விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
    தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
    ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
    நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சொல்லுவேன் – (அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன்
மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று - (உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி
ஆற்றங்கரை வாழ் மரம் போல் – ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி
அஞ்சுகின்றேன் – (வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன்.
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ – கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே!

விளக்க உரை

ஆற்றங்கரையிலுள்ள மரம் அந்த ஆற்றில் வெள்ளம் பெருகித் தன் வேரை அகழ்ந்திடத் தொடங்கினால் அவ்வபாயத்தைப் பரிஹாரித்துக் கொள்ளவாவது அத்தீங்குக்கு இடமின்றி விலகிநிற்கவாவது அத்தயரைத் தீர்ப்பதற்குப் பிறரைத் துணையாகக் கூப்பிடவாவது மாட்டாம்ல முறிந்து விழுந்து அழிவுக்குள்ளாகும். தமது நிலைமை எப்பொழுதும் அபாயத்துக்கு இடமாதல் பற்றியும் தமக்கு வரும் துன்பத்தைத் தாமே போக்கிக்கொள்ள மாட்டாமைபற்றியும் தமக்கு அந்த மரத்தை உவமை கூறினார். ஆற்றங்கரையின் மரம் எப்போதும் அபாயத்துக்கு இடமாகுமென்பதை “ஆற்றங்கரையின்மரமும் அரசறிய, வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே” என்றதனாலுமறிக. சேதநரான தமக்கு அசேதநமான மரத்தை உவமை கூறியதனால் தமக்கு உணடான உணர்வு அஞ்சுவதற்கே காரணமாவதன்றி அபாயத்தை அகற்றுதற்குக் காரணமாகா தென்றவாரும். ஆகவே அந்த மரத்தினது நிலைமையிற்காட்டிலும் தமது நிலைமைக்கு உள்ள தாழ்வைப் புலப்படுத்தியபடி. இதுபற்றியே ‘மரம்போன்றேன்’ என்னாமல் ‘மரம்போலஞ்சுகின்றேன்’ என்றார். மரத்துக்கு அபாயமுளதேனும் அச்சமில்லை, அசேதநமாதலால்; தமக்கோ அபாயத்தோடு அச்சமுமுண்டு, சைதந்யமுள்ளமையால்-என வேறுபாடு காண்க. எம்பெருமானுடைய நியமனத்தால் அவதாரித்து அவனுடைய திருவருளால் தத்துவஞானம் உதிக்கப் பெற்றுச் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனுக்கே தொண்டு பூண்டிருக்கின்ற ஆழ்வார் இங்ஙனம் அஞ்ச வேண்டுவதில்லை யாயினும், எம்பெருமான் உபேக்ஷித்தால் இங்கேயே கிடந்து வருத்தவும் அவன் ஆதாரித்தால் அங்கேபோய்ப் பேரின்பம் பெறவுமாம்படி பொதுவாகவுள்ள இந்நிலவுலகத்த உடல்வாழ்க்கையின் தன்மையிற் கருத்து ஊன்றியதனாலும், தமக்கு உண்டான ஞானம் விரைவில் வீடுபெறும்படி தூண்டுதலாலும், நஞ்சு இல்லாத நீர்ப்பாம்பும் பாம்பென்று மாத்திரத்தில் அச்சந்தருதல்போலக் கர்ம கார்யமல்லாத தமது பிறப்பும் பிறப்பென்ற மாத்திரத்தால் அச்சந்தருதலாலும், ஸரமாந்யரான மனிதர் அஞ்சுவது போலவே தாமும் அஞ்சுகின்றார். “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ, தஞ்சலறிவார்தொழில்” அன்றோ?

English Translation

O Lord! Nambi, manifest as fragrance, taste, touch and sound1 After all is said, I still have something to say; Like the proverbial free growing on the river bank, I contantly dread the thought that you may cast me into the dungeon of birth and worldly life again!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்