பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
கட்டுரைக்கில் தாமரை* நின் கண் பாதம் கை ஒவ்வா,*
சுட்டு உரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்* புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய் புற்கு என்றே* காட்டுமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய்* நின் இகழ்ந்து பின்,* மற்று ஓர்
பரம் சோதி இன்மையின்* படி ஓவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படர் உலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்பு உரைக்கமாட்டேனே.
மாட்டாதே ஆகிலும்* இம் மலர் தலை மாஞாலம்,* நின்
மாட்டு ஆய மலர்புரையும்* திருவுருவம் மனம் வைக்க*
மாட்டாத பலசமய* மதி கொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம் வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அரும்தவத்த* மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,*
வருந்தாத ஞானம் ஆய்* வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
வரும் காலம் நிகழ் காலம்* கழி காலம் ஆய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலர் ஆக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகு எல்லாம்* படை என்று முதல் படைத்தாய்*
கேழ்த்த சீர் அரன் முதலாக்* கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்து அமரர் துதித்தால்* உன் தொல் புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடர் உடம்புஆய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானம் ஆய்* முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
மாசூணா வான் கோலத்து* அமரர் கோன் வழிப்பட்டால்,*
மாசூணா உனபாத* மலர்ச் சோதி மழுங்காதே?
மழுங்காத வைந் நுதிய* சக்கர நல் வலத்தையாய்,*
தொழும் காதல் களிறு அளிப்பான்* புள் ஊர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படை ஆக மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச் சோதி மறையாதே?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
வன் மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பல்மா மாயப்* பல் பிறவியில் படிகின்ற யான்,*
தொல் மா வல்வினைத்* தொடர்களை முதல் அரிந்து,*
நின் மா தாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.
சூழ்ச்சி ஞானச்* சுடர் ஒளி ஆகி,* என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து* நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகை அருளாய் வந்தே.
வந்தாய் போலே* வந்தும் என் மனத்தினை நீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இது ஆகில்,*
கொந்து ஆர் காயாவின்* கொழு மலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்கு வந்து அணுகிற்பனே?
கிற்பன் கில்லேன்* என்று இலன் முனம் நாளால்,*
அற்ப சாரங்கள்* அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
பற்பல் ஆயிரம்* உயிர் செய்த பரமா,* நின்
நற் பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானம் இன்றி* வினை இயல் பிறப்பு அழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவு அற நிறைந்து நின்ற,*
மெய்ஞ் ஞானச் சோதிக்* கண்ணனை மேவுதுமே?
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதல் இன்றி* உன் கழல் வணங்கிற்றிலேன்,*
பாவு தொல் சீர்க் கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கு எய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பல காலம்* வழி திகைத்து அலமர்கின்றேன்,*
மேவி அன்று ஆ நிரை காத்தவன்* உலகம் எல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம் விட்டால்,*
அலைப்பூண் உண்ணும்* அவ் அல்லல் எல்லாம் அகல,*
கலைப் பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடு உயிரே
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர் வானவர் கோனொடும்,*
சிந்து பூ மகிழும்* திருவேங்கடத்து,*
அந்தம் இல் புகழ்க்* கார் எழில் அண்ணலே.
அண்ணல் மாயன்* அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி,* வாய்க் கருமாணிக்கம்,*
தெள் நிறை சுனை நீர்த்,* திருவேங்கடத்து,*
எண் இல் தொல் புகழ்* வானவர் ஈசனே.
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்* நிறைவு ஒன்றும் இலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரம் சுடர்ச் சோதிக்கே.
சோதி ஆகி* எல்லா உலகும் தொழும்,*
ஆதிமூர்த்தி என்றால்* அளவு ஆகுமோ?,*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை,*
தீது இல் சீர்த்* திருவேங்கடத்தானையே.
வேம் கடங்கள்* மெய்மேல் வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நம என்னல்-
ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.
சுமந்து மாமலர்* நீர் சுடர் தூபம் கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்று எழும்* திருவேங்கடம் நங்கட்குச்,*
சமன் கொள் வீடு தரும்* தடங் குன்றமே.
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு:பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடந் தாழ்வரே.
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூவும் ஆறு அறியமாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவு சீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நா இயல் கலைகள் என்கோ!* ஞான நல்ஆவி என்கோ,*
பாவு சீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே!
பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச் செவ்வாயன் என்கோ,*
அம் கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திரு மறு மார்பன் என்கோ,*
சங்கு சக்கரத்தன் என்கோ!* சாதி மாணிக்கத்தையே!
சாதி மாணிக்கம் என்கோ!* சவி கொள் பொன் முத்தம் என்கோ*
சாதி நல் வயிரம் என்கோ,* தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
ஆதி அம் சோதி என்கோ!* ஆதி அம் புருடன் என்கோ,*
ஆதும் இல் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே!
