- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப்போலத் திருமாலே நானுமுனைக்குப்பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது. நயாவலன் - வடசொல் தொடர்; நுயெ *** நீதிநெறியில் சலிப்பற்றவன். *** - ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன். சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வநம்பிக்யை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்; தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை. தானியம் - ***ம். தானியமும் என்ற உம்மை - இழிவுசிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளைகொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள தாந்யத்தையே கொள்ளைகொள்ளமாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத்தக்கது.
English Translation
The red-eyed-Lord Senkanmal of Tirukkottiyur engage the genteel, just and respectable Selvanambi in his service; he lives amidst devotees who sing Govinda’s names. Even Rakshasas will not steal their paddy.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்