பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு* அதன் ஓசை கேட்கும்*
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்* காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை* புரை புரையால் இவை செய்ய வல்ல*
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய் (2)
வருக வருக வருக இங்கே* வாமன நம்பீ! வருக இங்கே*
கரிய குழல் செய்ய வாய் முகத்து* எம் காகுத்த நம்பீ! வருக இங்கே*
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!* அஞ்சனவண்ணா* அசலகத்தார்*
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்* பாவியேனுக்கு இங்கே போதராயே
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு* தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்*
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்* உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்*
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான்* வழக்கோ? அசோதாய்!*
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்* வாழ ஒட்டான் மதுசூதனனே
கொண்டல்வண்ணா! இங்கே போதராயே* கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே*
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே*
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்* பல்வளையாள் என்மகள் இருப்ப*
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று* இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்*
சாளக்கிராமம் உடைய நம்பி* சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்*
ஆலைக் கரும்பின் மொழி அனைய* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்* போதரேன் என்னாதே போதர் கண்டாய்*
ஏதேனும் சொல்லி அசலகத்தார்* ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்*
கோதுகலம் உடைக்குட்டனேயோ!* குன்று எடுத்தாய்! குடம் ஆடு கூத்தா!*
வேதப் பொருளே! என் வேங்கடவா!* வித்தகனே! இங்கே போதராயே
செந்நெல் அரிசி சிறு பருப்புச்* செய்த அக்காரம் நறுநெய் பாலால்*
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்* பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்*
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி* எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
கேசவனே! இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
நேசம் இலாதார் அகத்து இருந்து* நீ விளையாடாதே போதராயே*
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்* தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்* தாமோதரா! இங்கே போதராயே
கன்னல் இலட்டுவத்தோடு சீடை* காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு*
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்* இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்*
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்* பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
சொல்லில் அரசிப் படுதி நங்காய்!* சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்* கையில் வளையைக் கழற்றிக்கொண்டு*
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற* அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து*
நல்லன நாவற் பழங்கள் கொண்டு* நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (2)
சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)
கார் மன்னு நீள் விசும்பும்* கடலும் சுடரும் நிலனும் மலையும்*
தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்* தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேர் மன்னு தென்னவனை முனையில்* செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,*
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்* ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*
வரம் தரு மா மணிவண்ணன் இடம்* மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்* நெடு வாயில் உக செருவில் முன நாள்*
பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
அண்டமும் எண் திசையும் நிலனும்* அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
எந்தை பிரானது இடம்* ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விண்டவர் இண்டைக் குழாமுடனே* விரைந்தார் இரிய செருவில் முனிந்து*
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்* துயர் தீர்த்து அரவம் வெருவ*
முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்* திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற*
பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம்அதுவே.
திண் படைக் கோளரியின் உரு ஆய்* திறலோன் அகலம் செருவில் முன நாள்*
புண் படப் போழ்ந்த பிரானது இடம்* பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப* விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த*
பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்* மாண் உரு ஆய் முன நாள்*
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
உலகு உடை மன்னவன் தென்னவனைக்* கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ,
பல படை சாய வென்றான் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.
குடைத் திறல் மன்னவன் ஆய்* ஒருகால் குரங்கைப் படையா*
மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்* அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்* வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த*
படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து* முன்னே ஒருகால் செருவில் உருமின்*
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்* தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
கறை உடை வாள் மற மன்னர் கெட* கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்*
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகர்மேல்*
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
ஈதே யான் உன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மை தோய் சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின் கழல்* யான் எய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே.
செய்யேல் தீவினை என்று* அருள் செய்யும்,* என்
கை ஆர் சக்கரக்* கண்ண பிரானே,*
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்* நின் கழல்
எய்யாது ஏத்த,* அருள்செய் எனக்கே.
எனக்கே ஆட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடு இன்றி மன்னி,*
தனக்கே ஆக* எனைக் கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான் கொள் சிறப்பே.
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பு இல்* பல் பிறவிப் பெருமானை,*
மறப்பு ஒன்று இன்றி* என்றும் மகிழ்வனே.
மகிழ் கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ் கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ் கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்க வாராயே.
வாராய்* உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.
எக்காலத்து எந்தையாய்* என்னுள் மன்னில்,* மற்று
எக் காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர் விழுங்கும்,* என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என் தனதே* என்று இருந்தேன்,*
யானே நீ* என் உடைமையும் நீயே,*
வானே ஏத்தும்* எம் வானவர் ஏறே
ஏறேல் ஏழும்* வென்று ஏர் கொள் இலங்கையை,*
நீறே செய்த* நெடுஞ் சுடர்ச் சோதி,*
தேறேல் என்னை* உன் பொன் அடி சேர்த்து* ஒல்லை-
வேறே போக* எஞ்ஞான்றும் விடலே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.