- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கழனிகளில் நடுகைக்காக எங்கும் பரம்பிக்கிடக்கிற நாற்று முடிகள் மூன்றாமடியிலுள்ள ‘முடி’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவை நிரம்பிய பெரிய வயல்களிலே உழவர்கள் கலப்பையைக்கொண்டு புகுந்து நடத்துவர்கள்; காலாலே ஒருகால் குழப்புவர்கள்; அவ்வளவிலே இடையிலே தப்பிக்கிடந்த தாமரைப்பூவானது பரிமளத்தைப் புறப்படவிடுமாம். “படைநின்ற பைந்தாமரையோடு அணிநீலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா” (11-8-6) என்றபாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.- வயல்களிலெங்கும் தாமரை முதலிய மலர்கள் மணங்கமழப் பெற்ற திருக்கண்ணபுரம் *அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறைமார்பனுடைய திவ்ய தேசம் என்றதாயிற்று. படிபுல்குமடியிணை பலர்தொழ = முன்பு உலகமளந்த திருவடிகளைத் திருக்கண்ணபுரத்திலே பலரும் வணங்கும்படியாக என்றுமாம். படி – பூமி. மலர்வைகுகொடி – பெரியபிராட்டியார். ‘கொடி’ என்பது ஸ்த்ரீஜாதிக்கு உவமையாகு பெயர்.
English Translation
The Lord who measured the Earth with his feet and who bears the lotus-dame Lakshmi on his mountain-like-chest resides in kannapuram where ploughed fertile fields made ready for transplantation carry the fragrance of lotus blossoms.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்