- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தாம் பெற்ற பேற்றை வாயாரச்சொல்லி மகிழ்கிறார். “என்மனத்தே வந்து நீ புகுந்தபின்னை எந்தாய் போயறியாய்” என்று ஒருவாக்கியமாகவே சொல்லிவிடலாமே; முதலில் “வந்தாய்” என்றொன்று தனிப்பட வேண்டாவே என்னலாமாயினும், தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு “எந்தாய்! என்மனத்தே வந்தாய் – நீ வந்து புகுந்தபின்னைப் போயறியாய்” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டிநீட்டி யருளிச்செய்கின்றார். வந்தாய் – பரமபதம் திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்; என்மனத்தே வந்து நீ புகுந்து பின்னை = வந்த விடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்களிற் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தபின்பு, போயறியாய் = ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக வாழ்வதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டுக் கிடப்பானேன்? என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கிப்போக நினையாமல் ‘இதனின் சிறந்தஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருக்கின்றாய் – என்றும் விரித்துரைக்கலாம். இதுவே அமையாதோ? – ஒருவனுக்கு இதற்கு மேற்படவும் ஒருபேறு உண்டோ? என்றவாறு. சௌரிப்பெருமானை அநுபவித்துவருகிற ஆழ்வாருடைய திருவுள்ளம் திருக்குடந்தை ஆராவமுதன் பக்கல் சென்றுசேர, ஆராவமுதப் பெருமாளே! நீர் உம்முடைய பேறாக என்னெஞ்சிலே வந்துபுகுந்தாலும் பாவியேன் மறந்தொழியலாமே; அப்படி மறந்தொழிகையின்றியே “எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே” என்றாப்போலே நன்றி பாராட்டப் பெற்றேனே!, நீர்வந்து புகுந்தபேற்றுக்கு மேற்பட்ட பேறன்றோ இது! என்றவாறு.
English Translation
My Lord! You came and entered my heart, now you do not know how to leave! is this not my great fortune? O Lord reclining with pleasure in Tirukkudandai, surrounded by fertile graves! I have the grace of never forgetting you!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்