்து,*  ஒருதான்-

    ஆகி தெய்வ நான்முகக் கொழு முளை-
    ஈன்று,*  முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி* 
    மூவுலகம் விளைத்த உந்தி,* 
    மாயக் கடவுள் மா முதல் அடியே? 


    மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி,* 
    மண் முழுதும் அகப்படுத்து,*  ஒண் சுடர் அடிப் போது-
    ஒன்று விண் செலீஇ,*  நான்முகப் புத்தேள் 
    நாடு வியந்து உவப்ப,*  வானவர் முறைமுறை-
    வழிபட நெறீஇ,*  தாமரைக் காடு-

    மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய்*
    இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன* 
    கற்பகக் காவு பற்பல அன்ன* 
    முடி தோள் ஆயிரம் தழைத்த* 
    நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? 


    ஓஓ! உலகினது இயல்வே*  ஈன்றோள் இருக்க*
    மணை நீராட்டி,*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து-
    அளந்து,*  தேஎர்ந்து உலகு அளிக்கும் முதல்பெருங்- 
    கடவுள் நிற்ப*  புடைப் பல தான் அறி- 
    தெய்வம் பேணுதல்,*  தனாது-

    புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி,* 
    கொல்வன முதலா அல்லன முயலும்,* 
    இனைய செய்கை இன்பு துன்பு அளி* 
    தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்* 
    பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே.


    நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்* 
    தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,* 
    யாவகை உலகமும் யாவரும் அகப்பட,* 
    நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்*
    மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க,*

    ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்- 
    அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்-
    பெரு மா மாயனை அல்லது,* 
    ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே?  (2)