விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ப்பாடி – இடைச்சேரியிலே
உறி ஆர் – உறிகளிலே பொருந்தின
நறு வெண்ணெய் – மணம்மிக்க வெண்ணெயை
உண்டு – (களவுசெய்து) உட்கொண்டு
உகந்தான் காண் – ஸந்தோஷதித்தான் காண்

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் கண்ணபிரான் தயிர்வெண்ணெயுண்ட வரலாற்றிலே ஆழ்வார்களெல்லாரும் மிக ஈடுபாடுடையவராதலாலும் இவ்வாழ்வார்தாமும் அதிலே விசேஷமான ஈடுபாடுடையராதலாலும் கீழ்ப்பாட்டின் ப்ரமேயமே இப்பாட்டிலும் பொலிய நிற்கிறது. ஆறியாதர்க்கு ஆனாயனாகி ஸ்ரீ ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறிவில்லாதவொரு சன்மத்திலே பிறக்கவேணுமென்று நினைத்தால் இடக்கையும் வலக்கையுங்கூட அறியமாட்டாதபடி அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடைக்குலத்திலே தான் பிறக்க வேணுமோ? அறியாதர்க்கு-அறிவில்லாதவாக்ளுக்குள்ளே, ஆனாயனாகி-கடைகெட்ட இடையனாகி. (இங்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் சில ப்ரசேஷப உத்சேஷபங்கள் இருப்பதை ஏட்டுப்பிரதிகளைக் கொண்டு திருத்திக்கொள்க

English Translation

"Aho, Sister Going to Aippadi, he became a cow-grazer amid innocent folk, and enjoyed himself eating butter from the rope-shelf by stealth, see!". "Yes, but even the seven worlds and seven seas can not fill the golden stomach that ate butter from the rope-self, so tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்