- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருக்கண்ணமங்கையெம்பெருமான் எப்படிப்பட்டவன்? ;- வேறு பகலற்ற அடியேன் போல்வார் திறத்திலே நிர்ஹேதுகமாக க்ருபைபண்ணவல்ல ஸ்வாமி; எங்களைப் போலன்றியே ஈச்வராபிமானம் கொண்டாடி யிருக்கிற ருத்ரனைத் தன் திருமேனியினொருபுறத்திலே வைத்து அதுதன்னைத் தன்பேறாக நினைத்து உகந்திருக்கும்படியான சீல குணத்தாற் சிறந்தவன்; இந்த சீல குணந்தான் ஏதோவொரு காலத்தளவி லன்றிக்கே எப்போதும் இதுவே இயல்வாயிருப்பவன்; குளிர்ந்த பூர்ண சந்திரனுடைய ஸஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசத்துக்கும் ஸூர்யனுக்கும் நியாமகன்; வடதிருவேங்கடமலையி னுச்சியை இருப்பிடமாகவுடையவன்; நம்மால் விரும்பி வணங்கப்படுமவன்; போகமனுவிப்பதற்குறுப்பான இராப் பொழுதென்ன, அதற்குப் பொருளீட்டுதற்குறுப்பான பகற் பொழுதென்ன இவ்விரண்டுக்கும் நிர்வாஹகன்; இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.
English Translation
The Lord benevolent to us, the Lord who bears fragrant coiffured Parvati's spouse on his person, the Lord of the sky bearing the radiant twin orbs the sun and the Moon, the Lord on the Northern Venkatam peak, the desirable night and day, - I sought and found him in Kannamangai.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்