- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானைக் காணவேணுமென்று தேடுகிறவர்களுக்கு அடையாளங்களைச் சொல்லிப் பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாட்டையுமே துமவர்கள், எம்பெருமானை காண்கைக்குத் தேட வேண்டாதே அவனோடு நித்யாநுபவம் பண்ணலாம்படி அவனுடைய திருவடிகளைச் சேரப் பெறுவார்கள் என்று- பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. தேடுகிறவர்களுடைய தன்மையையும், கண்டவர்களுடைய தன்மையையும் தாமே அடைந்து பேசினமையால் “கண்டசுவடுரைத்து” என்றென்க. புரை- உவமவுருபு. செந்நெல்தாள்கள் ஓங்கி நுனியிற் கதிர்வாங்கித் தழைத்திருக்கும் படிக்குக் குதிரை முகத்தை உவமை கூறியது எதற்குமென்க: “வரம்புற்றகதிர்ச் செந்நெல் தாள் சாய்ந்துத் தலைவணங்கும்” என்றது காண்க. திருவின் + போலி, திருவிற்பொலி.
English Translation
This decad of songs by bright Vedic seer Pattarbiran of Srivilliputtur where paddy grows tall and bends low like a horse, tells the clues for seeing the dark cloud-hued Lord. Devotees who recite it by heard will attain the feet of the Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்