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினை கெடுக்கும்,*
நச்சும் மா மருந்தம் என்கோ!* நலங் கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச் சுவைத் தேறல் என்கோ!* கனி என்கோ! பால் என்கேனோ!
பால் என்கோ!* நான்கு வேதப் பயன் என்கோ,* சமய நீதி
நூல் என்கோ!* நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ,* வினையின் மிக்க பயன் என்கோ,* கண்ணன் என்கோ!-
மால் என்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே!
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனம் இல் செல்வம் என்கோ!* ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
ஊனம் இல் மோக்கம் என்கோ!* ஒளி மணி வண்ணனையே!
ஒளி மணி வண்ணன் என்கோ!* ஒருவன் என்று ஏத்த நின்ற*
நளிர் மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்* படைத்து அவை ஏத்த நின்ற,*
களி மலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே!
கண்ணனை மாயன் தன்னை* கடல் கடைந்து அமுதம் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணி நன்கு உறைகின்றானை* ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,*
எண்ணும் ஆறு அறியமாட்டேன்,* யாவையும் எவரும் தானே.
யாவையும் எவரும் தானாய்* அவரவர் சமயம் தோறும்,*
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவி சேர் உயிரின் உள்ளால்* ஆதும் ஓர் பற்று இலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே.
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தண்கடல் வட்டத்து உள்ளாரைத்* தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,*
திண்கழல்கால் அசுரர்க்குத்* தீங்கு இழைக்கும் திருமாலைப்,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே.
மலையை எடுத்து கல்மாரி* காத்து* பசுநிரை தன்னைத்,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடு ஆதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலை கொள் நரகத்து அழுந்திக்* கிடந்து உழைக்கின்ற வம்பரே.
வம்பு அவிழ் கோதைபொருட்டா* மால்விடை ஏழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டம் இட்டு ஆடி* கோகு உகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயன் என்னே* சாது சனங்களிடையே?
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதி அம் சோதி உருவை* அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதி உணர்ந்தவர் முன்னா* என் சவிப்பார் மனிசரே?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னை* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியை கரும்பின் இன் சாற்றை* கட்டியை தேனை அமுதை,*
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்* முழுது உணர் நீர்மையினார.
நீர்மை இல் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந்து ஆடி*
நீர்மல்கு கண்ணினர் ஆகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊன் மல்கி மோடு பருப்பார்* உத்தமர்கட்கு என் செய்வாரே?
வார்புனல் அம் தண் அருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றி* பித்தர் என்றே பிறர்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலோகர் சிரிக்க நின்று ஆடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே.
அமரர் தொழப்படுவானை* அனைத்து உலகுக்கும் பிரானை,*
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்று ஆக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்து எழுந்து ஆடி* அலற்றுவதே கருமமே.
கருமமும் கரும பலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனை செங்கண் மாலினை* தேவபிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
மூவர் ஆகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவம் உள்ளன நீக்குவானை* தடங் கடல் கிடந்தான் தன்னை,*
தேவ தேவனை தென் இலங்கை* எரி எழச் செற்ற வில்லியை,*
பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ.
பரவி வானவர் ஏத்த நின்ற* பரமனை பரஞ்சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனை குடக் கூத்தனை,*
அரவம் ஏறி அலை கடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன் பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.
வைம்மின் நும் மனத்து என்று* யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை ஆளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தித் திரிவரே.
திரியும் காற்றோடு அகல் விசும்பு* திணிந்த மண் கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோர் இறை,*
சுரியும் பல் கருங் குஞ்சி* எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்* புகநின்ற செங்கண்மால்,*
நாற்றம் தோற்றம் சுவை ஒலி* உறல் ஆகி நின்ற,* எம் வானவர்
ஏற்றையே அன்றி* மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
எழுமைக்கும் எனது ஆவிக்கு* இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணிவண்ணனை குடக் கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னல் கனியினை,*
தொழுமின் தூய மனத்தர் ஆய்* இறையும் நில்லா துயரங்களே.
துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்* அவை அல்லன் ஆய்,*
உயர நின்றது ஓர் சோதி ஆய்* உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கும் நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,*
தயரதற்கு மகன் தன்னை அன்றி* மற்று இலேன் தஞ்சமாகவே.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு* தானும் ஆய் அவை அல்லன் ஆய்,*
எஞ்சல் இல் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!* அவன் இவன் என்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் எவன்* அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்*
படஅரவின் அணைக்கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
ஆளும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
தோளும் ஓர் நான்கு உடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக் கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடை நாதரே.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறும் துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து* எந்தை பிரான் தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடையார்களே.
உடை ஆர்ந்த ஆடையன்* கண்டிகையன் உடை நாணினன்*
புடை ஆர் பொன் நூலினன்* பொன் முடியன் மற்றும் பல்கலன்,*
நடையா உடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடை ஆர் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமை ஒழிய* அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே.
