- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸீதாபிராட்டியின் விவாஹத்திற்கு சுல்கமாக அமைக்கப்பட்டிருந்த வில்லையிறுத்து அவளைக் கைப்பிடித்து இன்பம் நுகர்ந்தமை முன்னடிகளிற் கூறப்பட்டது. (நன்னேரிழை யோடுடனாய) இது வில்லுக்கு விசேஷணமாகவுள்ளது. வில் பிறாட்டியோடு கூடப்பிறந்ததாக இப்பாட்ழல் அருளிச் செய்யப்படுகிறது என் சொல்? என்று பலரும் சங்கிப்பர்கள், அந்த வில் ஸீதையோடு கூடப் பிறந்ததாக இங்குச் சொல்லப்படுவதன்று. இங்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல் காண்மின், - “இந்த வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்தபடியாலே ‘உடனாய’ என்கிறது“ என்று. சுல்கபந்தத்தினால் பிராட்டியை விட்டுப் பிரியாதிருந்த வில் என்றவாறு. உடனாய என்றதற்கு மேல் பல பாடபேதங்களுள், “அல்லன்ன வில்லேயதனை“ என்றும், “வல்லன்ன வில்லேயதனை“ என்றும். “வில்லென்ன வல்லேயதனை“ என்றும். (‘அல் என்று இருளாய், இருண்ட வில் என்றுமாம்’ என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்) ‘வல்லவன்ன’ என்ற பாடத்தில் (கடினமான) என்று பொருள்) இளங்கொற்றவனாய் என்றதனால், பன்னிரண்டு வருஷகாலம் திருவயோத்திபில் இளங்கோவாயிருந்து கொண்டு பிராட்டியோடு போகரஸம் அநுபவித்தமை நினைக்கப்படுகிறது. அதற்கு மேல் கைகேயி வரம் வேண்டக் கானகம் சென்று கடலடைத்து இராவணனைக் கொன்ற வரலாறு மூன்றாமடியில் அநுஸந்திக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வீரப்பாடுடையவன் கிடீர் தன் பெருமையை யெல்லா மொளித்து எளிமைமையைக் காட்டாநின்றா னென்கிறார்.
English Translation
Breaking a strong bow, the Lord enjoyed the sweet union of Dame sita of soft coiffure and beautiful jewels, then was proclaimed crown-prince. He crossed the ocean, routed the city of Lanka and cut the heads and arms of the Rakshasa king Ravana. An look now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்