- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸ்ரீ வசநபூஷணத்தில் – “பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக. அர்ஜுநனக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.” என்றருளிச்செய்துள்ள ஸூத்ரங்கள் இங்கே அறியத்தக்கன. (த்ரௌபதியைத் துரியோதநாதிகள் மஹாஸபையில் துகிலுரிந்து அவமானப்டுத்தியதைப் பாண்டவர்கள் கண்டிருக்கச் செய்தேயும் சூதிலே தோற்றமையை நினைத்துப் பொறுத்திருந்தாலும் “சங்கசக்ர கதாபாணே! த்வாரகாநிலயாச்யுத! – கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதாம்” என்று அவள் கண்ணபிரானைச் சரணமடைந்த பின்பு பரிபவிக்கிறவளவில் ‘எம்பெருமானடியார்களைப் பிறர் பரிபவப் படுத்தக்ண்டால் சக்தியுள்ளவனாகில விலக்கவேணும்; சக்தியற்றவனாகில் வருத்தத்துடனே கண்மறையப் போகவேணும்’ எனகிற விசேஷசாஸ்த்ரமர்யாதையை நோக்கியாவது, (அல்லது) தங்களிடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்குள்ள ஸ்நேஹபக்ஷபாதங்களை நினைத்து அவனைச் சரணமடைந்தவள் பரிபவப்படுத்தக்கண்டால் சக்தியுள்ளவனாகில் விலக்கவேணும்;
English Translation
The Lord who blew his conch in the battlefield and terrified the elephant-mounted warrior kings in the Bharata war, and made the ball-clasping Panchail gather her hair once again, resides in Narayiur where benevolent Vedic seers rival the lotus-seated Brahma and Siva in their glories.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்