2 எண்ணிக்கை பாடல் பாட
வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்க்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறு ஆயிற்றே. (2)
சீதக் கடலுள்* அமுது அன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்து உண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே*
பவள வாயீர் வந்து காணீரே (2)
வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லை இடர்தானே (2)
தன்முகத்துச் சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்*
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்* புழுதி அளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்* கூத்தினை இள மா மதீ!*
நின்முகம் கண்ணுள ஆகில்* நீ இங்கே நோக்கிப் போ (2)
மைத்தடங் கண்ணி* யசோதை தன்மகனுக்கு* இவை-
ஒத்தன சொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்* விரித்த தமிழ் இவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடர் இல்லையே (2)
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்* தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய* நின்று ஊர்வது போல்*
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப* உடை மணி பறை கறங்க*
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடை நடவானோ
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னைத்*
தாயர் மகிழ ஒன்னார் தளரத்* தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ் விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்* மக்களைப் பெறுவர்களே* (2)
பொன் இயல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்*
தன் இயல் ஓசை* சலன்-சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற்போல்*
என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ (2)
நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன*
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே (2)
வட்டு நடுவே* வளர்கின்ற* மாணிக்க-
மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்*
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்* புறம்புல்கிய*
வேய்த் தடந்தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து*
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்*
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே (2)
மெச்சு ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதிற் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கைசெய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)
வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த*
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும்
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே (2)
மின் அனைய நுண் இடையார்* விரி குழல்மேல் நுழைந்த வண்டு*
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* இவனைப் பெற்ற வயிறு உடையாள்*
என்னும் வார்த்தை எய்துவித்த* இருடிகேசா! முலை உணாயே (2)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* மாதவா! உண் என்ற மாற்றம்*
நீர் அணிந்த குவளை வாசம்* நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்* பொரு திறற் கஞ்சன் கடியன்*
காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னை தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!* கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த*
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்* அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)
வெண்ணெய் அளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணென இவ் இரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ணல் அரிய பிரானே!* நாரணா! நீராட வாராய் (2)
கார் மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*
வார் மலி கொங்கை யசோதை* மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
சீர் மலி செந்தமிழ் வல்லார்* தீவினை யாதும் இலரே (2)
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய் (2)
போது அமர் செல்வக்கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே (2)
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு* அதன் ஓசை கேட்கும்*
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்* காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை* புரை புரையால் இவை செய்ய வல்ல*
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய் (2)
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (2)
ஆற்றில் இருந்து* விளையாடுவோங்களைச்*
சேற்றால் எறிந்து* வளை துகிற் கைக்கொண்டு*
காற்றிற் கடியனாய்* ஓடி அகம் புக்கு*
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்*
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)
அங் கமலக் கண்ணன்தன்னை* அசோதைக்கு*
மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*
அங்கு அவர் சொல்லைப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே* (2)
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடைஇட்டு வருவான்*
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு* ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய்வைத்த பிரானே!*
அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே* (2)
அஞ்சன வண்ணனை* ஆயர் கோலக் கொழுந்தினை*
மஞ்சனம் ஆட்டி* மனைகள்தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த* கழல் அடி நோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!* (2)
என்றும் எனக்கு இனியானை* என் மணிவண்ணனைக்*
கன்றின் பின் போக்கினேன் என்று* அசோதை கழறிய*
பொன் திகழ் மாடப்* புதுவையர்கோன் பட்டன் சொல்*
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடர் இல்லையே* (2)
சீலைக் குதம்பை ஒருகாது* ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ*
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்* குளிர் முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்* நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை (2)
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனைக்*
கற்றினம் மேய்த்து வரக் கண்டு* உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
செற்றம் இலாதவர் வாழ்தரு* தென்புது வை விட்டுசித்தன் சொல்*
கற்று இவை பாட வல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)
நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின் அடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச் சனகன்* சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
அறிந்து அரசு களைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்கச்*
செறிந்த சிலைகொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓர் அடையாளம்* (2)
திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*
மிக்க பெரும் சபை நடுவே* வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-
வைத்துக்கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே (2)
வார் ஆரும் முலை மடவாள்* வைதேவி தனைக் கண்டு*
சீர் ஆரும் திறல் அனுமன்* தெரிந்து உரைத்த அடையாளம்*
பார் ஆரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
ஏர் ஆரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே* (2)
கதிர் ஆயிரம் இரவி* கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிர் இல் பெருமை இராமனை* இருக்கும் இடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொரு தோள்* இரணியன் ஆகம் பிளந்து* அரியாய்-
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டார் உளர் (2)
கரியமுகில்புரைமேனிமாயனைக்* கண்டசுவடுஉரைத்துப்*
புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி* விளைகழனிப்புதுவைத்*
