விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 
    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாணனை - பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும் - ஆயிரந் தோள்களும்
திசை திசை - திக்குகள்தோறும்
தென்றி வீழ - சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால் - சக்ராயுதத்தினால்

விளக்க உரை

(பத்நீஸம்ச்லேஷத்தில் வேண்டினவடி பாரித்துக்கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப்பெற்றால் ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்பவாஸம் பண்ணிக்கொண்டிருந்தபோதே உனக்குப்பணி செய்யவேணுமென்று பேரவாக்கொண்டிருந்து, பிறந்தபின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தி வீடுபாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-, விஷயாந்தரபரனாய்க் கண்டவிடங்களிலுந் தட்டித் திரிந்துகொண்டு வரும்போது தைவவசமாக இன்ற இத்திருமாலிருஞ்சோலையைக் கிட்டி இங்க உன்னைக் காணப்பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார். அடிமை செய்யல் உற்றிருப்பன் - கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி. ‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமைசெய்ய விரும்புவதில் ஸம்சயலேசமுமில்லையென்பது போதரும்.

English Translation

Even when I was in the womb, I had the desire to serve you; today I have come here and found you, how can I let you go? With your discus you cut asunder the thousand arms of Bana and scattered them far and wide. O Lord of Tirumalirumsolai, O My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்