பிரபந்த தனியன்கள்

முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

   பாசுரங்கள்


    காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*
    சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*
    பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*

    நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்
    பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ*  (2) -- அம்மூன்றும்


    ஆராயில்தானே அறம்பொருள் இன்பமென்று*
    ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்*

    சீரார் இருலையும் எய்துவர்* (2) -- சிக்கெனமது



    ஆரானும் உண்டுஎன்பார் என்பதுதான் அதுவும்*
    ஓராமைஅன்றே? உலகத்தார் சொல்லும் சொல்* 
    ஓராமையாம்ஆறு அது உரைக்கேன் கேளாமே*

    காரார் புரவிஏழ் பூண்ட தனியாழி*
    தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு* 
    ஆராஅமுதம் அங்குஎய்தி* -- அதில் நின்றும்


    வாராதுஒழிவது ஒன்றுஉண்டே*  அதுநிற்க 
    ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே?*

    ஏரார் இளமுலையீர் என்தனக்கு உற்றதுதான்*
    காரார் குழல்எடுத்துக்கட்டி* -- கதிர்முலையை


    வாரார வீக்கி மணிமேகலை திருத்தி* 
    ஆரார் அயில்வேல்கண் அஞ்சனத்தின் நீறுஅணிந்து* 
    சீரார் செழும்பந்து கொண்டுஅடியா நின்றேன் நான்*

    நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றுஒருவன்*
    பாரோர்கள்எல்லாம் மகிழ பறைகறங்க* 
    சீரார் குடம் இரண்டுஏந்தி* -- செழுந்தெருவே


    ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு* 
    ஏரார் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்* 
    வாராயோ என்றார்க்குச் சென்றேன் என்வல்வினையால்*

    காரார் மணிநிறமும் கைவளையும் காணேன் நான்*
    ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்* -- அறிவுஅழிந்து


    தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி* 
    ஏரார் கிளிக்கிளவி எம்அனைதான் வந்து என்னைச்*

    சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு* -- செங்குறிஞ்சித்  



    தாரார் நறுமாலைச் சாத்தற்குத்*  தான்பின்னும்

    நேராதன ஒன்று நேர்ந்தாள்*  அதனாலும் 



    தீராது என்சிந்தை நோய் தீராது என்பேதுறவு* 
    வாராதுமாமை அதுகண்டு மற்றுஆங்கே*
    ஆரானும் மூதுஅறியும் அம்மனைமார் சொல்லுவார்*

    பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்* 
    ஆரானும் மெய்ப்படுவன் என்றார்* -- அதுகேட்டு


    காரார் குழல்கொண்டை கட்டுவிச்சி கட்டேறி* 
    சீரார் சுளகில் சிலநெல் பிடித்துஎறியா*

    வேரா விதிர்விதிரா மெய்சிலிரா கைமோவா* 
    பேர்ஆயிரம்உடையான் என்றாள்* -- பெயர்த்தேயும் 


    காரார் திருமேனி காட்டினாள்* -- கையதுவும்

    சீரார் வலம்புரியே என்றாள்* -- திருத் துழாயத் 



    தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா* 
    நீர்ஏதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய்செய்தான்*
    ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்* 
    கூரார் வேல்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ*

    ஆரால் இவ்வையம் அடிஅளப்புண்டதுதான்* 
    ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது*-- மற்று
    ஆராலே கல்மாரி காத்ததுதான்* -- ஆழிநீர் 


    ஆரால் கடைந்திடப் பட்டது*--அவன் காண்மின்*
    ஊரா நிரை மேய்த்து உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தும்* 
    ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*
    சீரார் கலைஅல்குல் சீரடிச் செந்துவர்வாய்*
    வாரார் வனமுலையாள் மத்துஆரப் பற்றிக்கொண்டு* 
    ஏரார் இடைநோவ எத்தனையோர் போதும்ஆய்*

    சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை*
    வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு* 
    நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்*
    போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்*
    ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று*
    தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி* 
    ஆராத வெண்ணெய் விழுங்கி* -- அருகுஇருந்த


    மோரார் குடம்உருட்டி முன்கிடந்த தானத்தே*
    ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டுஅவளும்*

    வாராத்தான் வைத்தது காணாள்*--வயிறுஅடித்துஇங்கு  



    ஆரார் புகுதுவார்? ஐயர் இவர்அல்லால்* 
    நீராம் இதுசெய்தீர் என்றுஓர் நெடுங்கயிற்றால்* 
    ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே*

    தீரா வெகுளியள்ஆய் சிக்கென ஆர்த்துஅடிப்ப* 
    ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்* -- அன்றியும்


    நீரார் நெடுங்கயத்தைச் சென்றுஅலைக்க நின்றுஉரப்பி* 
    ஓராயிரம் பணவெம் கோஇயல் நாகத்தை*

