- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று. “உடையார்ந்த வாடையன்” என்றவிடத்து “தாஸாமாவிசபூத் சௌரி: ஸ்மயமாந முகாம்புஜா; பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத்மந்மதமந்மத:” என்கிற ஸ்ரீபாகவத ச்லோகத்தை நம்பிள்ளை வெகு அழகாக வியாக்கியானித்தருளுகிறார். கண்டிகையான் என்றவிடத்து ஈடு:- “கூறையுடையழக மேலே யெழ வீசிப்போகா நிற்க, நடுவே வழிபறித்துக் கொள்ளும் திருக்கழுத்திலாபரணம் இவரைமடி பிடித்துகொண்டு போயக் கழுத்தளவு ஸௌந்தர்யத்திலே நிறுத்திற்று” என்பதாம். இந்த ஸ்ரீஸூக்தியின் சுவை ரஸிகர்களால் சுவைக்கத்தக்கதத்தனை.
English Translation
My Lord wears a necklace, waist belt and yellow robes, a splendid golden thread a golden crown and many ornaments. Those who serve the servants of his devotees are my masters through every life, just see!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்