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
துளிக்கும் நறும் கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக் கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,*
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்* சன்ம சன்மாந்தரம் காப்பரே.
சன்ம சன்மாந்தரம் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்* கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
நன்மை பெறுத்து எம்மை* நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.
நம்பனை ஞாலம் படைத்தவனை* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்* உணர்வு அரியான் தன்னை,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்* அவர் கண்டீர்,*
எம் பல் பிறப்பிடைதோறு* எம் தொழுகுலம் தாங்களே.
குலம் தாங்கு சாதிகள்* நாலிலும் கீழ் இழிந்து,* எத்தனை
நலம் தான் இலாத* சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,*
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்* மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம் அடிகளே.
அடி ஆர்ந்த வையம் உண்டு* ஆல் இலை அன்னவசம் செய்யும,*
படி யாதும் இல் குழவிப்படி* எந்தை பிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்* அடியார் அடியோங்களே.
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
நெஞ்சமே! நீள் நகர் ஆக* இருந்த என்
தஞ்சனே,* தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலம் கொள்வான்* குறள் ஆகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்,* என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும்* வானவர் தம்-
நாயகனே,* நாள் இளம் திங்களைக்* கோள் விடுத்து,*
வேய் அகம் பால் வெண்ணெய்* தொடு உண்ட ஆன் ஆயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே.
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடு இன்றி,*
பை கொள் பாம்பு ஏறி* உறை பரனே,* உன்னை
மெய்கொள்ளக் காண( விரும்பும் என் கண்களே.
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண் கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்து செல்,*
பண் கொண்ட புள்ளின்* சிறகு ஒலி பாவித்து,*
திண் கொள்ள ஓர்க்கும்* கிடந்து என் செவிகளே.
செவிகளால் ஆர* நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே* காலப் பண் தேன்* உறைப்பத் துற்று,*
புவியின்மேல்* பொன் நெடும் சக்கரத்து உன்னையே.*
அவிவு இன்றி ஆதரிக்கும்* எனது ஆவியே.
ஆவியே! ஆர் அமுதே!* என்னை ஆளுடைத்,*
தூவி அம் புள் உடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உன கோலமே.
கோலமே! தாமரைக் கண்ணது ஓர்* அஞ்சன
நீலமே,* நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்று செல்லாதன* முன் நிலாம்
காலமே,* உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
கொள்வன் நான் மாவலி* மூவடி தா என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள் வன்மை தீர,* ஓர் ஆயிரம் தோள் துணித்த*
புள் வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மா மருதின் இடை போய* எம்
பெருந்தகாய்,* உன் கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசகமாலை கொண்டு* உன்னையே
இருந்து இருந்து* எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலம்கொள்சீர்* நன் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
ஒழிவு ஒன்று இல்லாத* பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப் போய்,*
கழிய மிக நல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும் பொருள்?,*
மின் ஆர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
கொள்ளும் பயன் இல்லை* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவு இலன்* வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்ல வம்மினோ.
வம்மின் புலவீர்!* நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,*
இம் மன் உலகினில்* செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
நும் இன் கவி கொண்டு* நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,*
செம் மின் சுடர் முடி* என் திருமாலுக்குச் சேருமே.
சேரும் கொடை புகழ்* எல்லை இலானை,* ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்* மற்று யான் கிலேன்,*
மாரி அனைய கை* மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,*
பாரில் ஓர் பற்றையைப்* பச்சைப் பசும் பொய்கள் பேசவே.
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லை இலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே?
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்.*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
சாய் கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீ கண்டுகொள் என்று* வீடும் தரும் நின்றுநின்றே!
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ் உடல் நீங்கிப்போய்,*
சென்று சென்று ஆகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்* கவி ஆயினேற்கு,*
என்றும் என்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டு இலனே.
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்* மூவுலகுக்கு உரிய,*
கட்டியை தேனை அமுதை* நன்பாலை கனியை கரும்பு தன்னை,*
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்ட பின்னை* இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவு இலனே.
',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'* என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர் தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனை பொன் சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப் பற்றி* யான் இறையேனும் இடர் இலனே.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏற திண்தேர்கடவி,*
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயர் இலனே.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றி கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பம் இலனே.
துன்பமும் இன்பமும் ஆகிய* செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,*
இன்பம் இல் வெம் நரகு ஆகி* இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி* பலபல மாய மயக்குக்களால்,*
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று* ஏதும் அல்லல் இலனே.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்* அழகு அமர் சூழ் ஒளியன்,*
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு* எல்லாக் கருமங்களும் செய்,*
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி* யான் ஓர் துக்கம் இலனே.
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று* ஒன்றும் தளர்வு இலனே.
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானம் ஒன்றாய்,*
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்* அருவு ஆகி நிற்கும்,*
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி* யான் என்றும் கேடு இலனே.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)