2 எண்ணிக்கை பாடல் பாட

அன்பே தகளியா*  ஆர்வமே நெய் ஆக,* 
இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 
ஞானத் தமிழ் புரிந்த நான். (2)  

அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-
மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
இறை ஆவான் எங்கள் பிரான். (2)

இறை எம் பெருமான் அருள் என்று*  இமையோர்-
முறை நின்று*  மொய்ம் மலர்கள் தூவ,*  - அறை கழல-
சேவடியான்*  செங்கண் நெடியான்,*  குறள் உருவாய்-
மாவடிவின்*  மண் கொண்டான் மால். (2) 

மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-
விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)