- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால் இங்கேபோதுங் கொலோ” என்று கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய வருகையைப் பிரார்த்தித்து மநோரதித்த பரகால நாயகிக்கு உருவெளிப்பாட்டாலே காட்சி தந்தருளுனான் எம்பெருமான்; ஆழியும் சார்ங்கமு மேந்திவந்து ஸேவை ஸாதித்தான்; அஸாதாரண லக்ஷணங்களைக் காணா நிற்கச் செய்தேயும்; இன்னாரென்று அறுதியிடக்கூடாமலிருக்கிறதாயிற்று அத்தலையில் வைலக்ஷண்யம். பெருமையைப் பார்க்குமிடத்தில் தேவனென்னலாயிருந்தது; எளிமையைப் பார்க்குமிடத்தில் மனிதாரிலே ஒருவனென்னலாயிருந்தது; ஆகவே ‘இன்னாரென்றறியேன்’ என்கிறாள். - வியப்புக்குறிப்பிடைச் சொல். ஆடிகள் - ஸ்வாமி.
English Translation
I know not his looks. Lord who wields a discus. Conchand sarnga bow in his big hands –I know not his looks.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்