விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடியால் முன் கஞ்சனைச் செற்று,*  அமரர் ஏத்தும்-
    படியான்*  கொடிமேல் புள் கொண்டான்,*  - நெடியான் தன்-
    நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,*  தாம் வேண்டும்-
    காமமே காட்டும் கடிது.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் – முன்னே
அடியால் – திருவடியினால்
கஞசனே – கம்ஸனை
செற்று – உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான் – தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்

விளக்க உரை

எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில், அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நீங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களெல்லாம் கைபுகுமென்கிறாரிதில். உயர்ந்த சிங்காசனத்தின் மீது வீற்றிருந்த கம்ஸனைத் தலைமயிர் பற்றியிழுத்துக் கிரீடம் சிதறக் கீழேநள்ளித் திருவடியால் உதைத்து முடித்ததனால்இந்த வீரச்செயலிலே ஈடுபட்டுத் தேவர்கள் துதிக்கநின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல்லுங்கள், சொன்னால், சொன்னவாய் மூடுவதற்குள்ளே தாம் தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்றாராயிற்று.

English Translation

The Lord smote and killed kamsa and stood worshipped by the gods. He bears the Garuda on his banner. Always recite his glorious names. For so little, he fulfills all our desires, quickly and esily.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்