- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மூவுலகங்களும் பிரளயவெள்ளத்தில் மூழ்கித் துன்பம் மிகுந்தகாலத்தில், லக்ஷம் யோஜனை நீளமும் பதினாயிரம் யோஜனை பருமனும் ஒற்றைக்கொம்பும் வாய்ந்த பெரு மீனாகத் திருவவதரித்துத் தன் ஒரு 1.செலுவினகத்தே கடல்வெள்ளம் முழுவதும் ஒடுங்கும் படியிருந்த பெருமான் வாழுமிடம் திருக்கண்ணங்குடி. மீதுகொண்டு = எம்பெருமானுடைய நியமனப்படி பிரளயப் பெருநீரில் ஒரு பெரிய ஓடம்வர, அந்தப்படகில் ஸப்தரிஷிகளும் எல்லா ஓஷதிகளும் ஸமஸ்கபிராணிகளும் ஏறியிருக்குமளவில் ஒரு பெருங்காற்று அடிக்க அதனால் ஓடம் பெருநீரில் அலைய, அப்போது அதனை மத்ஸ்ய ரூபியான பெருமான் தனது ஒற்றைக்கொம்பிலே வஹித்து ரக்ஷித்ததாக வரலாறு உள்ளதாதலால் “மீதுகொண்டு உகளும் மீனுருவாகி” எனப்பட்டது. விரிபுனல்வரி அகட்டொளித்தோன் = “முடங்கு தெண்டிரைய பௌவம் முற்றுமோர் செலுவுட்சென்று, மடங்கிய துணரகில்லார் மயர்ந்தனர் நேடியன்னோர், ஒடுங்கினரேத்தி நின்றா ருயர்வொப்பில்லாத மேலோன், தடங்கொள் சேலுருவின்மாண்பு யாவரோ சாற்று நீரரா?” என்ற ஸ்ரீ பாகவதத்தைக்காண்க. கடல்நீர்முழுவதையும் ஒரு செலுவினுள்ளடக்கிக் கடலை வெறுந்தரையாக்கி அதிலே சிலகாலம் விளையாடுவதும், மறுபடியும் செலுவில் நின்று கடல்நீரை வெளிப்படுத்திக் கடலிலே சிலகாலம் விளையாடுவதுமாய் நிகழ்ந்த லீலை உணரத் தக்கது. செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும்படும். அன்றி செலுவாவது மீன்செட்டையெனப்படும் மீன்சிறகுமாம். பட்டர் ‘பாதா’ என்னும் வடசொல் வாதையெனத்திரிந்தது.
English Translation
During the great deluge, the Earth, the sky, the mountains, -all become submerged. The Lord then came as a fish and bore everything on his back, merrily taking the ocean on his belly, His standing form adorns the temple of Tirukkannangudi where the evening breeze blows gently over fresh punnai, jasmine and Mullai flowers and wafts their cool fragrance in every direction.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்