- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள். கூக்குரல் கேட்டும் நங்கண்ணன் மாயன் வெளிப்படான்= உங்களுடைய கூச்சல் கேளாதவிடமுண்டோ? எங்குங் கேட்குமே; திரு நாட்டிலுள் கேட்குமே; அது கேட்டு இங்கு நான் படுகிற பாட்டை அங்கு அவனும் பட நேருமே; அப்படியிருந்தும் அவன் பதறியோடி வாராதே கிடக்கிறானே! இஃது என்னோவென்கிறாள். இத்தால் தன்னுடைய ஆற்றாமைமிகுதியைக் காட்டினாளாயிற்று. இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை முன்னிலும் உயர்ந்த தொனியைச் செய்தன; செய்யவே, மேற்கிளைக் கொள்ளேன்மின் நீருஞ் சேவலும் கோழிகாள் என்கிறாள். இங்கு கோழியென்றது மயிலை. கிளையாது தொனி; மேலான கிளை–உச்சத்வநி, உங்கள் ஜாதிக்குத் தக்கதாய் ப்ரணயப்ரயுக்தமான உச்சத்வநியைப் பண்ணவேண்டா வென்றபடி. இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை உச்சத்வனியையே செய்ய; என்னுடைய ஸர்வகரணங்களையும் முடித்தே விடுவதாக ஸங்கல்பித்து வந்தன்றோ நீங்கள் இப்படி உச்சத்வனியைப் பண்ணா நின்றீர்கள்; என்னுடைய கரணக்ராமங்களில் ஒன்றும் இங்கில்லையே; (வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே) என்னுடைய ஸகலகாரணங்களும் அவன் பக்கலிலே சென்று சேர்ந்தனவே; அங்கே சென்று கத்துங்கோள் என்றாளாயிற்று. 'உம்முடைய வாக்கும் மனமும் கருமமும் அங்கே சென்றற்றவனவாசில் இங்கே நீர் பேசுகிறபடி எங்ஙனே?' என்று அவை கேட்பதாகக் கொண்டு, ஆக்கையுமாலியும் அந்தரம் நின்றுழலுமே என்கிறாள்; உடலும் உயிரும் ஏதோ நடுவே நின்று அனர்த்தப் படுகின்றன வத்தனை; தரித்து நிற்பதாக நினைக்க வேண்டா என்றபடி.
English Translation
O Peahen-and peacock! The trickster Krishna does not heed your calls, pray do not take to the upper register. My heart and speech and deeds are all these with him, my soul and body flounder somewhere between!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்