பிரபந்த தனியன்கள்

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

   பாசுரங்கள்


    நேர்ந்தேன் அடிமை*  நினைந்தேன் அது ஒண் கமலம்,* 
    ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,*  - ஆர்ந்த-           

    அடிக் கோலம்*  கண்டவர்க்கு என்கொலோ,*  முன்னைப்-
    படிக் கோலம் கண்ட பகல்?  


    பகல் கண்டேன்*  நாரணனைக் கண்டேன்,*  - கனவில்-
    மிகக் கண்டேன்*  மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்* 

    ஊன் திகழும் நேமி*  ஒளி திகழும் சேவடியான்,*
    வான் திகழும் சோதி வடிவு.         


    வடிக் கோல வாள் நெடுங் கண்*  மா மலராள்,*  செவ்விப்-
    படிக் கோலம்*  கண்டு அகலாள் பல்நாள்,*  - அடிக்கோலி-

    ஞாலத்தாள் பின்னும்*  நலம் புரிந்தது என்கொலோ,*
    கோலத்தால் இல்லை குறை.


    குறையாக வெம் சொற்கள்*  கூறினேன் கூறி,* 
    மறை ஆங்கு என உரைத்த மாலை,*  - இறையேனும்- 

    ஈயும்கொல் என்றே*  இருந்தேன் எனைப் பகலும்,* 
    மாயன்கண் சென்ற வரம்.


    வரம் கருதி தன்னை*  வணங்காத வன்மை,*
    உரம் கருதி மூர்க்கத்தவனை,*  - நரம் கலந்த-

    சிங்கமாய்க் கீண்ட*  திருவன் அடி இணையே,*
    அம் கண் மா ஞாலத்து அமுது.       


    அமுது என்றும் தேன் என்றும்*  ஆழியான் என்றும்,* 
    அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்,*  - அமுது அன்ன

    சொல் மாலை ஏத்தித்*  தொழுதேன் சொலப்பட்ட,*
    நல் மாலை ஏத்தி நவின்று.     


    நவின்று உரைத்த நாவலர்கள்*  நாள் மலர் கொண்டு,*  ஆங்கே-
    பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்,*  - பயின்றார் தம்-

    மெய்த் தவத்தால்*  காண்பு அரிய மேக மணி வண்ணனை,*  யான்-
    எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?        


    இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-
    சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  - அன்று- 

    கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,* 
    திருக்கோட்டி எந்தை திறம்.    


    திறம்பிற்று இனி அறிந்தேன்*  தென் அரங்கத்து எந்தை,*
    திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,*  - திறம்பாச்-

    செடி நரகை நீக்கி*  தாம் செல்வதன் முன்,*  வானோர்-
    கடி நகர வாசல் கதவு.


    கதவி கதம் சிறந்த*  கஞ்சனை முன் காய்ந்து,* 
    அதவி போர் யானை ஒசித்து,*  - பதவியாய்ப்-

    பாணியால் நீர் ஏற்று*  பண்டு ஒருகால் மாவலியை,*
    மாணியாய்க் கொண்டிலையே மண்.      


    மண்ணுலகம் ஆளேனே*  வானவர்க்கும் வானவனாய்,*
    விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,*  - நண்ணித்-

    திருமாலை*  செங்கண் நெ.டியானை,*  எங்கள்-
    பெருமானை கைதொழுத பின்             


    பின்னால் அரு நரகம்*  சேராமல் பேதுறுவீர்,* 
    முன்னால் வணங்க முயல்மினோ,*  - பல் நூல்-

    அளந்தானை*  கார்க் கடல் சூழ் ஞாலத்தை,*  எல்லாம்-
    அளந்தான் அவன் சேவடி   


    அடியால் முன் கஞ்சனைச் செற்று,*  அமரர் ஏத்தும்-
    படியான்*  கொடிமேல் புள் கொண்டான்,*  - நெடியான் தன்-

    நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,*  தாம் வேண்டும்-
    காமமே காட்டும் கடிது.  


    கடிது கொடு நரகம்*  பிற்காலும் செய்கை,*
    கொடிது என்று அது கூடாமுன்னம்,*  - வடி சங்கம்-

    கொண்டானை*  கூந்தல் வாய் கீண்டானை,*  கொங்கை நஞ்சு-
    உண்டானை*  ஏத்துமினோ உற்று. 


    உற்று வணங்கித்*  தொழுமின் உலகு ஏழும்*
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,*  - பற்றிப்-

    பொருந்தாதான் மார்பு இடந்து*  பூம் பாடகத்துள்-
    இருந்தானை,*  ஏத்தும் என் நெஞ்சு.    


    என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தானவனை-
    வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-

    ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-
    ஆழியான்*  அத்தியூரான்.


    அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
    துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-

    மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
    இறை ஆவான் எங்கள் பிரான். (2)


    எங்கள் பெருமான்*  இமையோர் தலைமகன்! நீ,* 
    செங்கண் நெடு மால் திருமார்பா,*  - பொங்கு-

    பட மூக்கின் ஆயிர வாய்ப்*  பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,* 
    குடமூக்குக் கோயிலாக் கொண்டு.   


    கொண்டு வளர்க்க*  குழவியாய்த் தான் வளர்ந்தது* 
    உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,*  - கொண்டு-

    குடம் ஆடி*  கோவலனாய் மேவி,*  என் நெஞ்சம்-
    இடமாகக் கொண்ட இறை.           


    இறை எம் பெருமான் அருள் என்று*  இமையோர்-
    முறை நின்று*  மொய்ம் மலர்கள் தூவ,*  - அறை கழல-

    சேவடியான்*  செங்கண் நெடியான்,*  குறள் உருவாய்-
    மாவடிவின்*  மண் கொண்டான் மால். (2) 


    மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
    மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-

    விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
    அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)