திருவிற்பொலிமறைவாணன்* பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்*
பரவும்மனமுடைப்பத்தருள்ளார்* பரமனடிசேர்வர்களே (2)
அலம்பாவெருட்டாக்* கொன்றுதிரியும் அரக்கரை*
குலம்பாழ்படுத்துக்* குலவிளக்காய் நின்றகோன்மலை*
சிலம்பார்க்கவந்து* தெய்வமகளிர்களாடும்சீர்*
சிலம்பாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2)
மருதப்பொழிலணி* மாலிருஞ்சோலைமலைதன்னைக்*
கருதி உறைகின்ற* கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை*
விரதம்கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்*
கருதியுரைப்பவர்* கண்ணன்கழலிணை காண்பர்களே (2)
உருப்பிணிநங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்துஓடிச்சென்ற*
உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்டஉறைப்பன்மலை*
பொருப்பிடைக்கொன்றைநின்று* முறிஆழியும்காசும்கொண்டு*
விருப்பொடுபொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2)
ஆயிரம்தோள்பரப்பி* முடிஆயிரம்மின்இலக*
ஆயிரம்பைந்தலைய* அனந்தசயனன்ஆளும்மலை*
ஆயிரம்ஆறுகளும்* சுனைகள்பலஆயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலும்உடை* மாலிருஞ்சோலையதே (2)
மாலிருஞ்சோலைஎன்னும்* மலையைஉடையமலையை*
நாலிருமூர்த்திதன்னை* நால்வேதக்-கடல்அமுதை*
மேல்இருங்கற்பகத்தை* வேதாந்தவிழுப்பொருளின்*
மேல்இருந்தவிளக்கை* விட்டுசித்தன்விரித்தனனே (2)
நாவகாரியம்சொல்இலாதவர்* நாள்தொறும்விருந்துஓம்புவார்*
தேவகாரியம்செய்து* வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
மூவர்காரியமும்திருத்தும்* முதல்வனைச்சிந்தியாத* அப்-
பாவகாரிகளைப்படைத்தவன்* எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)
சீதநீர்புடைசூழ்* செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
ஆதியான்அடியாரையும்* அடிமையின்றித்திரிவாரையும்*
கோதில்பட்டர்பிரான்* குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*
ஏதம்இன்றிஉரைப்பவர்* இருடீகேசனுக்குஆளரே (2)
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி* அன்னை அத்தன் என் புத்திரர்பூமி*
வாசவார் குழலாள் என்றுமயங்கி* மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழல்ஆகியகேடிலீ! என்றும்*
பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2)
செத்துப்போவதோர் போதுநினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*
பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
காசும் கறைஉடைக் கூறைக்கும்* அங்குஓர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்குஅவத்தப் பேர்இடும்* ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு* நீங்கள் தேனித்துஇருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள் (2)
சீர்அணி மால்* திருநாமமே இடத்தேற்றிய*
வீர்அணி தொல்புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்* ஒன்பதோடுஒன்றும் வல்லவர்*
பேர்அணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2)
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திடுகிற்கும்*
கங்கையின் கரைமேல் கைதொழநின்ற* கண்டம்என்னும் கடிநகரே. (2)
வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி இடவகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டிடியத்* தலைப்பற்றிக் கரைமரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2)
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. (2)
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2)
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய்மறையோர்* துறைபடியத் துளும்பிஎங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2)
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட* திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று*
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட* ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)
தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*
என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த*
என்னுடைய திருவரங்கற்கன்றியும்* மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)
கைந்நாகத்திடர் கடிந்த* கனலாழிப் படையுயான் கருதும்கோயில்*
தென்நாடும் வடநாடும் தொழநின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்* விரித்ததமிழ் உரைக்கவல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்* இணைபிரியாது இருப்பர் தாமே.(2)
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனாகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)
வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*
நாக்கு நின்னைஅல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*
மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*
காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2)
காமர் தாதை கருதலர்சிங்கம்* காண இனிய கருங்குழற் குட்டன்*
வாமனன் என்மரகத வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னைச்*
சேமநன்குஅமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*
நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.
நெய்க்குடத்தைப்பற்றி* ஏறும்எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம்பெற உய்யப்போமின்*
மெய்க்கொண்டு வந்துபுகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*
பைக்கொண்ட பாம்புஅணையோடும்* பண்டுஅன்று பட்டினம்காப்பே. (2)
உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*
அறவெறி நாந்தகவாளே!* அழகியசார்ங்கமே! தண்டே!*
இறவுபடாமல்இருந்த* எண்மர் உலோகபாலீர்காள்!*
பறவைஅரையா! உறகல்* பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)
அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும்தானும்* அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்* பள்ளி கொள்கின்றபிரானைப்*
பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம்காவற்பொருட்டே. (2)
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப்பறித்துப்*
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)
உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய்ஒருவன்-
தனக்குப்பணிந்து* கடைத்தலைநிற்கை* நின்சாயையழிவுகண்டாய்*
புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி* உன்பொன்னடிவாழ்கவென்று*
இனத்துக்குறவர் புதியதுண்ணும்* எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-
நின்றபிரான்* அடிமேல் அடிமைத்திறம்* நேர்படவிண்ணப்பஞ்செய்*
பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்* புதுவைக்கோன்விட்டுசித்தன்*
ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்* உலகமளந்தான்தமரே. (2)
சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-
தன்னை வாழநின்ற நம்பீ!* தாமோதரா! சதிரா!*
என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*
நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)
பருப்பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*
திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின் மேல் பொறித்தாய்*
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே*
உருப்பொலிந்தநாவினேனை* உனக்கு உரித்தாக்கினையே. (2)
தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும்என்சோதிநம்பீ!*
வடதடமும் வைகுந்தமும்* மதிள்துவராபதியும்*
இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகைகொண்டனையே. (2)
வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*
கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*
ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*
சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)
SUBSCRIBE TO OUR WHATSAPP BROADCAST TO RECEIVE
TAMIL VEDAM UPDATES. FILL IN THE DETAILS BELOW AND CLICK JOIN US