- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வியாக்கியானத்தில், ‘பெற்றமாளிகை’ என்றும் ‘பெற்றமாளியை’ என்றும் பாடபேதங் கொள்ளப்பட்டது. முந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பெருமையாய், பெருமைபொருந்திய மாளிகையுடைத்தான திருப்பேர்நகரிலுறையு மெம்பெருமானை என்றதாகிறது. பிந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பசுக்களுக்குப் பெயராய், கோபாலனாகையாலே பசுக்களை ஆள்பவனும் திருப்பேர் நகரிலுள்ளவனுமான பெருமானை என்றதாகிறது. கற்ற நூல்கலிகன்றி - ஆழ்வார் எம்பெருமானால் மயர்வறமதிநல மருளப்பெற்றவரேயன்றி ஒருவரிடத்திலே சாஸ்த்ராப்யாஸம் செய்தவரல்லரே, அப்படியிருக்க ‘கற்றநூல்கலிகன்றி’ என்றது எங்ஙனே; என்கிற கங்கைக்கு ஸமாதாநமாகப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்வது காண்மின், - “திருமந்த்ரம் கற்றவிடத்தலே கற்குமித்தனையிறே அல்லாதவையும்“ என்று ஸகலசாஸ்த்ரங்களும் திருமந்திரத்தில் அடங்கினவையாதலால் அத்திருமந்திரத்தை எம்பெரமான் பக்கதில் கற்றபோதே ஸகலசாஸ்த்ரங்களும் கற்கப்பட்டனவாதலால் இங்ஙனஞ் சொல்லக்குறையில்லை யென்க.
English Translation
This is a garland of songs in praise for the bridegroom of Tirupper, the Lord who grazed cows, sung by the well-learned Kalikanri. Those who master it will have no despair, they shall rule the skies as well
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்