பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
அரவு அணையாய்! ஆயர் ஏறே!* அம்மம் உண்ணத் துயிலெழாயே*
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்* இன்றும் உச்சி கொண்டதாலோ*
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்* வன முலைகள் சோர்ந்து பாயத்*
திரு உடைய வாய்மடுத்துத்* திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* வடி தயிரும் நறு வெண்ணெயும்*
இத்தனையும் பெற்றறியேன்* எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* ஏதும் செய்யேன் கதம் படாதே*
முத்து அனைய முறுவல் செய்து* மூக்கு உறிஞ்சி முலை உணாயே
தந்தம் மக்கள் அழுது சென்றால்* தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்*
வந்து நின்மேற் பூசல் செய்ய* வாழ வல்ல வாசுதேவா!*
உந்தையார் உன்திறத்தர் அல்லர்* உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்*
நந்தகோபன் அணி சிறுவா!* நான் சுரந்த முலை உணாயே
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட* கள்ளச் சகடு கலக்கு அழிய*
பஞ்சி அன்ன மெல்லடியால்* பாய்ந்த போது நொந்திடும் என்று*
அஞ்சினேன் காண் அமரர் கோவே!* ஆயர் கூட்டத்து அளவன்றாலோ*
கஞ்சனை உன் வஞ்சனையால்* வலைப்படுத்தாய்! முலை உணாயே
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
மாயந்தன்னால் வலைப்படுக்கில்* வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்* சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!* அமர்ந்து வந்து என் முலை உணாயே
மின் அனைய நுண் இடையார்* விரி குழல்மேல் நுழைந்த வண்டு*
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* இவனைப் பெற்ற வயிறு உடையாள்*
என்னும் வார்த்தை எய்துவித்த* இருடிகேசா! முலை உணாயே (2)
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்* பெறுதும் என்னும் ஆசையாலே*
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்* கண்ணிணையால் கலக்க நோக்கி*
வண்டு உலாம் பூங்குழலினார்* உன் வாயமுதம் உண்ண வேண்டிக்*
கொண்டு போவான் வந்து நின்றார்* கோவிந்தா நீ முலை உணாயே
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* இருவர் அங்கம் எரிசெய்தாய்!* உன்
திரு மலிந்து திகழு மார்வு* தேக்க வந்து என் அல்குல் ஏறி*
ஒரு முலையை வாய்மடுத்து* ஒரு முலையை நெருடிக்கொண்டு*
இரு முலையும் முறை முறையாய்* ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
அங் கமலப் போதகத்தில்* அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்*
செங் கமல முகம் வியர்ப்ப* தீமை செய்து இம் முற்றத்தூடே*
அங்கம் எல்லாம் புழுதியாக* அளைய வேண்டா அம்ம! விம்ம*
அங்கு அமரர்க்கு அமுது அளித்த* அமரர் கோவே! முலை உணாயே
ஓட ஓடக் கிண்கிணிகள்* ஒலிக்கும் ஓசைப் பாணியாலே*
பாடிப் பாடி வருகின்றாயைப்* பற்பநாபன் என்று இருந்தேன்*
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு* அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி*
ஓடி ஒடிப் போய்விடாதே* உத்தமா! நீ முலை உணாயே
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* மாதவா! உண் என்ற மாற்றம்*
நீர் அணிந்த குவளை வாசம்* நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* (2)
தையலாள்மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும் அன்று*
செய்த வெம் போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து*
அரக்கன் மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து*
அவனே பின் ஓர் தூது* ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*
பந்து அணைந்த மெல்விரலாள்* பாவைதன் காரணத்தால்*
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலைமேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் அம் தண் கழனி*
ஏலம் நாறும் பைம் புறவின்* எவ்வுள் கிடந்தானே*
சோத்தம் நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும் நம்பி எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசைமுகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்து இருந்த*
வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூடநின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு இனியன்*
எந்தை எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீல மேனி மணி வண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகன் ஆய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்,
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏ பாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈ பாவம் செய்து* அருளால் அளிப்பார் ஆர்,*
மா பாவம் விட* அரற்குப் பிச்சை பெய்,*
கோபால கோளரி* ஏறு அன்றியே.
ஏறனை பூவனை* பூமகள் தன்னை,*
வேறுஇன்றி விண் தொழத்* தன்னுள் வைத்து,*
மேல் தன்னை மீதிட* நிமிர்ந்து மண் கொண்ட.*
மால் தனின் மிக்கும் ஓர்* தேவும் உளதே.
தேவும் எப் பொருளும் படைக்கப்,*
பூவில் நான்முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே.
தகும் சீர்த்* தன் தனி முதலினுள்ளே,*
மிகும் தேவும்* எப் பொருளும் படைக்கத்,*
தகும் கோலத்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
மிகும் சோதி* மேல் அறிவார் எவரே.
எவரும் யாவையும்* எல்லாப் பொருளும்,*
கவர்வு இன்றித்* தன்னுள் ஒடுங்க நின்ற,*
பவர் கொள் ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம் ஆழி* அம் பள்ளியாரே,
பள்ளி ஆல் இலை* ஏழ் உலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள் உள் ஆர் அறிவார்* அவன் தன்,*
கள்ள மாய* மனக்கருத்தே.
கருத்தில் தேவும்* எல்லாப் பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரான் அன்றி,* யாரே
திருத்தித்* திண் நிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக்* காக்கும் இயல்வினரே.
காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,*
சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே.
கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின்
உள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.