- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தோழீ! இவரைப் பார்த்தால் முன்பு கம்ஸன் தனது அரண்மனை வாசலில் மதமூட்டி நிறுத்திவைத்த குவலயாபீடமென்னும் யானையை வென்றொழித்த வேந்தர் போலே யிருக்கின்றார்; அவர்தானோ இவர்! ஆபரணங்களை யணிந்திருக்கும் பெண்களுடைய நெஞ்சை ஆச்ரயமாகவுடைய திருமால் தானோ இவர்! இன்னாரென்று நிச்கயிக்கக் கூடவில்லையே. தாமரைபோன்ற திருக்கண்களிருக்குமழகை என் சொல்வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தினின்று தள்ளித்திருத்தாளாலுதைத்த தனிவீரராகவே இவர் தோற்றுகின்றார்; ‘ந நமேயம்து கஸ்யசித்’ (ஒருவற்கும் தலைவணங்க மாட்டேன்) என்ற இராவணனைப் போன்ற வணங்கா முடிகளும் இவரைக் கண்டவாறே பரவசமாக வணங்கும்படியன்றோ இவருடைய அதிசயமிருப்பது; ஒரு அஞ்சன மலைதான் இங்ஙனே வடிவெடுத்து நிற்கிறதோ! என்னலாம்படி யிருக்கின்றார்காண். வாய்கொண்டு சொல்லவொண்ணாத அழகு படைத்த இவர் திறத்திலே நான் என்னவென்று சொல்லுவேன்! என்கிறாள். “மருப்பொசித்த வேந்தர் கொல்” என்றும் “ஏந்திழையார் மனத்தைத் தஞ்சுடையாளர் கொல்” என்றுமு் இரண்டு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாகவே விவக்ஷிதம்; யானையின் கொம்பை முறித்து அந்த வீரச்செயலைக் காட்டிப் பெண்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட பெருமானோ இவர்! என்றவாறு. ‘ஏந்திழையார்’ என்று பெண்களுக்கு நிரூபகநாமம், இழை – ஆபரணம்.
English Translation
Was he the elephant Vtusk-breaker, the prince who reigns in the hearts of jewelled maidens? Was he the youthful bull that stamped on Kamsa's chest? I do not know. Oh, his lotus eyes! His frame was a dark mountain that instantly commanded obeisance's. Aho, was he beautiful.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்