    வாராய் எனக்குஎன்று மற்றதன் மத்தகத்து*
    சீரார் திருவடியால் பாய்ந்தான்* -- தன்சீதைக்கு


    நேராவன் என்றுஓர் நிசாசரிதான் வந்தாளை*
    கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதுஇரண்டும்*

    ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை* -- வெம்நரகம்



    சேராவகையே சிலைகுனித்தான்*--செந்துவர்வாய்
    வாரார் வனமுலையால் வைதேவி காரணமா*

    ஏரார் தடந்தோள் இராவணனை*--ஈர்ஐந்து



    சீரார் சிரம்அறுத்து செற்றுஉகந்த செங்கண்மால்* 
    போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை*

    கூரார்ந்த வள்உகிரால் கீண்டு*--குடல் மாலை 



    சீரார் திருமார்பின் மேல்கட்டி*--செங்குருதி
    சோராக் கிடந்தானைக் குங்குமத்தோள் கொட்டி*

    ஆரா எழுந்தான் அரிஉருவாய்* அன்றியும்



    பேர் வாமன்ஆகிய காலத்து*  மூவடிமண்
    தாராய் எனக்குஎன்று வேண்டி சலத்தினால்*

    நீர்ஏற்று உலகுஎல்லாம் நின்றுஅளந்தான் மாவலியை*



    ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்*
    கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக*

    பேராமல் தாங்கிக் கடைந்தான்*--திருத்துழாய்த்



    தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும்*
    போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றுஅலறி*
    நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடுங்கையால்*

    நாராயணாஓ மணிவண்ணா நாகணையாய்* 
    வாராய் என்ஆர்இடரை நீக்காய்*--எனவெகுண்டு


    தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறுஆக*
    ஈரா அதனை இடர்கடிந்தான் எம்பெருமான்*

    பேர்ஆயிரம்உடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத்*
    தீரா நோய் செய்தான் எனஉரைத்தாள்*--சிக்கெனமற்று


    ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்*
    போர்ஆர் வேல்கண்ணீர் அவன்ஆகில் பூந்துழாய்*

    தாராது ஒழியுமே தன்அடிச்சி அல்லளே*--மற்று 
    ஆரானும்அல்லனே என்றுஒழிந்தாள்*--நான் அவனைக்


    காரார் திருமேனி கண்டதுவே காரணமா*

    பேராபிதற்றா திரிதருவன்*--பின்னையும் 



    ஈராப் புகுதலும் இவ்உடலைத் தண்வாடை*

    சோராமறுக்கும் வகைஅறியேன்*--சூழ்குழலார்



    ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை*
    வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்*

    வாராய் மட நெஞ்சே வந்து*-- மணிவண்ணன்



    சீரார் திருத்துழாய் மாலை நமக்கு அருளி* 
    தாரான் தரும்என்று இரண்டத்தில் ஒன்றுஅதனை* 
    ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்* 
    ஆராயுமேலும் பணிகேட்டு அதுஅன்றுஎனிலும்*

    போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு* 
    காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்*
    வாராதே என்னை மறந்ததுதான்*--வல்வினையேன்


    ஊரார் உகப்பதே ஆயினேன்* -- மற்றுஎனக்கு இங்கு




    ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்* 

    நீராய் உருகும் என்ஆவி*--நெடுங்கண்கள் 



    ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*--உத்தமன்தன்

    பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்



    கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார்*
    ஆரேபொல்லாமை அறிவார்? அதுநிற்க* 
    ஆரானும்ஆதானும் அல்லள்அவள் காணீர்*

    வார்ஆர் வனமுலை வாசவதத்தை என்று*
    ஆரானும் சொல்லப்படுவாள்*-- வளும்தன்


    ஆரானுமாதானும் அல்லலவள் காணீர்* 
    வாரார் வனமுலை வாசமததை வென்று*

    ஆரானும் சொல்லப்படுவாள்* – அவளும்தன்



    பேர்ஆயம்எல்லாம் ஒழிய பெருந்தெருவே*
    தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*

    ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*--மற்றுஎனக்கு இங்கு



    ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
    காரார் திருமேனி காணும் அளவும்போய் 
    சீரார் திருவேங்கடமே திருக்கோவ 
    லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே

    பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே 
    பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் 
    ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை  (2)


    காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்* 
    சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்* 
    காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*

    ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை* 
    சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்* 


    பாரோர் புகழும் வதரி வடமதுரை* 
    ஊராயஎல்லாம் ஒழியாமே நான் அவனை*
    ஓரானை கொம்புஒசித்து ஓர்ஆனை கோள்விடுத்த-

    சீரானை செங்கண் நெடியானை தேன்துழாய்த்-
    தாரானை தாமரைபோல் கண்ணானை* எண்அருஞ்சீர்


    எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி*--பெருந்தெருவே




    ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*

    வாரார் பூம் பெண்ணை மடல்