விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை* 
    உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உணர்ந்து உணர்ந்து - உணர்வையே இயற்கையாகவுடையானாகி
இழிந்து அகன்று உயர்ந்து - (அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து
உரு வியந்த - ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற
இ நிலைமை - இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை
உணர்ந்து - கேள்வியாலே அறிந்து

விளக்க உரை

உயிர்காள், உணர்வையே இயற்கையாகவுடையதாய். அணு அளவினதாய்ப் பத்துத்திசைகளிலும் ஞானத்தால் நிறைந்ததாய், உடலைக்காட்டிலும் வேறுபட்டிருக்கின்ற இவ்வுயின் தன்மையினைக் கேள்விகளால் உணர்ந்து, பின் மனத்தால் உணர்ந்து, பின் யோகத்தால் உணர்ந்தாலும், இறைவனுடைய தன்மையினை உணர்தல் அரிதாம். ‘ஆயின், நாங்கள் அறியுமவகை யாங்ஙனம்?’ எனின், அரி அயன் அரன் என்னும் இவரைப் பற்றிக் கூறுகின்ற நூல்களைப் பன்முறையும் ஆராய, அவற்றைப் பன்முறையும் உரைக்க, உங்கள் மனத்தில் ஒன்று தோன்றும்; தோன்றிய அப்பொருளையே மனத்தால் பன்முறை நினைந்தும், நாவால் பன்முறை கூறியும் வணங்குங்கோள்.
 

English Translation

O People! Even if you raalise your nature as different from your body, -formless, sons length, breadth or height, -the Lord is not attained. Praise him who is spoken of as Brahma, Vishnu and Siva, he is the Lord dwelling in your heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்