- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நான் பகவத் விஷயத்தில் கைவைப்பதற்கு முன்னம் தாயானவள் என்னை ஒருவார்த்தையும் பொடிந்து சொல்லியறியாள்; அன்றில் பறவையின் குரல் முன்பு கேட்கப்படும்போது செவிக்கு மிக இனிதாயிருந்தது; அப்போது கடலோசைதானும் காது கொடுத்துக் கேட்கலாயிருந்தது; உடலும் பூரித்து வளைகள் நெருக்குண்டிருந்தன. இப்போது அது பவிக்கிற கஷ்டங்களில் ஒன்றும் முன்பு நான் அநுபவித்ததேயில்லை; பின்னை மணாளரான எம்பெருமான் திறத்திலே நலிவுபடும்படியாகவும் கடலோசைக்கு நோவுபடும்படியாகவும் கைவளைகள் கழலும்படியாகவும் பெற்றேன் என்கிறாள். (அன்னை முனிவதும்). ‘தாய் தகப்பன்மார் சுற்றத்தர் முதலானோர் இருக்கும்போது அவாக்ளைக் கொண்டு தனக்குற்ற நன்மைகளைத் தேடிக்கொள்ள வேண்டியது தகுதியாயிருக்க, இச் சிறு பெண்பிள்ளை எல்லாரையும் திரஸ்காரித்துவிட்டுத் தான்றோன்றியாகத் தானே (பகவத் விஷயத்தில்) ஒரு நாயகனைக் காதலித்துப் புறப்பட்டாள்!; இப்படியும் ஒரு அநியாயமுண்டோ?’ என்பது தாய் சீறிச்செல்லும் வார்த்தையாமென்க.
English Translation
Mother;s angry words, the Anril bird;s piercing call, the roaring of the sea, the slipping of bangles, all these began after we started getting interested in the games of our Lord, the husband of Dame Nappinnai, who wears a beautiful yellow cloth, has a swan-like gait and an adorable flower coiffure.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்