பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
அலைத்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த* கூர் உகிராளன் இடம்*
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்* வன் துடி வாய் கடுப்ப*
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத* சிங்கவேழ்குன்றமே.
ஏய்ந்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்* அன்றியும் நின்று அழலால்*
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்* சிங்கவேழ்குன்றமே.
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்* ஏதலன் இன் உயிரை வவ்வி*
ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
கவ்வும் நாயும் கழுகும்* உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
மென்ற பேழ்வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை* நீள் விசும்பூடு இரிய*
சென்று காண்டற்கு அரிய கோயில்* சிங்கவேழ்குன்றமே.
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்* எயிற்றொடு இது எவ் உரு என்று*
இரிந்து வானோர் கலங்கி ஓட* இருந்த அம்மானது இடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று* நீள் நெறிவாய் உழுழை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்* சிங்கவேழ்குன்றமே.
முனைத்த சீற்றம் விண் சுடப் போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
கனைத்த தீயும் கல்லும் அல்லா* வில் உடை வேடரும் ஆய்*
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
நாத் தழும்ப நாஅன்முகனும்* ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
அங்கு ஓர் ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப* கல் அதர் வேய்ங்கழை போய்த்*
தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.
நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம் பெருமான்*
அல்லிமாதர் புல்க நின்ற* ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப* புல் இலை ஆர்த்து*
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத* சிங்கவேழ்குன்றமே.
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிஙக்வேழ்குன்று உடைய*
எங்கள் ஈசன் எம் பிரானை* இருந் தமிழ் நூல்புலவன்*
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்* வண்டு அரை தார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை* வல்லவர் தீது இலரே. (2)
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்*
குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்* கோல நல் மலர் குழற்கு அணியாள்*
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த* மால் என்னும் மால் இன மொழியாள்*
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்*
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்* பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்* வளைகளும் இறை நில்லா*
என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.
'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்* 'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்*
'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினில் கொடிதுஆம்*
தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்* சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்*
ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்* உருகும்நின் திருஉரு நினைந்து*
காதன்மை பெரிது கையறவு உடையள்* கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்*
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை*
வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த* வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* மென்முலை பொன்பயந்திருந்த*
என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்*
'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை* மாயனே! 'என்று வாய்வெருவும்*
களங் கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம்சேர்ந்திருந்த*
இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு* அழியுமால் என்உள்ளம்!' என்னும்*
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* 'போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி* கொடிஇடை நெடுமழைக் கண்ணி*
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்* பொருகயல் கண்துயில் மறந்தாள்*
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது* இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்*
மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி* வீங்கிய வனமுலை யாளுக்கு*
என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்'*
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய்ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)
கள்வன்கொல் யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற* பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ! (2)
பண்டு இவன் ஆயன் நங்காய்!* படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து*
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ!
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி*
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ!
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறி* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ!
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ! (2)
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னைதன் காதலன்தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ!
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ!
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக்குளத்துள்*
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நின்றாய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக்குளத்துள்*
நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே!*
நானாவகை* நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்தாய்*
பாடாவருவேன்* வினை ஆயின பாற்றே.
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக்குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே.
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர்கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
மாலே என வல் வினை* தீர்த்தருளாயே.
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்ச்*
சீரார் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.
பூவார் திருமாமகள்* புல்கிய மார்பா!*
நாவார் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்த்*
தேவா!* திருவெள்ளக்குளத்து உறைவானே*
'ஆவா! அடியான்* இவன் என்று அருளாயே.
நல்லன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே. (2)
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்* பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்* மருந்தும்பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி* தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* பிறங்கு இருள் நிறம் கெட* ஒருநாள்-
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற* படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்* ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்* உலகில்-
சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி* பகலவன் ஒளி கெடப்* பகலே-
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்* அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே.
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரைத்*
தோளும் தலையும் துணிவு எய்தச்* சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேல்கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே.
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்ப* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங்காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்*
புள் ஆர் புறவில் பூங் காவி* பொலன் கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே.
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே.
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட* விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே.
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்* வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க* சங்கம் வாய் வைத்தான்*
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே.
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே.
