பிரபந்த தனியன்கள்

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

   பாசுரங்கள்


    மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
    மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-

    விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
    அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)