பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப்பறித்துப்*
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)
வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்* உன்தன் இந்திரஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும்நகரமும்* தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று*
தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய்ஒருவன்-
தனக்குப்பணிந்து* கடைத்தலைநிற்கை* நின்சாயையழிவுகண்டாய்*
புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி* உன்பொன்னடிவாழ்கவென்று*
இனத்துக்குறவர் புதியதுண்ணும்* எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)
காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு* அங்கோர்நிழலில்லை நீருமில்லை* உன்-
பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்* நான்எங்கும்காண்கின்றிலேன்*
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்* அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று*
பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காலுமெழா கண்ணநீரும் நில்லா* உடல்சோர்ந்து நடுங்கி* குரல்-
மேலுமெழா மயிர்க்கூச்சுமறா* எனதோள்களும் வீழ்வொழியா*
மாலுகளாநிற்கும் என்மனனே!* உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்*
சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருத்துக் கொடியுடையானும்* பிரமனும் இந்திரனும்* மற்றும்-
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு* மருந்து அறிவாருமில்லை*
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்-
திருத்தி* உன்கோயில் கடைப்புகப்பெய்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி* உன்பேரருளால்*
இக்கரையேறி இளைத்திருந்தேனை* அஞ்சேலென்று கைகவியாய்*
சக்கரமும் தடக்கைகளும்* கண்களும் பீதகவாடையொடும்*
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எத்தனைகாலமும் எத்தனையூழியும்* இன்றொடுநாளையென்றே*
இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்* இனிஉன்னைப்போகலொட்டேன்*
மைத்துனன்மார்களைவாழ்வித்து* மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!*
சித்தம் நின்பாலதறிதியன்றே* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அன்று வயிற்றில் கிடந்திருந்தே* அடிமைசெய்யலுற்றிருப்பன்*
இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்* இனிப்போகவிடுவதுண்டே?*
சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்* திருச்சக்கரமதனால்*
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-
நின்றபிரான்* அடிமேல் அடிமைத்திறம்* நேர்படவிண்ணப்பஞ்செய்*
பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்* புதுவைக்கோன்விட்டுசித்தன்*
ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்* உலகமளந்தான்தமரே. (2)
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திருவெள்ளறை நின்றானே.
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி* முன்பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின்வாய*
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண்தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திருவெள்ளறை நின்றானே.
மான வேல் ஒண் கண் மடவரல்* மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண்முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே.
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திருவெள்ளறை நின்றானே.
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே,
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல்இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* மாஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திருவெள்ளறை நின்றானே.
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
என் செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ இனி நம்மை*
என் செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறை கொண்டான்*
முன் செய்ய மாமை இழந்து* மேனி மெலிவு எய்தி*
என் செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பு ஊர்ந்தவே*.
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறை கொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்*
தீர்ந்த என் தோழீ!* என் செய்யும் ஊரவர் கவ்வையே?*
ஊரவர் கவ்வை எரு இட்டு* அன்னை சொல் நீர் படுத்து*
ஈர நெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
பேர் அமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
கார் அமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*
கடியன் கொடியன்* நெடிய மால் உலகம் கொண்ட-
அடியன்* அறிவு அரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவன் என்றே கிடக்கும் எல்லே*
துடி கொள் இடை மடத் தோழீ!* அன்னை என் செய்யுமே?
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
வலையுள் அகப்படுத்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலை கடல் பள்ளி அம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலை கொள் அகல் அல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கவும் ஆம் கொலோ?* தையலார் முன்பே*.
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து* மருது இடை-
போய் முதல் சாய்த்து* புள் வாய் பிளந்து களிறு அட்ட*
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை* எந் நாள்கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேண் உயர் வானத்து இருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடல் ஊர்துமே*.
யாம் மடல் ஊர்ந்தும்* எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
தூ மடல் தண் அம் துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
ஆம் மடம் இன்றி* தெருவுதோறு அயல் தையலார்*
நா மடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*.
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)