- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதேயன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார். உலகில், வடிவழகிலோ செல்வத்திலோ சிறிது ஏற்றமுடைய ஒருவனைக் கண்டால் ‘அப்பா! உன்னைப்போன்ற தேஜஸ்வி ஒருவனில்லை; உன்னைப்போன்ற செல்வன் எங்குமில்லை’ என்று புகழ்வது உலக வியற்கையாக உள்ளது; அப்படி யல்லாமல் ‘எந்த வுலகத்திலும் எந்த வ்யக்தியிடத்திலும் இப்படிப்பட்ட தேஜஸு இல்லை’ என்று திண்ணமாய்ச சொல்லும்படியாகத் தேஜ : பூர்த்தியுள்ளது தேவரீர் பக்கலிலே யாகையாலே ஒப்புயர்வற்ற பரஞ்சோதியாயிருக்கின்றீர்; உலகங்களையெல்லாம் ஸ்ங்கல்ப ஏகதேசத்திலே ஸ்ருஷ்டித்து, அப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட லோகத்தினுடைய ஸ்வபாவம் தேவரீர்க்குத் தட்டாதபடி நிற்கிற தேஜோநிதியே! கோவிந்தனான நீர்மைக்கு எல்லை காணவொண்ணாபடி யிருக்கிற பரம ஸுல்பனே! எந்தக் குணந்தான் என்னாற் சொல்லாலாகும்? மேன்மைக்கு எல்லை கண்டாலும் நீர்மை தரை காணவொண்ணாமேயிரா நின்றதே! எதுவும் அநுபவித்துப்போமித்தனை யொழிய, பாவியேன் வாய் கொண்டுபேச நிலமாக இல்லையே! என்று தவிக்கிறார்.
உரை:2
English Translation
Effulgent Lord most high! You made the Universe! Another effulgent Lord as you, I do not see. So with nothing to compare you by, I fall back mute. O, Govinda my Lord!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்