- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
காணொளி
பதவுரை
அறம் முதல்வனவனை - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,
அணி ஆலியர் கோன் - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்
மருவார் - பகைவருடைய
கறை - ரக்தக்கறையையுடைத்தான
நெடுவேல் - நீண்டவேற்படையை
விளக்க உரை
கறை நெடுவேல் – பகைவர்களைக் கொன்று ஏறின ரத்தக்கறையோடு கூடின வேற்படை. “தானுகந்த வூரெல்லாம் தன்தாள்பாடி” என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்கா யிருக்குமிவர்க்கு வேற்படையில் ரத்தக்கறை கழுவுவதற்கு அவகாசமில்லையாம்.
English Translation
This garland of songs by stained-spear-wielding Tiruvali King Kalikanri is on the first-cause Lord residing in Southern Alundur armid Subrahmanya like beautiful people. Those who master it will rule the whole sky-world.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்