பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
என் நாதன் தேவிக்கு* அன்று இன்பப்பூ ஈயாதாள்*
தன் நாதன் காணவே* தண்பூ மரத்தினை*
வன் நாதப் புள்ளால்* வலியப் பறித்திட்ட*
என் நாதன் வன்மையைப் பாடிப் பற*
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2)
என் வில் வலி கண்டு* போ என்று எதிர்வந்தான்*
தன் வில்லினோடும்* தவத்தை எதிர்வாங்கி*
முன் வில் வலித்து* முதுபெண் உயிருண்டான்*
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற*
தாசரதி தன்மையைப் பாடிப் பற.*
உருப்பிணி நங்கையைத்* தேர் ஏற்றிக் கொண்டு*
விருப்புற்று அங்கு ஏக* விரைந்து எதிர் வந்து*
செருக்கு உற்றான்* வீரம் சிதையத்* தலையைச்-
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற*
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*
மாற்றுத்தாய் சென்று* வனம்போகே என்றிட*
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து* எம்பிரான்! என்று அழ*
கூற்றுத் தாய் சொல்லக்* கொடிய வனம் போன*
சீற்றம் இலாதானைப் பாடிப் பற*
சீதை மணாளனைப் பாடிப் பற.*
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற*
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*
முடி ஒன்றி* மூவுலகங்களும் ஆண்டு* உன்-
அடியேற்கு அருள் என்று* அவன்பின் தொடர்ந்த*
படியில் குணத்துப்* பரத நம்பிக்கு* அன்று-
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற*
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*
காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்-
நீள்முடி ஐந்திலும்* நின்று நடம்செய்து*
மீள அவனுக்கு* அருள்செய்த வித்தகன்*
தோள்-வலி வீரமே பாடிப் பற*
தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*
தார்க்கு இளந்தம்பிக்கு* அரசு ஈந்து* தண்டகம்-
நூற்றவள்* சொற்கொண்டு போகி* நுடங்கு இடைச்-
சூர்ப்பணகாவைச்* செவியொடு மூக்கு* அவள்-
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற*
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*
மாயச் சகடம் உதைத்து* மருது இறுத்து*
ஆயர்களோடு போய்* ஆநிரை காத்து* அணி-
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற*
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.*
காரார் கடலை அடைத்திட்டு* இலங்கை புக்கு*
ஓராதான் பொன்முடி* ஒன்பதோடு ஒன்றையும்*
நேரா அவன்தம்பிக்கே* நீள் அரசு ஈந்த*
ஆராவமுதனைப் பாடிப் பற*
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*
நந்தன் மதலையைக்* காகுத்த னைநவின்று*
உந்தி பறந்த* ஒளியிழை யார்கள்சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை* விட்டு சித்தன்சொல்*
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு* அல்லல் இல்லையே.* (2)
சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு* தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி* செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)
திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க* தேவரொடு தானவர்கள் திசைப்ப*
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்* ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்* அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்* முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி* இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய*
வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்* காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி*
தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்* செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்*
மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா* இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர*
தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த* தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை* செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்*
மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்* பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு*
திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்* தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்* உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்* பெரிய
வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து* வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை* உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்* ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*
வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த* அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்* குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி* மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப*
மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு* மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி*
எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்* ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப* சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்* தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய* வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்* தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
ஒழிவு ஒன்று இல்லாத* பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப் போய்,*
கழிய மிக நல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும் பொருள்?,*
மின் ஆர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
கொள்ளும் பயன் இல்லை* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவு இலன்* வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்ல வம்மினோ.
வம்மின் புலவீர்!* நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,*
இம் மன் உலகினில்* செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
நும் இன் கவி கொண்டு* நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,*
செம் மின் சுடர் முடி* என் திருமாலுக்குச் சேருமே.
சேரும் கொடை புகழ்* எல்லை இலானை,* ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்* மற்று யான் கிலேன்,*
மாரி அனைய கை* மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,*
பாரில் ஓர் பற்றையைப்* பச்சைப் பசும் பொய்கள் பேசவே.
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லை இலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே?
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்.*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
சாய் கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீ கண்டுகொள் என்று* வீடும் தரும் நின்றுநின்றே!
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ் உடல் நீங்கிப்போய்,*
சென்று சென்று ஆகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்* கவி ஆயினேற்கு,*
என்றும் என்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.