பிரபந்த தனியன்கள்
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.
பாசுரங்கள்
மாலே நெடியோனே!* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா!* வியன் துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின் காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என் தன்-
அளவு அன்றால்* யானுடைய அன்பு. (2)