திருப் ப்ரிதி

திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. [2] இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு

அமைவிடம்

State உத்தராகண்டம் District கமோலி,

தாயார் : ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
மூலவர் : பரம புருஷன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: பரம புருஷன்,ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    958.   
    வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
    அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 
    ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
    பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)

        விளக்கம்  



    959.   
    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 
    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

        விளக்கம்  



    960.   
    துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
    இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 
    கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
    பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 

        விளக்கம்  


    • நுண்ணிய இடையையும், கரிய கூந்தலையும் உடைய நப்பின்னையை அடைய, இடியென முழங்கிய ஏழு எருதுகளை அடக்கிய கண்ண பெருமான் வாழும் இடம் திருப்பிரிது. இந்த இடத்தில் அழகிய பாறைகளின் மீது மணம்மிகு வேங்கைமலர்ப் படுக்கையில், ஆண் யானை தன் பெண் யானையுடன் படுத்துறங்கும். வண்டுகள் ரீங்காரம் செய்து இசைபாடும். . மனமே நீ அந்த இடத்தை(இந்த திவ்வியதேசம் திருப்பிரிதி) அடைவாயாக.


    961.   
    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 
    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

        விளக்கம்  


    • க்ஷ்


    962.   
    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 
    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

        விளக்கம்  



    963.   
    பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
    இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 
    மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
    பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

        விளக்கம்  



    964.   
    கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்* 
    போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்* 
    ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்* 
    பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!      

        விளக்கம்  



    965.   
    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*
    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  

        விளக்கம்  



    966.   
    ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
    ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*
    தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
    பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 

        விளக்கம்  



    967.   
    கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
    களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 
    வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
    அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)

        விளக்கம்