விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
    சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*
    கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
    ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொலை கெழு – கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற
செம் முகத்த – சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த
களிறு ஒன்று – (குவலயாபீடமென்னும்) ஒரு யானையை
கொன்று – கொன்றொழித்தவனாயும்
கொடியோன் – கொடியவனான இராவணனுடைய

விளக்க உரை

எம்பெருமான் இங்ஙனே பலபல திருவவதாரங்கள் செய்தருளி யிருந்தாலும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரமும் ஸ்ரீராமாவதாரமும் நெஞ்சுக்கு இனியவை என்பது தோன்றுமாறு இந்த நிகமனப் பரசுரத்தில் அவ்விரண்டவதாரங்களை யெடுத்துப் பேசுகிறாரென்க. கம்ஸனது குவலயாபீட மதயானையைக் கொன்றொழித்தவனும் இலங்கை பாழாளாகப் படை பொருதவனுமான எம்பெருமானைக் குறித்துக் கலியன் திருவாய்மலர்ந்தருளிய இத்திரு மொழியைப் பாடித்திரிகின்ற தொண்டர்கள் பரமபதத்தைப் பெற்று அநுபவிப்பார்க்ள் என்று பயனுரைத்தாராயிற்று. (வேலைபுடைசூழ்) திருமங்கைநாட்டுக்குக் கடல் அணித்தாக இல்லாமையாலே ‘வேலை’ என்பதற்குக் கடல் என்று பொருள் கொள்ளாமல் கடல்போன்ற காவிரிநதி யென்று பொருள் கொள்ளலாமென்பர்சிலர்; அது வேண்டா; “வேலை மோதும் மதில்சூழ் திருக்கண்ணபுரம்” என்றிவடங்களுக்குக் கூறும் சமாதானம் இங்கு மொக்கும்.

English Translation

This garland of sweet tamil sangs! by well-laid out Mangai city;s king, Kalikanri sings of our Lord Tirumal who killed the deathly rutted elephant, and who entered the wicked king;s Lanka and burnt it to ashes with his flery arrows. Devotees who go about singing these songs will rule the world of celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்