விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரி உரு ஆய் - நரஸிம்ஹரூபியாய்
முந்தி சென்று -முந்துற வெளிப்பட்டு
இரணியன் முரணை - இரணியாசுரனுடைய வலியை
அழித்த - பாழ்படுத்தின
முதல்வற்கு அல்லால் - ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது

விளக்க உரை

தமக்கு பாகவத பக்தி மிக்கிருக்கக் காண்கையாலே அது காரணமாகப் பகவத்பக்தி குறையற்றிருக்கு மென்கிறாரிதில். ப்ரஹ்லாதாழ்வானைக் காத்தருளவேண்டி நரசிங்கமூர்த்தியாய்த் தூணில் தோன்றி ஹிரண்யாஸுரனுடைய மிடுக்கை யொழித்த முழுமுதற்கடவுளான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதனாயிருப்பே னத்தனையன்றி இப்படியிருக்ககில்லாத ஜைநர் பௌத்தர் முதலானாருடைய திரளிலே சேரக்கடவேனல்லேன் என்றார் முன்னடிகளில். இங்ஙனே உம்மால் தி்ண்ணிதாகச் சொல்லக்கூடுமோ? எது கொண்டு இங்ஙனே நீர் சொல்லுகிறீர்? என்று கேட்பார்க்கு உத்தரமாகப் பின்னடிகளருளிச் செய்கிறார்;- பரமபோக்கியமான திருச்சேறையிலெழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப்பெருமாளுடைய திருவடிகளைத் தினந்தோறும் சிந்திக்கின்ற பாகவதர்களை நினைத்த மாத்திரத்தில் என்னுள்ளமானது தேனூறித் தித்திக்கின்றதே, இஃது ஒன்றே போராதோ? ஜைந பௌத்தாதிகளின் திரளிலே புகுதற்குரிய விதி எனக்கு இருக்குமானால் இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ப்ராவண்யம் எனக்கு உண்டாகக்கூடுமோ? பாக்ய விசேஷத்தால் இஃது உண்டாகக் காண்கையினால் முன்னடிகளிற் சொன்னபொருள் கல்வெட்டுக் காண்மின் என்கை.

English Translation

I do not esteem those who do not worship the Lord who came as a man-lion and destroyed the mighty Hiranya. The Lord resides amid fragrant Sandal groves in cool Tiruccherai. For those who worship him, my heart flows like ever-sweet honey.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்