திருவுக்கும் திருஆகிய செல்வா!* தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!* உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்* உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* (2)
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி* பாவை பூமகள் தன்னொடும் உடனே-
வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்* மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!* சாமவேதியனே! நெடுமாலே*
அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள்உடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்* சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்* போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்*
ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்* பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்-
வரனே! மாதவனே! மதுசூதா!* மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
நரனே! நாரணனே! திருநறையூர்!* நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்-
அரனே* ஆதிவராகம் முன்ஆனாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்* பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்* பண்பாளா! பரனே! பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை* கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-
தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்- தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
சேயாய்* கிரேத திரேத துவாபர- கலியுகம்* இவை நான்கும் முன்ஆனாய்*
ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!* கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!* எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
நெடியானே! கடிஆர் கலிநம்பீ!* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்*
கடிஆர் காளையர்ஐவர் புகுந்து* காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்* கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி*
அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி* கூறை சோறு இவை தா என்று குமைத்து-
போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே*
தீவாய் நாகணையில் துயில்வானே!* திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*
அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி- ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகுஆண்டு* மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே* (2)
வியம்உடை விடைஇனம்* உடைதர மடமகள்*
குயம்மிடை தடவரை* அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்* இளையவர் நடைபயில்*
கயம்மிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
இணைமலி மருதுஇற* எருதினொடு இகல்செய்து*
துணைமலி முலையவள்* மணம்மிகு கலவியுள்*
மணம்மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம்மலி கணபுரம்* அடிகள்தம் இடமே.
புயல்உறு வரைமழை* பொழிதர மணிநிரை*
மயல்உற வரைகுடை* எடுவிய நெடியவர்*
முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*
கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே.
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய்து அமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதுஎழ*
அண்டமொடு அகல்இடம்* அளந்தவர் அமர்செய்து*
விண்டவர் பட* மதிள்இலங்கை முன்எரிஎழக்*
கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே.
மழுவுஇயல் படைஉடை* அவன்இடம் மழைமுகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*
கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*
எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*
எரிதியொடு எனஇன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
படிபுல்கும் அடிஇணை* பலர்தொழ மலர்வைகு*
கொடிபுல்கு தடவரை* அகலம்அது உடையவர்*
முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*
கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே
புலம்மனும் மலர்மிசை* மலர்மகள் புணரிய*
நிலமகள்என இன* மகளிர்கள் இவரொடும்*
வலம்மனு படையுடை* மணிவணர் நிதிகுவைக்*
கலம்மனு கணபுரம்* அடிகள்தம் இடமே.
மலிபுகழ் கணபுரம்உடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்* வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை* விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2)
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்இடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பூண்உலாம் மென்முலைப் பாவைமார்* பொய்யினை 'மெய் இது' என்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழை எனக் கருதினாயேல்,*
நீள்நிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பண்உலாம் மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாம்என்று*
எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து* நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற* வேங்கடத்துஉளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதுஓர் சொல்லை* நீ துயர்எனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மஞ்சனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
உருவின்ஆர் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை* மெய்எனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழைஎனக் கருதினாயேல்,*
தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்* மங்குல் வான்ஆகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுசேர் வான்எரி* நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றுஇவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்* வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்* கோலநீள்ஆலி நாடன்,*
கறைஉலாம் வேல்வல* கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2)
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! (2)
காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்* கண்டே போனேன்,*
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்* மற்று வந்தாரும் இல்லை,*
மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்* வெண்ணெயேஅன்று, இருந்த*
பாலும் பதின்குடம் கண்டிலேன்* பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!
தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!* உறி மேலைத் தடாநிறைந்த,*
வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை* வாரி விழுங்கி யிட்டு,*
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்* கைஎல்லாம் நெய்,* வயிறு-
பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்* பேதையேன் என்செய்கேனோ!
மைந்நம்பு வேல்கண்நல்லாள்* முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது* அவன் இவை செய்தறியான்*
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்* பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,*
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை* என்செய்கேன் என்செய்கேனோ!
