- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாட்டார் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப்போகாதே மருவி வாழப்பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்யகதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனனமரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக்கூடிய பரிஹாரமொன்றுமில்லை; நீயே துணைநிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார். உள்ளமோ ஒன்றில் நில்லாது = ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம்புரியாநிற்க, அந்த ஊர்வசிதானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்குநீ நாயகனாகக் கடவை‘ என்ன; கையெடுத்துக்கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய்முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது: ‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன் தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறாள்; அவனே அவ்வார்த்தை சொல்லும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும், கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ; அதிலும் தோள்மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை; இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே தீக்கதுவின கொள்ளிக்கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்புபோலே துடியாநின்றேன் என்கிறார்.
English Translation
Alas, my heart does not stay at one place. I fear like ants caught between two burning ends of firewood. O clear one! O Lord of gods, O Radiant one who took the Earth! Through seen lives, you alone are our refuge!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்