2 எண்ணிக்கை பாடல் பாட
நான்முகனை* நாராயணன் படைத்தான்*
நான்முகனும் தான்முகமாய்ச்* சங்கரனைத் தான்படைத்தான்*
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு* அறிவித்தேன் ஆழ்பொருளை*
சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து (2)
தாளால் உலகம்* அளந்த அசைவேகொல்*
வாளாகிடந்தருளும்* வாய்திறவான்* நீள்ஓதம்
வந்துஅலைக்கும் மாமயிலை* மாஅல்லிக்கேணியான்*
ஐந்தலைவாய் நாகத்துஅணை? (2)
நாகத்துஅணைக் குடந்தை* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில்* நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். (2)