- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
யசோதைப்பிராட்டி தடாக்களிலே சேமித்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியாலே கைப்பற்றி அமுதசெய்த குற்றத்திற்காகத் தாம்பினால் கட்டுண்டு விக்கியழுத பரமஸுலபன் திருநறையூர்நம்பி காண்மின். இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு ஐதிஹ்ய மருளிச் செய்யப்படுகிறது; அதாவது – “வங்கிப்புரத்து நம்பி பலகாலும் ‘திருவாராதன மருளிச்செய்யவேணும்’ என்று போருமாய் அவஸரஹாநியாலே அருளிச்செய்யாதே போந்தாராய், திருமலையிலே யெழுந்தருளியிருக்கச்செய்தே, ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹநுமத்தாஸர்க்கும் அதுதன்னை யருளிச்செய்தாராய்ச் சமைகிற வளவிலே நம்பி தோற்ற, திருவுள்ளம் துணுக்கென்றஞ்சி அப்போதருளிச்செய்த வார்த்தை:– ‘என்றுமுள்ள இஸ்ஸம்ஸயம் தீரப்பெற்றோமாகிறது; நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடியுண்டு அழுது நின்றானென்றால் இது கூடுமோ என்றிருந்தோம்; இன்று இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹ்ருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் என்று”. என்பதாம்.
English Translation
The Lord of Naraiyur came as a child and stole the white butter, -when his mother in anger bound him to a mortar, -stood weeping. Bumble bees drink nectar-wine, the cool breeze blows and tells everyone. The bearming Mullai flowers hearing this, grin and show their mocking smile.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்