விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்*  உலகுஏழினோடும் உடனே,* 
    மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற*  மலைஆறும் ஏழு கடலும்*
    பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்*  ஒருபால் ஒடுங்க வளர்சேர்,* 
    ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி*  அதுநம்மை ஆளும் அரசே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புர்தம் அமா – திருவடிகளிலே பொருந்தியுள்ள
சூழ்குளம்பின் – பரம்பியதிருக்குளம்பினுடைய
அகம் மண்டலத்தின் – உள் வலயத்தின்
ஒரு பால் – ஏகதேசத்திலே
ஒடுங்க – அடங்கும்படி
வளர் – வளரா நிற்பவனாய்

விளக்க உரை

வராஹநாயனாருடைய திருமேனிப் பெருமையை இதில் வருணிக்கிறார். அண்ட பித்தியிற் சார்ந்து கிடந்த பூமிப் பிராட்டியை அதனின்று ஒட்டுவிடுவித் தெடுக்கும்போது மேருமலை முதலிய பெருப் பெருத்த வஸ்துக்களெல்லாம் (வராஹமூர்த்தியின்) குளம்பில் ஒடுங்கிப் போம்படி மிகப் பெரிய வராஹத் திருவுருவெடுத்ததாகப் புராணங்கள் கூறும். பெரிய வடிவகொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான அத் திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த பூமியானது வராஹாவதார காலத்தில் எயிற்றின் ஏகதேசத்திலும் அடங்காதிருந்த விசித்திரம் என்கொல்! என்று வியந்துபேசிய “வராகத் தெயிற்றளவு போதாவாறென்கொலோ எந்தை, அடிக்களவு போந்தபடி” என்ற பொய்கையார் பாசுரமுங் காண்க. சந்திரன் ஸூரியன் முதலிய ஸகல பதார்த்தங்களும் திருவடிக்குளம்பின ஏகதேசத்திலே ஒடுங்கும்படியாக மிக வளர்ந்த வராஹநாயனார் நம்மை ஆளவல்ல பிரபு என்றராயிற்று.

English Translation

In the beginning the Lord came as a boar, and grew big. The spotless Moon, the bright sun, the gods and seven celestial worlds, the eight Quarters, the mount Meru and the other six mountains, the seven oceans, all fitted within the arch of his hoot. That Avatara is our protector and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்