- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தொண்டு ஆம் இனமும் இமையோரும்* துணை நூல் மார்வின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று* அணையும் கோயில் அருகு எல்லாம்*
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத்*
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
காணொளி
பதவுரை
தொண்டு ஆம் இனமும் - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும் - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும் - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில் - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம் - சுற்றுப்பிரதேசங்களெங்கும்
விளக்க உரை
English Translation
Bands of devotees, hordes of gods and batches of twin-thread-house-holder Vedic seers, seek the Lord’s grace and come to worship him in his temple surrounded by bee-humming groves and watered fields where Kaya-fish dances and lotus blooms raise their cheerful faces. Go to Him in Saligrama, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்