- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார். “சிந்தியுங்கோள்!” என்று அடிக்கடி நான் சொல்லிக்கொண்டு வருகிற எம்பெருமானுடைய சீலத்தை நான் சொல்லுவது ஒருபுறமிருக்கட்டும்; தங்களையே கடவுளராக மதித்திருக்கின்ற இந்திரன் பிரமன் உருத்திரன் முதலானாருங்கூடத் தங்களுடைய செவ்வைக் கேட்டை விட்டு ருஜுப்ரக்ருதியுடனே அப்பெருமானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகின்றார்கள்; அன்னவர்களும் வந்து பணியலாம்படி அவன் தன்னை அமைத்துக்கொடுக்கின்றானென்றால் இது எப்படிப்பட்ட சீலமென்று பாருங்கள்; நானெடுத்துரைக்க வேண்டுவதோ இரு! என்கிறார். என்று+யான் என்றியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விதி. எம்அனோர்கள்-எம்மனையவர்கள்; எம்மைப்போன்றவர்கள் என்றபடி.
English Translation
When the great Indra himself, Brahma and Siva too, room about contemplating his radiant lotus feet, what can a person of my nature say about the grace of the Lord? So let it be.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்