- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘பாண்டவர்கள், துரியோதநாதியரோடு ஆடின பொய்ச்சூதில், தங்கள் மனைவியான த்ரௌபதியையுங்கூடத் தோற்றதனால், குருடன் மகனான துச்சாதஸகன் என்பானொரு முரட்டுப்பயல், பஹிஷ்டையாயிருக்க இவளை மயிரைப்பிடித்திழுந்துக் கொண்டுவந்து மஹாஸபையிலே நிறுத்திப் பரிபலப் பேச்சுக்களைப் பேசித் துகிலை உரித்தபோது, அவள் பட்ட வியஸகங்களையெல்லாம், கண்ணபிரான், துரியோதனாதியர் மனைவியர்க்கும் ஆகும்படி செய்தருளினான். அதாவது- அவர்கள் மங்கலநூல் இழந்தமை “சந்தமல்குழலாளலக் கண் நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப” என்றார் திருமங்கையாழ்வாரும். பாஞ்சாலி- பாஞ்சால தேசத்தாசன் மகள். நூற்றுவர்- தொகைக் குறிப்பு. பின்னடிகளின் கருத்து; - பிறப்பே பிடித்துப் பாட்டேயொழிய வேறொன்றறியாத வண்டுகள் இவைகளைப் பாடிக்கொண்டு தேன் பருகுகைக்குச் செழிப்பான சோலைகள் வேண்டும்; அவை நன்கு வளருகைக்கு நீர் வேண்டும்; அதுக்கீடாக ஊற்றுக்கள் அத்திருமலையில் உள்ளமை கூறியவாறு. தோண்டல்- தொழிலாகுபெயர். திருவனந்தாழ்வானே திருமலையாய்வந்து நிற்கையாலே “தொல்லை மாலிருஞ்சோலை” என்கிறது.
English Translation
The Lord bore in mind the travails that the Pandava Queen Panchali went through and in due course laid it on the wives of the wicked hundred brothers. His hill abode is the ancient Malirumsolai where humming bumble-bees sing Panns drinking nectar from groves sustained by eternal water springs.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்