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்* தோழிமார் ஆரும்இல்லை,*
சந்த மலர்க்குழலாள்* தனியே விளையாடும்இடம் குறுகி,*
பந்து பறித்து துகில்பற்றிக் கீறி* படிறன் படிறு செய்யும்,*
நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்* நந்தன் பெற்ற மதலை,*
அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே* அல்லில்தான் வந்த பின்னை,*
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி* கமலச் செவ்வாய் வெளுப்ப,*
என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று* ஆயர் விழவுஎடுப்ப,*
பாசனம் நல்லன பண்டிகளால்* புகப் பெய்த அதனை எல்லாம்,*
போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு* உன்மகன் இன்று நங்காய்,*
மாயன் அதனை எல்லாம் முற்ற* வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்!
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்* ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,*
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்* நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*
சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று* இரப்பன் உரப்பகில்லேன்*
பேய்ச்சி முலைஉண்ட பின்னை* இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே!
ஈடும் வலியும் உடைய* இந் நம்பி பிறந்த எழு திங்களில்,*
ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி* யமுனை நீராடப் போனேன்,*
சேடன் திருமறு மார்வன்* கிடந்து திருவடியால்,* மலை போல்-
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை* உரப்புவது அஞ்சுவனே!
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!* ஆயிரம் நாழி நெய்யை,*
பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று* பாகம்தான் வையார்களே,*
கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்* என்கை வலத்துஆதும் இல்லை,*
நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!* என்செய்கேன் என்செய்கேனோ!
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களை,*
பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்* பின்னே சென்றுஒளித்திருந்து,*
அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவுஏர்இடையார் இரப்ப,*
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற* மரம் ஏறி இருந்தாய் போலும்
அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு* ஆண்மையும் சேவகமும்,*
உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க* உரைத்திலன் தான்இன்று போய்,*
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி* விசைகொண்டு பாய்ந்து புக்கு* ஆயிரவாய்-
நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
தம்பரம் அல்லன ஆண்மைகளைத்* தனியேநின்று தாம் செய்வரோ?,
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்* இனி யான்என் செய்கேன்?,*
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்* அங்குஅனல் செங்கண்உடை,*
வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச* அருவரை போல்,*
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2)
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை* புள்ஊரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்அல்ல கண்டாமே (2)
நீள்வான் குறள்உருஆய்* நின்றுஇரந்து மாவலிமண்,*
தாளால் அளவிட்ட* தக்கணைக்கு மிக்கானை,*
தோளாத மாமணியை* தொண்டர்க்கு இனியானை,*
கேளாச் செவிகள்* செவிஅல்ல கேட்டாமே.
தூயானை* தூய மறையானை,* தென்ஆலி
மேயானை* மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட
வாயானை* மாலை வணங்கி* அவன்பெருமை
பேசாதார்* பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.
கூடா இரணியனைக்* கூர்உகிரால் மார்வுஇடந்த,*
ஓடா அடல்அரியை* உம்பரார் கோமானை,*
தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,* ஆர்வத்தால்-
பாடாதார் பாட்டுஎன்றும்* பாட்டுஅல்ல கேட்டாமே.
மைஆர் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்ஆர் குவளையும் காயாவும்* போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை* சங்குஏந்தும்
கையானை கைதொழா* கைஅல்ல கண்டாமே.
கள்ஆர் துழாயும்* கணவலரும் கூவிளையும்,*
முள்ஆர் முளரியும்* ஆம்பலும்முன் கண்டக்கால்,*
புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்* புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
உள்ளாதார் உள்ளத்தை* உள்ளமாக் கொள்ளோமே.
கனைஆர் கடலும்* கருவிளையும் காயாவும்*
அனையானை,* அன்பினால் ஆர்வத்தால்,* என்றும்-
சுனைஆர் மலர்இட்டு* தொண்டராய் நின்று,*
நினையாதார் நெஞ்சுஎன்றும்* நெஞ்சுஅல்ல கண்டாமே.
வெறிஆர் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறிஆர் நறுவெண்ணெய்* தான்உகந்து உண்ட
சிறியானை* செங்கண்* நெடியானை சிந்தித்து-
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே.
தேனொடு வண்டுஆலும்* திருமாலிருஞ்சோலை,*
தான்இடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு* ஆள்ஆனார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே. (2)
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே. (2)