- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தேவர் மனிசர் முதலான ஒரு பதார்த்தமும் உலகிற்காணவொண்ணாதபடி அனைத்தையும் கபளீகாரித்த மஹாப் பிரளய வெள்ளம் பரந்த காலத்திலே “அருளார்திருச்சக்கரத்தால் அகல்விசும்பும் நிலனும், இருளார் வினைகெடச்செங்கோல் நடாவுதிர்” என்கிறபடியே ரக்ஷணபாரிஹரமான திருவாழியாழ்வானை யுடையனான எம்பெருமானது திருவயிற்றிலே. ஸகல பதார்த்தங்களும் அடங்கியிருந்து ரக்ஷைபெற்ற விஷயத்தை அந்தோ! நின்றும் காப்பாற்றியருளின மஹோபகாரகனான எம்பெருமான் நிற்க, இவனைப்பணிந்து போற்றுதல் ப்ராப்தமாயிருக்க அது செய்யாதே, விரோதிகளான தாமஸர்கள் கொண்டாடுகிற க்ஷுத்ர தெய்வங்களை ஏத்துகின்றீர்க்ளே நம்மோடுகூட அப்பெருமானது திருவயிற்றிலே கிடந்து ஸத்தைப்பெற்ற அத்தெய்வங்களை நீங்கள் ஏத்துதற்கு ஒரு காரணம் இருக்கவேணுமே; அத் தெய்வங்களிடத்தில் நீங்கள் என்ன உபகாரம் பெற்றீர்க்ள்? பேருதவிபுரிந்த பெருமானைவிட்டு ஒருதவியும் புரியாத ஏதிலோர்தெய்வத்தை ஏத்துதல் உங்களுடைய க்ருதஜ்ஞதைக்குச் சேராதே. “நன்றி மறப்பார்நாயினுங் கேடாவார்” என்றது உங்கட்குத் தொரியாதோ? நீங்கள் க்ருதஜ்ஞாக்ளாக இருக்கவேண்டில் உபயவிபூதி நாதனான எம்பெருமானையே ஏத்தப் பாருங்கள் என்றாராயிற்று.
English Translation
Devotees! You do not realise that the Lord of sharp discus lies in the deep ocean, with the Earth, gods, men and all else in his stomach for a very long time, instead you go and praise some unworthy god, -for what purpose, to what avail? Do not waste your good deeds, Praise the Universal Lord alone.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்