- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்துஏத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
காணொளி
பதவுரை
விளங்கு - (திருமேனியில்) விளங்குகின்ற
புரி நூலன் - யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பலரும் - எல்லாரும்
பாதம் - திருவடிகளை
பரவி பணிந்து ஏத்தி - ஆச்ரயித்து வணங்கித் துதித்து
விளக்க உரை
“கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.
English Translation
O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram,-He is first-cause Lord of the Vedas, he wears the Vedic thread, the world praises his feet, offering worship, filled with love, -come back and blow over me the pollen from his Tulasi wreath.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்