- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மெய்யெலாம் போக விட்டு* விரிகுழ லாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட* போட்கனேன் வந்து நின்றேன்,*
ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன்* பொய்யனேன் பொய்ய னேனே.
காணொளி
பதவுரை
விளக்க உரை
தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணையொன்றைய எதிர்பார்திருப்பவனடியேன் என்கிறார். மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்; அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை; விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன். ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற விச்வாஸமொன்றுமாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே, வெட்கமும் அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார். போழ்க்கன் - முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு.
English Translation
O Lord, Aranga! I am a vagabond full of vice, I have no integrity. I was caught in the net of coiffured dames. Desirous of your grace, I have come to you now. O False, false me! I stand before you shamelessly.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்