- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தேனுகன் ஆவி போய்உக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்அதர் நுழைந்து,*
மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
காணொளி
பதவுரை
மரதகம் சாயல் - மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய்
வானகம் - ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான
சோலை - சோலைகளிலிருக்கிற
மா மணிக்கல் அதர் - நீலப்பாறை வழிகளில் (புகுந்து)
நிறைந்து - நிறைய இருந்து
விளக்க உரை
மரதகப் பச்சையின் நிறங்கொண்டு ஆகாசப் பரப்புடைய ஓங்கி யிருந்துள்ள சேலையினுள்ளில் நீலப்பாளை வழியே போய்ப்புக்கு மான்கள் தேனைப்பருகா நின்றுள்ளதாம் இத்திருமலை. அதர் - வழி.
English Translation
O Frail Heart! The ocean-hued Lord came then as krishna, threw the Asura Dhenuka against a Palm tree, killin him instantly, Long ago he decided to reside in Malirumsolai, where deer frolic in the blue-gem mountain paths amid emerald-green forests. Come, let us offer worship there
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்